Saturday, August 3, 2013

இந்து மதம் பாதிக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் யாரால்?

அரசாங்கங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகின்றன. வருணா சிரமத்தை சட்ட பூர்வமாகச் செயல் படுத்தவேண்டும் இதுதான் இந்தியத் தலைநகர் டில்லியில் கூடிய இந்து தர்ம ஆச்சார்யா சபாவில் பேசப்பட்டதன் சாராம்சம். சுவாமி தயானந்த சரஸ் வதியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட இந்த சபாவுக்கு சுவாமி பரமாத்மானந்தா என்பவர்தான் செயலாளர். முன்னாள் நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சபாவில் இடம்பெற்றிருக்கிறார்கள். எதற்காக அவர்கள் டில்லியில் கூடினார்கள்?

இந்துக் கோவில்களை மாநில அரசாங்கங்கள் சட்டவிரோதமாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எதிர்த்தும், இதற்கு அரசியல்சாசனத் தின் அங்கீகாரம் இல்லை என்பதை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் இந்து தர்ம ஆச்சார்யா சபா கூட்டத்தின் நோக்கம். அவர்கள் குறிப்பாகக் கவனம் செலுத்துவது தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோவில்களைத்தான்.

இந்த மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவையெல்லாம் அந்தந்த மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் இந்த சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக 1954ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டும்கூட, 1959இல் தமிழ்நாடு இந்து அற நிலையத்துறை சட்டம் மூலம் இந்த சொத்துகள் எல்லாம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று சபா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தமிழகமும், ஆந்திரத்தின் பெரும்பாலான பகுதிகளும் இணைந் ததுதான் அன்றைய சென்னை மாகாணம். பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்தபோதுதான் இந்து கோவில் களையும் அதன் பெரும் சொத்துகளை யும் ஒரு சில சமுதாயத்தினரே கையில் வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்தி வந்ததை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்து அறநிலையப் பாதுகாப் புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கோவில் நிலங்கள் அரசுப் பராமரிப் பின்கீழ் வந்தன.

இதனை அப்போதிருந்தே எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்தான், சட்டரீதி யாக இதனைத் தகர்ப்பதற்குப் பலப்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கள். அவற்றையெல்லாம் மீறித்தான் தமிழகத்தில் அறிமுகமான அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் பின்னர் இந்து அற நிலையத்துறை என்ற தனித்துறை யாகவே மாறி, கோவில்களையும் அதன் சொத்துகளையும் பாதுகாத்தது. ஆந்திராவிலும், புதுச்சேரியிலும் இது தொடர்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றி, கோவில்களைப் பாதுகாப்பதற்கான சட் டங்களையும், துறையையும் உருவாக்கி யுள்ளன. இதனைப் பொறுக்கமுடியா மல்தான் இந்து தர்ம ஆச்சார்யா சபா வினர் டில்லியில் கூடியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராம ஜோய்ஸ், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் தற்காலிகத் தலைமை நீதிபதி விஷ்ணு சதாசிவ கோக்ஜே, ராமஜென்மபூமி வழக்கில்  ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.என்.பட் உள்ளிட்ட பலரும் இந்த சபா கூட்டத்தில் பங்கேற்று இந்து மதம் பாதிக்கப்படுவது பற்றியும், இந்து மதம் மீது பாகுபாடு காட்டப்படுவது பற்றியும் பேசியிருக்கிறார்கள். அத்துடன், சிறு பான்மை சமுதாயத்திற்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் எல்லாம் ஒரு பாதுகாப்புக் காகத்தானேதவிர, அதுவே அவர்களின் உரிமையாகிவிடாது என்றும் பேசி யுள்ளனர். (16.-7.-2013)

இந்து மதப் பாதிப்பு, பாகுபாடு பற்றியெல்லாம் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பேசும்போதுதான், இந்தியாவை எத்தகைய மதச்சார்பின்மை நிர்வாகம் செய்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராஜர் கோவி லில் தமிழ் மொழியே தீண்டாமையாகக் கருதப்பட்டதையும், அங்கே தேவாரம் பாடுவதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி மேற்கொண்ட போராட்டங்களையும் அதற்குத் தமிழ் வழிபாட்டு பக்தர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், திராவிடர் கழகம்,  இடதுசாரிகள் உள்ளிட்ட பல அமைப்பினரும் உறுதி யான ஆதரவுடன் நின்றதையும் அதன் காரணமாக, நடராஜரின் சிற்றம் பலத்தில் தேவாரம் ஒலித்ததையும் மறக்க முடியாது.

