Wednesday, July 3, 2013

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற கொள்கை முடிவுக்குக் கண்டனம் தமிழர் தலைவர் அறிக்கை





நேற்று டீசல் மேலும் விலை உயர்த்தப்பட்டு (ஒரு லிட்டருக்கு 61 காசுகள்)  ஒரு லிட்டர் ரூ.54.15 விலை என்று சென்னையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இது 6ஆவது முறை உயர்த்தல் ஆகும்!
இதுபோல பெட்ரோல், இயற்கை எரிவாயு விலைகளும் திடீர் திடீரென்று இரண்டொரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்படுகிறது.
இது மக்கள் விரோதச் செயலாகும்! உலக நிலவரத்திற்கேற்ப, அந்தந்த நிறுவனங்களே அவ்வப்போது விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசு அளித்துள்ள கொள்கை முடிவு மிகவும் தவறானது.
அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் எதிர்ப்பு!
இதை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். அதுபோலவே தமிழ்நாடு முதல் அமைச்சரும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்தனைக் கட்சிகளும் இந்தக் கொள்கை முடிவைக் கண்டிக்கத் தவறவில்லை. இவற்றையும் மீறி ஏழை - எளிய சாமான்ய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்யலாமா?
இயற்கை எரிவாயு, டீசல் போன்றவை இன்று விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்கு இன்றியமையாததாகி விட்டது!
பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையில், பம்புசெட் விவசாயத்திற்கு டீசல்தான் பயன்படுத்தப் படுகின்றது; அதன் விலையை இப்படி ஆறு தடவை ஒரே ஆண்டில் ஏற்றி வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம்தானா?
வேதனை, வேதனை - வெட்கமும்கூட! இதனை மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்.
இப்பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கை களையே மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசரம் அவசியம் ஆகும்!
எப்போது விடியல்?
காய்கறி விலைகள் உட்பட, சமையல், எண்ணெய் விலை உட்பட உயர்ந்துள்ள நிலையில் அடித்தள மக்களுக்கு எப்போது விடியல்?
என்னதான் விடை  - பெருகும் தற்கொலைகள் தானா?
மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!

கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை    
2.7.2013


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...