Monday, September 16, 2013

அட, தமிழக அரசியலே! மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

வாரப் பத்திரிகை ஒன்றில் கேள்வி - பதில் பகுதியில்,
கேள்வி: பெண்களை பாவயோனி யில் பிறந்தவர்கள் என்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா என கி.வீரமணி கேட்கிறாரே? அவருக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு?
பதில்: பகவான் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையின் எத்தனையோ வாழ்க்கை தத்துவங்களைவிட்டு, வீரமணியின் கண்ணில் பட்டது எது பார்த்தீர்களா? அவரவர் தரத்திற்கு தகுந்தாற்போல்தான் எண்ணமும், பார்வையும்! கடவுளை நிந்திப்பதாக நினைத்து தன் சுயமரி யாதையை நிந்தித்துக் கொண்டிருக்கிறார் பெரியவர். தந்தை பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு - சீர்திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டு, பறச்சிகளும், பள்ளச்சி களும் ரவிக்கை போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது என்று பெரியார் அன்றைய சூழ்நிலையில் சொன்னதை மட்டும் நினைவு வைத்துக் கொள்வாரா வீரமணியார்? இப்படி ஒரு பதில்.
இவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள் ஒன் றைச் சிந்திக்கவேண்டும்.
ஆபாசம் - அசிங்கம் - இவற்றின் பெருக் கல் தொகையாக ஒரு கடவுள் கற்பிக்கப்பட் டுள்ளார். குளிக்கும் பெண்களின் நிர்வா ணத்தை இரசிப்பவன் கடவுளா? நாரதன் என் கிற ஆண் கடவுளோடு புணர்ந்த கிருஷ்ண னைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
கிருஷ்ணனைப்பற்றி நாம் எடுத்துக் காட்டுவது நமது கற்பனையல்ல - இந்துப் புராணங்கள் எழுதி வைத்தவைதான்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண் டும் என்று நினைக்கிறவர்கள், ஒழுக்கத்தை யும், அறிவையும் மதிக்கிறவர்கள் - மக்களுக்கு வழிகாட்டுவதை ஒரு கடமையாகக் கருதுபவர் கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் என்றால், கொஞ்சம் புத்தியும், கடுகு மூக்கு அளவுக்கு ஒழுக்கமும் உள்ளவர்கள் அவற்றை வரவேற் பார்கள்.
அப்படியானால் இப்படி சொல்பவர்களை, எழுதுபவர்களைக் கொச்சைப்படுத்துபவர் களைப் பொதுமக்கள்தான் அடையாளம் காணவேண்டும்.
வீரமணிக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் - மற்றவர் களுக்கு? என்று கேள்வி கேட்டுள்ளார்.
கேள்வி கேட்பவருக்கு - கடவுள் நம்பிக்கை இருந்து தொலையட்டும் - அந்தக் கடவுள் நம்பிக்கை குறைந்தபட்சம் ஒழுக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டாமா என்பது தான் நமது கேள்வி.
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள யோக்கி யதை உடையவன் கடவுள் என்று அவர் ஏற்றுக்கொள்கிறாரா? என்பதுதான் கேள்வி.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறார் இவர்கள் போற்றும் கிருஷ்ணன் என்ற கடவுள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
ஆதாரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது 1998 இல். அதற்குப் பின் பல பதிப்புகளும் வெளிவந்துவிட்டன. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் வெளி யிடப்பட்டுள்ளது (Bhagavad Gita Myth or Mirage?).
அதற்கு இதுவரை எந்த ஒரு கொம்ப னாலும் மறுப்பு எழுதப்பட முடியவில்லை. எழுத முடியாத கோழைகள் கொம்பேறித் தாவிக் கொரிக்கிறார்கள்.
கீதையில் பகவான் கிருஷ்ணன் எத்த னையோ வாழ்க்கைத் தத்துவங்களையெல்லாம் கூறியிருக்கிறாராம்.
கீதை ஒரு கொலை நூல் - கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டித்தான் காந்தி யாரைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். காரனான நாதுராம் கோட்சே நீதிமன்றத் திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளான் என்ற அரிச்சுவடி தெரியுமா தமிழக அரசியல் எழுத்தாளருக்கு.
சரி.... அவர் விவாதப்படியே கீதையில் நல்ல விடயங்கள் சொல்லப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கேள்வி அந்த எழுத்தா ளருக்கு.
தாட்டு இலை போட்டு, பத்து வகைப் பதார்த் தங்களைப் பரிமாறி, அதன் ஒரு மூலையில் மலத்தை வைத்து இருந்தால், பரவாயில்லை - இத்தனை வகைக் கறிகளை பிரமாதமாக சமைத்திருக்கிறார்கள் - ஓரத்தில்தானே மலம் இருக்கிறது என்று எண்ணி, வயிறு முட்ட சாப்பிடுவார்களா?
கேள்விக்குப் பதில் எழுதிய வெறும் சோற்றுத்துருத்திகள் சாப்பிட்டாலும் சாப் பிடுவார்கள் - யார் கண்டது?