தீட்சிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர மாநில அரசு முயற்சிகள் எடுத்தபோது அதற்கெதிராகவும், தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் சுப்ரமணிய சாமி செயல்பட்டதையும், தீட்சிதர்கள் இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டதையும் பழைய நாளிதழ்களைப் புரட்டினால் விரிவாகத் தெரிந்து கொள்ளமுடியும். பல தடைகளைக் கடந்து 2009ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து அற நிலையத்துறை வசம் வந்தது.

இந்து அறநிலையத்துறையினர், கோவில் உண்டியலைத் திறந்து காணிக்கைப் பணத்தை எண்ணினர். லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் வந்தது. ஆனால், தீட்சிதர்கள் கையில் கோவில் இருந்தபோது ஆண்டுக்கு 3000 ரூபாய் மட்டுமே உண்டியல் வசூல் என கணக்குக்காட்டப்பட்டு வந்துள்ளது. சிவன் சொத்து குல நாசம் என்று மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டே, அந்த சொத்தை முழுமையாக அனுபவித்தவர்கள்தான் சிதம்பரம் தீட்சிதர்கள்.

இப்படிப் பலரது அதிகாரத்தில் இருந்த கோவில்களைத்தான் அற நிலைய பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக நீதிக்கட்சி ஆட்சி மீட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இது தொடர் கிறது. அரசு ஊழியர்களிடம் காணப் படும் குறைபாடுகளும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளும் அறநிலையத்துறை ஊழியர்கள் மீதும் உள்ளது. அவற்றை சரிப்படுத்த வேண்டுமே தவிர, இந்துக் கோவில்களை அறநிலையத்துறை யிடமிருந்து பறிப்பதற்கு இந்து அமைப் புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆபத் தானவை. மீண்டும், வர்ணாசிரமத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுபவை.
பாதிப்பு பற்றியும், பாகுபாடு பற்றியும் இந்து தர்ம ஆச்சார்யா சபாவினர் கவலையோடு பேசியிருக்கிறார்கள். இந்து மதத்தில் பிறந்து, தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்று தேர்ச்சி  சான்றிதழ் பெற்ற தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட-பிற சமுதாயங்களைச் சேர்ந்த 206 பேர் இன்னமும் கோவில்களில் அர்ச்சகராக முடியாத நிலை நீடிக்கிறது. இந்துக் களான அவர்களை அர்ச்சகராக நியமிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்று தடைபெற்றவர்கள் யார் என்பதை அந்த சபாவினர் உரக்கச் சொல்லட்டும். அர்ச்சகர் பயிற்சி பெற் றவர்களின் பாதிப்பிற்கு வழி சொல் லட்டும்.

இந்து மதத்தில் பாகுபாடு என்பது வர்ணாசிரமத்தைக் கட்டிக்காக்க நினைக்கும் இந்த சபாக்களைச் சேர்ந்தவர்களால்தான் நிலை பெற்றி ருக்கிறதே தவிர, அரசாங்கத்தின் சட் டங்களால் அல்ல. வர்ணாசிரமத்தைத் தகர்த்தால், இந்து மதத்தில் பாகுபாடு மட்டுமல்ல, இந்து மதம் என்ற கற்பி தமே இல்லாது போகும். அதனால்தான் சபாக்கள் எல்லாம் பதறுகின்றன.

- எழுதியவர்-: கோவி.லெனின்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...