Friday, September 27, 2013

அ.தி.மு.க. ஆட்சியில் சமூக (அ)நீதி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் சலுகை வழங்க முடியாதாம்
சென்னை, செப்.26- ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் இடஒதுக்கீடு முறையில் சலுகை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரை ஞர் பழனிமுத்து, கருப் பையா உட்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித் துள்ள உத்தரவின் அடிப் படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர் வினை நடத்துகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படாமல் தேர்வுகள் நடத்தப் படுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் ஆந்திரா, ஒரிசா உள் ளிட்ட பிற மாநிலங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படு கிறது. எனவே தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி உத்தர விட வேண்டும் இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது.  அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப் பினர் செயலாளர் டி.வசுந்தரா தாக்கல் செய்துள்ள பதில் மனு வில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆசிரி யர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தும் முக்கிய அமைப்பாகும். இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் களை தமிழக அரசுதான் நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் கள் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே இந்த தகுதித் தேர்வில் பங்கேற்பவர் களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பல் வேறு மதிப்பெண்கள் வழங்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இந்த உயர்நீதி மன்றம் ஒரு கமிட்டி நியமித்தது. அந்த கமிட்டி அளித்த அறிக்கையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலு கைகள் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரி யர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. மாணவர் களுக்கு தரமான கல் வியை வழங்குவதற்காக இந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவில் சமர சம் செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்குவ தில் யாருக்கும் சலுகை வழங்க முடியாது என் றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு தர மான கல்வி வழங்க ஆசிரியர் தகுதித் தேர் வில் தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. எனவே தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் எந்த சமரச மும் செய்ய முடியாது. இந்த தேர்வில் சலுகை கள் வழங்க தேவை யில்லை. இந்த வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...