Wednesday, April 17, 2013

தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை உயிரோடு புதைத்த கொடுமை!!

கோத்தபாய ராஜபக்சே பொறுப்பென்று சாட்சியம் அளித்த சிங்களப் பெண்!



கொழும்பு, ஏப். 16- சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.

இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.

அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.

இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...