Tuesday, March 18, 2014

ஹோலி

இந்து மதக் கடவுள் களுள் கிருஷ்ணன் என்னும் கடவுள் பலே கில்லாடி! 

பெண் ணென்று அடையாளம் தெரிந்து விட்டால் போதும் - அவ்வளவுதான் - காமக் குரூரன்! அவாள் பாஷையில் லீலை என்று சொல்லி விஷ யத்தை வேறு ஜிகினா ஒட்டித் திசைமாற்றி விடுவார்கள்.

பதினாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கூடிக் குலாவினான் என்று சொல்லுவதற்கு வெட்கப் படாமல், அதனையே பெரிய சாதனை போல பக்திக்கான பெரிய நிலை என்பது போல உருட்டல் புரட்டல் செய்து வைத் துள்ள தந்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆசையை அறு உள்ளிட்ட பல ஒழுக்க ரீதியான வழி முறைகளை கவுதமப் புத்தர் மக்களிடம் பரப்பி, ஆபாச வேத மத மான இந்து மதத்தின் ஆணி வேர்களை சுட்டுப் பொசுக்கினார்.

இதற்கு மாறாக, நேர் எதிர்ப்பாக - எப்படி இப் பொழுது சினிமாவைக் காட்டி, வசீகரங்களைக் காட்டி மக்களை, இளை ஞர்களை மயக்குகிறார் களோ, அரசியலில் துண் டில் போட இந்த வலையை விரிக்கிறார் களே, அதுபோலவே கவுதமப் புத்தரின் ஒழுக்கப் பத்தியங்களைப் புறந் தள்ளுவதற்கு காம இச்சைக் கதாநாயகனாக கிருஷ்ணன் என்ற கட வுளைக் கற்பித்து மக்களி டத்திலே உலாவ விட்டார் கள் என்பதுதான் உண்மை.

அந்தக் கிருஷ்ணன் பிறந்த  ஒரு ஊரைக் கற்பித்துள்ளனர். உ.பி. மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் தான் கில்லாடிக் கிருஷ்ணன் கடவுளின் ஊராம். வித வைப் பெண்கள் அதிகம் இருப்பது இந்த ஊரில் தான்! (கடவுளின் கிருபையோ!)

அங்கு ஒரு வேடிக்கை வினோதம்! ஹோலிப் பண்டிகை என்னும் பெய ரில் - இந்து மதத்தில் விதவைப் பெண்கள் என் றால் பூ வைக்கக் கூடாது; பொட்டு வைக்கக் கூடாது, நல்ல விதமாக துணி மணிகளை உடுத்தவும் கூடாது, சுபகாரியங் களில் கலந்து கொள்ள வும் கூடாது. அப்படித் தானே?

ஹோலிப் பண்டிகை என்பது முட்டாள்தன மானது என்றாலும் அதில் ஒரு திருப்பம் என்ன தெரியுமா?

விதவைப் பெண்கள் ஒருவர்மீது ஒருவர் பூக் களையும் வண்ணப் பொடிகளையும் தூவி மகிழ்ந்து இவ்வாண்டு ஹோலியைக் கொண் டாடினார்களாம்.

மதப் பண்டிகை என்றாலும், விதவைப் பெண்கள் இதன்மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டும். விதை ஏதோ ஒரு வகை யில் ஊன்றப்பட்டதாகவே கருத வேண்டும்.

அடுத்தடுத்து விளைவுகளைப் பார்ப்போம்!

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...