Saturday, June 7, 2014

சென்னையில் இரவு நேர பேருந்துகள் குறைப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு


சென்னை, ஜூன் 6-சென் னையில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்து களின் எண்ணிக்கையை மாநகர போக்குவரத்துக் கழகம் திடீரென குறைத் துள்ளதால், இரவு நேரங் களில் பேருந்துகள் கிடைக் காமல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

26 இடங்களில் பணிமனைகள்

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார் பில், தினமும் 3,452 பேருந் துகள், 100 ஏசி பேருந்துகள் மற்றும் 100 சிற்றூந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கான பணி மனை, தியாகராயர்நகர், மந்தைவெளி, குரோம் பேட்டை, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட 26 இடங்களில் உள்ளன.

சென்னை நகரில் இரவு நேரங்களில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக ஒவ் வொரு பணிமனையில் இருந்தும் 5 பேருந்துகள் வீதம் மொத்தம் 125 பேருந் துகள் இரவு நேர பேருந்து களாக இயக்கப்பட்டு வந் தன. இதனால், ஏராளமா னோர் பயனடைந்து வந்த னர்.

இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது 125 இரவு நேர பேருந்துகளை 80ஆக குறைந்துள்ளது. இதனால், இரவு 10 மணிக்கு மேல் தனி யார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவோர் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மயிலாப்பூர், திருவான்மியூர், மேடவாக் கம், கிழக்கு தாம்பரம், ஆவடி, திருவெற்றியூர், போரூர், எண்ணூர், வேளச் சேரி, தியாகராயர்நகர், எழும்பூர் உள்ளிட்ட இடங் களுக்கு 3 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற வீதத்தத் தில் தான் இரவு நேர பேருந் துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆட்டோக்களில் செல்லவேண்டியுள்ளது

மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே இந்த பேருந்துகள் இயக்கப் படுகின்றன. உட்புற பகுதி களுக்கு இயக்கப்படுவ தில்லை. இதனால், பயணி கள் அனைவரும் ஆட்டோக் களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இரவு நேரங் களில் சென்னையின் உட்புற பகுதிகளுக்கு சிற்றூந்து களை இயக்க வேண்டும். அதேபோல் இரவு நேர பேருந்துகளின் எண்ணிக் கயை 250 ஆக உயர்த்த வேண்டும், என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து துறை அதி காரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் 125 இரவு நேர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சில இடங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படு கிறது.

மேலும், சில பணி மனைகளில் பேருந்து களுக்கு எப்சி பணி நடை பெற்று வருவதால், இரவு நேர பேருந்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும். இரவு நேரத்தில் சிற்றூந் துகள் இயக்குவது குறித்து தற்போது வரை எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதுப்பற்றி உயர் அதிகாரி களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும், என்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...