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி யுள்ள பகுதி ஏதோ அலட்சியப்படுத்தக் கூடிய பகுதியும் அல்ல!
கீதையின் அடிப்படைத் தத்துவமே வருணப் படைப்புதான்!
நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13).
அதன் அடிப்படையில்தான் கீதை அத்தி யாயம் 18; சுலோகம் 44 இல்
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று இவர்கள் நம்பும் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
பாவ யோனியில் பிறந்ததாக, ஏதோ கிருஷ்ணன் பிரசவம் பார்த்ததுபோல எழுது கிறானே - அதைச் சொன்னால் வீரமணியின் தரத்தைப்பற்றி எழுதுகிறாரே - அவர் தரத்தைப்பற்றி எழுதுவதற்கு பெண்களின் புடவைகளைத் திருடும் கடவுளை கும்பிடும் தரம் உள்ளவர்களா தகுதி உடையவர்கள்?
பதில் எழுதியவர் இதில் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்? பார்ப்பனராக இருந்தால் - இன் றைக்கும் அவர்கள் மற்றவர்களை இழிவு படுத்துவதில் ருசி காண்பவர்களாக இருக் கிறார்கள் என்று பொருள்.
பார்ப்பனர் அல்லாத சூத்திரராக இருந் தால் வெட்கப்படவேண்டாமா? நமது தாயைக் கொச்சைப்படுத்தி கிருஷ்ணன் சொல்லி யிருக்கிறானே என்று ஆத்திரப்பட்டு இருக்க வேண்டாமா - சொரணை இருந்தால்!
திராவிடர் கழகத் தலைவர் எழுதியதில் என்ன தவறு?
உண்மையைத்தானே எழுதி இருக்கிறார் என்று பதில் எழுதி இருக்கவேண்டாமா?
வீரமணி அவர்களின் தரம் உலகம் அறிந்தது. தந்தை பெரியாரால் தட்டிப் பார்க்கப்பட்ட பொறுக்குமணி அவர். அவரைப்பற்றி தரக்குறைவாக எழுதி தன் தரத்தைக் காட்டியுள்ளார்.
சூத்திரன் என்றால் என்ன பொருள் என்று எழுத்தாளருக்குத் தெரியுமா? (எதையும் படிக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக பேனா பிடித்தால் நாம் என்ன செய்வது?).
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன்
4. விபசாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8; சுலோகம் 415).
என்னை விபச்சாரி மகன் என்று சொன்ன தைப்பற்றி எனக்குக் கவலையில்லை - அதே மனுதர்ம சாஸ்திரத்தில் நல்லவை ஏராளம் கூறப்பட்டுள்ளன என்று எழுதட்டுமே பார்க் கலாம். (யார் கண்டது? ஆசாமி எழுதினாலும் எழுதுவார்).
பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு சீர் திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார் என்றும் எழுதியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவரை இழிவுபடுத்தவேண்டும் என்றால் பெரியாரைப் பெருமைப்படுத்துவது என்பது ஒரு தந்திரம் அவ்வளவுதான்.
சரி... எவ்வளவோ நல்லதைப் பெரியார் சொல்லி இருக்கிறாரே - இந்த ஏடு பெரியார் சொன்ன அந்த உயர்ந்த கருத்துகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறதா? பெரியார் சொன்னதைவிட மிகப்பெரிய விஷ யங்களைத் தான் வெளியிட்டு மக்களுக்குப் பெரிய உதவியைச் செய்துகொண்டு இருக்கிறதா?
தாழ்த்தப்பட்டவர்கள்பற்றி பெரியார் சொன்னதாக அவதூறு கிளப்பியுள்ளதே (இதுதான் பெரியாரை மதிக்கும் செயலா?). அதற்கு என்ன ஆதாரம்?
நாம் எழுதுபவை அத்தனைக்கும் ஆதாரத் தைக் குறிப்பிடுகிறோம். அறிவு நாணயம் இருந் தால் அடுத்த இதழில் பெரியார் சொன்னதற் கான ஆதாரத்தை வெளியிடட்டும் பார்க்கலாம் - சவால் விட்டுக் கேட்கிறோம்.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான் என்று தந்தை பெரியார் எழுதினாரே - (விடுதலை, 17.9.1969) அதுதான் நினைவிற்கு வருகிறது.
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். மானத்தைப்பற்றி கவலைப்பட்டிருந்தால் நமது தாயை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் உள்ளதை திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டதற்கு நன்றி சொல்லவேண்டும்.
பெரியார் திடலுக்கு ஓடோடி வந்து வணக்கம் தெரிவித்திருக்கவேண்டும்.
அறிவைப் பயன்படுத்தி இருந்தால் ஆதா ரத்தோடு அல்லவா எழுதியிருக்கிறார் என்று சிந்தித்திருக்கவேண்டும். இரண்டும் இல்லாத துகள் தரத்தைப்பற்றி எழுதுவது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லை.
குறிப்பு: இதுபோன்ற ஏடுகளின் யோக்கி யதையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...