Thursday, June 5, 2014

தினமணிக் குடுமி!

நம் நாட்டு இளைஞர்களிடம் தற்போது ஒரு விஷயம் பரவலாகக் காணப்படுகிறது.

அது பிற நாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசை மேதைகள், நடிகர்கள் போன்றவர்களின் படம் அல்லது பெயர் தாங்கிய டி-ஷர்ட்டை பெருமை யாக அணிந்துகொள்ளும் போக்கு.

குறிப்பாக சேகுவாரா எனப்படும் அர்ஜென்டினா நாட்டில் பிறந்த மார்க்சிய புரட்சியாளர். இவர் பெயர் கூட பலருக்குச் சரியாகத் தெரியாது.

ஆனால், இவரைப் போன்ற அயல் நாடுகளில் போற்றப்படும் சில தலைவர்களின் படங்களும், பெயர்களும் இங்கு பனியன்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றை நமது இளைஞர்கள் விரும்பி வாங்கி அணி கின்றனர்.

நம் நாட்டு இளைஞர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத் துரை, வாஞ்சிநாதன், பூலித்தேவன், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், வீரசாவார்க்கர், பகத்சிங் போன்ற எண்ணி லடங்கா சுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம்பற்றி ஒன்றும் தெரிய வில்லையா? அல்லது இதிலும் வெளிநாட்டு மோகமா? என்று எதையோ எழுத வந்த தினமணி சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் ஒரு வேலையைச் செய்தி ருக்கிறது.

(தினமணி, 2.6.2014, நமது பெருமை அறிவோம் எனும் கட் டுரை, பக்கம் 8).

மற்றவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்; வீரர்களின் பட்டியலில் வீரசாவார்க்கர் எங்கு வந்தார்?

வீர வாஞ்சி எங்கு வந்து குதித்தார்? ஒருக்கால் பெயரில் வீர என்ற சொல் ஒட்டியிருப் பதால் வீரர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டாரோ!

அந்தமான் சிறையிலி ருந்து இந்த வீர சாவார்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் எத்தனை! எத்தனை!!
இன்றைக்கு இந்துத்துவா, இந்துத்துவா என்று கூச்சல் போடுகிறார்கள் அல்லவா, அதன் உற்பத்தி மூளை சாவார்க்கர்தானே!

இஸ்லாமியராகிய நீங்கள் எங்களை (இந் துக்களை) கொன்றீர்கள்.

எங்களின் வழிபாட்டுச் சிலைகளை உடைத்தீர்கள். எங்கள் பெண்களைக் கடத்திச் சென்றீர்கள். உங் களின் அநீதியான நடை முறைகள் எங்களுக்கு வலி யைத் தந்துள்ளது.

நாங்கள் இப்படியே எப்பொழுதும் வாழ முடியாது. எனவே, நாங்கள் சொல்கிறோம்.

இந்துஸ்தான் இந்துக்களின் தாய் நாடு.

எனவே, இந் துக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பது இந் துக்களின் கடமையாகும். இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா அல்ல - அவர்கள் துருக்கியையும், அரேபியாவையும் தங்கள் நாடாகக் கருதுகின்றனர். அவர்கள் இதயம் இந்தியாவில் இல்லை என்று சொன்னவர்தான் தினமணி தூக்கிப் பிடிக்கும் சாவார்க்கர்.

இப்பொழுது புரி கிறதா?  சும்மா ஆடுமா தினமணிக் குடுமி?

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...