Friday, July 26, 2013

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா?

அயோத்திப் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் அரசியலில் ஈடுபடத் தகுதி உடையவர்தானா?
பி.ஜே.பி.க்குச் சார்பாக அவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் இவர் பிஜேபியில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும்தான் தலைவரா?
காங்கிரசில் உள்ள இந்துக்களுக்கு இவர் தலைவர் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று கருதலாமா?
2004இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சென்னை தியாகராயர் நகரில், பிஜேபி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தவர்தான் இந்த ஜெயேந்திரர். அதுபற்றி பிரச்சினை எழுந்தபோது, அதில் என்ன தப்பு? என்று எதிர் கேள்வி கேட்டவரும் அவரே!
ரஜினியுடன் சேர்ந்து விஜயகாந்து ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவரும் இவரே! (குமுதம் 18.1.2001).
தன்னை நாடி வரும் பக்தர்களுக்குச் சாமியார்கள் ஆசி வழங்குவது வழமைதான். ஆனால் இந்த ஜெயேந்திரரோ வித்தியாசமான மனிதர்; தம்மை நாடிவந்த நடிகரைப் பார்த்து அரசியல் கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? சாமியார் வேடத்தில் ஓர் அரசியல்வாதி பதுங்கி இருக்கிறார் என்றுதானே பொருள்?
திருவானைக்காவல் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்த இவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். (இவருக்கு ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வேலை?).
அந்தப் பேட்டியில் என்ன சொன்னார்? பிஜேபி என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்று அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் (தினமலர் 19.3.1998) என்று சொன்னவர் தானே!
மண்டைக் காட்டிலே இந்து முன்னணிக்காரர் களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் மதக்கலவரத்தைத் தூண்டி படுகொலைகளைச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், இந்த ஜெயேந்திரர் என்ன செய்தார் தெரியுமா?
ராஜபாளையத்தில் தொழிலதிபர்கள் அடங்கிய கூட்டத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி பேசி யதைக் கேளுங்கள்.
தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது ஆர்.எஸ்.எஸை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக் காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்க போகிறீர்களா? என்று பேசியதை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான ஆர்கனைசர் (28.3.1982) வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு முறை அல்ல; இரு முறையல்ல; மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி.
1987 அக்டோபரில் அவாள் நம்பும் விஜயதசமி நாளில் ஜெயேந்திர சரஸ்வதி ஜன கல்யாண் - ஜன ஜாக்ரண் (மக்கள் நலன் - மக்கள் விழிப்புணர்வு) என்ற ஓர் அமைப்பை மடத்தைவிட்டு ஓடிய பிறகு தொடங்கினார்.
அந்த அமைப்பினுடைய கொள்கைகள் என்ன? விடுதலை சொல்லுவதைவிட தினமணி (தலை யங்கம் 5.10.1987) சொல்லுவதுதானே பொருத்த மானது.
ஹிந்து சமுதாயத்தினரிடையே இன உணர் வையும், ஒற்றுமையையும் மேலும் வளர்க்க இத்திட்டம் உதவும் என்றாலும், இதிலுள்ள சில அம்சங்கள் சர்ச்சைகளுக்குரியனவாகவும்  அரசியல் நோக்கம் கொண்டனவாகவும் அமைந்து மக்களிடையே ஓரளவு வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்று தினமணி எழுதியதே!
சங்கரமடம் என்பதும் சங்கராச்சாரியார் என்பதும் ஜெயேந்திரரை பொறுத்தவரை ஒரு வேடம்; மக்களை ஏமாற்றிட வசதியான இடம்; மற்றபடி ஒரு கடைந் தெடுத்த அரசியல்வாதி - காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் கூரிய வாள் முனைதான் ஜெயேந்திரர்
வன்முறையில் நாட்டம் கொண்டவர் - அதனால் தான் வழக்குகளில் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளார்.
இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்கள் இவரை ஜெகத்குரு என்று உச்சி மோந்து பாராட்டுகின்றனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது! நம் மக்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வருமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...