Friday, November 28, 2014

மகாபாரதக் காலத்தில் மத்திய அமைச்சர்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி 21ஆம் நூற்றாண் டுக்கானது அல்ல! அது வேத காலத்துக்குப் பொருத்த மான கட்சிதான் - ஆட்சிதான்.

பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடி சிவபெருமானால் கழுத்து வெட்டப்பட்ட விநாயகருக்கு யானைத் தலையை வெட்டிப் பொருத்தியது - அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என்றும், கர்ணன் குந்தியின் கருப்பையில் தரிக்காமல் காது வழியாகக்  பிறந்தான் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த இதிகாசம் எழுதப்பட்ட காலத்தில் மரபணு அறிவியல் பற்றி அறியப்பட்டுள்ளது என்று ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில் ஒரு பிரதமர் கூறுகிறார் என்றால், இந்தப் பரிதாபத்தை என்னவென்று சொல்லுவது!

பிரதமரின் இந்தக் கூற்றைக் கேட்டு தொடக்கப் பள்ளி மாணவன்கூட கைகொட்டி கெக்கலிப்பான். மோடி தனிப்பட்ட முறையில் இந்து மதத்தின்மீது தீரா வெறி கொண்டவராக இருக்கலாம்.

பிரதமர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய நிலையில் மூடத்தனங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறலாமா? பிரதமரின் மீதுள்ள மரியாதை வேறொரு மூடத்தனமான சுவாசத்தின் பக்கம் தள்ள இடம் கொடுத்து விடக் கூடாது அல்லவா?

15 கோடி கி.மீ., தூரத்தில் சூரியன் இருக்கும்போதே அதன் வெப்பத்தால் மண்ணில் மனிதன் பாதிக்கப் படுகிறான். அப்படி இருக்கும்போது சூரியனோடு சேர்ந்து ஒரு பெண் பிள்ளை பெற்றாள் என்று நம்புவது, சொல்லுவது - அடி மட்டமான மூடத்தனம் அல்லவா?

பிரதமர் இப்படி என்றால் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஸ்மிருதிராணி, பிரதமரைத் தோற்கடிக்கும் வகையில் மூடத்தனத்தில் முதல் பரிசைத் தட்டிச் செல்லப் பார்க்கிறார்.

ஜோதிடரிடம் கையை நீட்டிக் கொண்டு அலை கிறார். குடியரசுத் தலைவராக ஆவதற்குக்கூட அம்மை யாருக்கு யோகம் இருக்கிறதாம். இப்பொழுது அவர்மீது சனியனின் பார்வை உள்ளதாம். இதை மாற்றுவதற்கு வீட்டிலேயே யாகம் நடத்தியுள்ளார். இப்பொழுது குடியிருக்கும் அரசு வீடு இராசியில் லாததாம்; அதனால் தான் பல சர்ச்சைகளில் இவர் சிக்கிக் கொள்வதால் வேறு ஒரு வீட்டிற்குச் செல்ல இருக்கிறாராம். இவர்கள் எல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத் திற்கு சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் 51a(h) என்ற பிரிவு என்ன கூறுகிறது? மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில், பிரதமரும், அமைச்சர்களும் விஞ்ஞானத்துக்கு மாறான அஞ்ஞான இருட்டில் உழலுபவர்களாக இருக்கலாமா?

அதுவும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் (கல்வித்துறை) இப்படியொரு மூடநம்பிக்கைவாதியாக இருந்தால், பாடத் திட்டங்கள் எல்லாம் எந்தத் திசையில் அமையும் என்பது முக்கியமான கேள்வியாகும்.

முன்பு பிஜேபி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி பல்கலைக் கழகங்களில் வேத கணிதம் என்றும், கருமாதி மந்திரம் என்றும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் என்பதும் இந்த நேரத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.

வரலாற்றுத் துறைக்கு தலைவராக  ஒய்.எஸ். ராவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் மகாபாரத கால ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதுவரை எழுதிய உருப்படியான வரலாற்று நூல் எதுவும் இல்லை என்று, புகழ் பெற்ற ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளிலும் பிற்போக்குத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பிஜேபி ஆட்சி இந்தப் போக்கில் தொடர்ந்தால் நாடு 21ஆம் நூற்றாண்டில் பயணிப்ப தற்குப் பதிலாக மகாபாரத காலத்திற்குத் தான் செல்ல நேரிடும்.

மக்கள் மத்தியில் இந்த நிலையை பிரச்சாரத்தின் மூலம் விழிப்பை ஏற்படுத்தித்தான் இவர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பகுத்தறிவுப் பணியை முன்பைவிட அதிகமாகவே செய்யும். இடதுசாரிகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இந்தத் திசையில் பணி ஆற்றுவதில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டமிது.

தேவே கவுடா பிரதமராக இருந்தபோது நாமக்கல் சோதிடரைப் பார்க்க ஒவ்வொரு மாதமும் வருவார்; கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா சோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடந்தார் - ஒரு கோயிலில் படுக்கையாகப் போடப்பட்டு இருந்த கல்லில் போய் முட்டிக் கொண் டார். அதனால் ஏற்பட்ட பலன் என்ன? விளக்கெண் ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைக்க வில்லையே!

மோடிகளும், சீதை வேடம் போட்ட ஸ்மிருதி இராணிகளும் சிந்திக்க மாட்டார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முன்னவர்களுக்கு ஏற்பட்ட கெதிதான் இவர்களுக்கும் என்பது மட்டும் உறுதியான உண்மையாகும்.

Read: http://viduthalai.in/e-paper/91918.html#ixzz3KKvMvoTz

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...