Monday, July 1, 2013

இளநீரின் இரகசியங்கள்...

பல வகை குளிர்பானங்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் பலருக்கு இளநீரின் அருமைகளும், பெருமைகளும் தெரிவதில்லை.
குழந்தை முதல் முதியோர் வரை இதனைப் பருகலாம், தாய்ப்பால் இல்லாத அல்லது புகட்ட முடியாத சூழ்நிலை வரும்பொழுது, பசும் பாலுடன் சம அளவு இளநீர் கலந்து குழந்தை களுக்குப் புகட்டலாம். இளநீரில் நேந்திரம் பழத்தைப் பிசைந்து உண்பதும் சிறந்தது.
இளநீர் ஒன்றினை எடுத்து, சீவி, பாதி அளவு நீரைப்பருகிவிட்டு, இளநீர் வாய்க்குள் சிறிய வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, முந்திரிப்பழம், அவல் ஆகியவைகளையும் சேர்த்து, அடைத்துவிட வேண்டும்.
அதிகாலை யில் அதனை எடுத்து சாற்றைப்பிழிந்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் தொடர்புடைய நோய்கள் அகலும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது, உடலில் தண்ணீர்த் தன்மையும், தாது சத்தும் குறையும். அதனை ஈடுகட்ட இளநீர் பருகவேண்டும். இளநீரில் ஆரஞ்சுப் பழச்சாற்றைக்கலந்து நோயாளிகளும் பருகலாம்.
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால், உணவுக்கட்டுப் பாட்டில் இருப்பவர்கள் தங்கள் உடல் சோர்வைப் போக்க தினமும் இளநீர் பருகலாம். மூத்திரப்பை தொடர்புடைய நோய்களால் அவதிப்படு கிறவர்கள் இளநீர் பருகினால் சிறுநீரகப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சிறுநீரின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் நினைவு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அவர்களுக்கு இளநீர் கொடுக்கலாம்.
அல்சர், அஜீரணம், இரைப்பை நோய்கள், பெருங்குடல் வீக்கம், மஞ்சள் காமாலை மற்றும் மூலநோய் போன்ற நோய்களுக்கும் இளநீர் சிறந்த மருந்தாகும்.
தினமும் இளநீரால் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் புள்ளிகள் நீங்கி முகம் புதுப்பொலிவுடன் காணப்படும். இளநீருடன் தேன் கலந்து பருகினால் நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல், அல்சர் போன்ற நோய்கள் நீங்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு இளநீர் பருகத்தரலாம்.
ஒரு கப் இளநீரில் அரைகப் பாலுக்குரிய சக்தி, வைட்டமின் பி, சி, கால்சியம், பொட் டாசியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்கள் கூட தாராள மாக இளநீர் பருகலாம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...