Saturday, March 9, 2013

வைகோ - ஓர் அலசல்! - 1


நிஜப்புலியும்-வேஷப் புலியும்!
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம் -
டெசோ மீண்டும் புத்துயிர் பெற்று, கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாகத்தான் இன்று இந்த முற்றுகைப் போராட்டம் - இந்தளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றது. வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு.
- டெசோ தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை, 6.3.2013, முரசொலி
இங்கே மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவற்றைத் தாண்டி ஒரு குரலில் ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய்வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய தமிழர்மீதான பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடித்திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!
- டெசோ உறுப்பினர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை, விடுதலை, 16.2.2013
ஈழத் தமிழர்மீது உள்ளபடியே அக்கறை உள்ளவர்கள் இந்த வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் - செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளில் டெசோ ஆக்கப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டத்தையும் (5.3.2013) நடத் தியது. காவல் துறையே கைது செய்ய முடியாமல் திணறும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போர்க் குரல் கொடுத்தனர். புலிகளாக மாறிய தமிழர்களின்  சீற்றக்குரல் எங்கும் எதிரொ லித்தது.
அதன் ஈரம் காயும் முன்பாகவே - அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றினை இந்தியாவின் தலைநகரில் டெசோ இன்று ஒழுங்கு செய்கிறது.
நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை - ஆத்திரத்தை முன்னிறுத்தாமல் அறிவுவயப் பட்டுச் சிந்திப்பவர்கள் மிகத் துல்லியமாக உணர் வார்கள்!
ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள காலகட்டம்வரை - இந்திய அரசுக்கு மேலும் மேலும் ஓர் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற உள்ளத் துடிப்பில் வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு டெசோ அழைப்புக் கொடுத்துள்ளது.
நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்கிற மாதிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அள வுக்குக் கடமை உணர்ச்சியற்றவராக இருந்தால்கூடப் பரவாயில்லை - அந்த வேலை நிறுத்தத்தைக் கொச் சைப்படுத்தாமல் இருக்கக் கூடாதா? ராஜபக்சேவின் காதுகளில் குளிர்தென்றலை உலவவிடும் ஒரு வேலையில் இவர் ஏன் ஈடுபடவேண்டும்?
ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை பொன் முட்டை யிடும் வாத்து - அது தங்களின் பிதுரார்ஜிதச் சொத்து - அது ஒரு கைமுதல் - அது தங்களை விட்டுப் பறிபோய்விடக் கூடாது என்கிற தன்னல வெறி இதில் தலைதூக்குகிறதே தவிர, பிரச்சினையின்மீது ஆழ்ந்த கவலை இருப்பதன் அடிப்படையில் அல்ல.
எதையும் அரசியல்படுத்துவது என்பது ஏற்புடைய தல்ல. தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட (14.10.2008) கலந்துகொள்ளாதவர்தானே வைகோ? அப்பொழுதே அதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி அறிக்கை விட்டாரே! (11.10.2008) ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் - போராடுபவர் ம.தி.மு.க. பொதுச்செய லாளர்.
இந்த நிலையில், ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தம் கட்சியின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவது அடிப்படைக் கடமையும், அவசியமும் அல் லவா? ஜனநாயக அமைப்பின்கீழ் வாழ்ந்து கொண் டிருக்கும் நாம் ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குச் சென்று கருத்துகளை எடுத்துக் கூறி, இந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று கூறும் கடமையைச் செய்யாவிட்டால், உயிர் போன்ற ஈழத் தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆகாதா? என்று தாய்க் கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு சேய்க் கழகத்தின் பொதுச்செய லாளருக்கு அறிக்கை வெளியிட்டாரே - அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் - அதனை விஷம் தோய்ந்த ஒன்றாக வருணித்தவர்தான் இந்த ஆத்திரக்காரர்.
இதில் இன்னும் குறிப்பிடத்தக்கது ஒன்றுண்டு. கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் போன்றவர்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அரசனை விஞ்சிய விசுவாசிகள்போல இங் குள்ளோர் குதித்தார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
நிஜப்புலியும் - வேஷப் புலியும்!
நிஜப் புலிகளைவிட வேஷம் போட்ட புலிகள் அதிகம் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.
டெசோ மீண்டும் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சி யான அலை அலையான செயல்பாடுகள் உலகத் தமி ழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.
டெசோ மாநாடு; அய்.நா. மன்றத்திலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்கள் நேரில் ஒப்படைத்து அளிக்கப்பட்ட விளக்கங்கள், வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது. கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்; டில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சி மாநாடு - வரும் 12 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தி யாவை ஆதரிக்கச் செய்தது - இப்பொழுது இரண்டாம் முறையாகவும் அத்திசையில் நம்பத்தகுந்த வெற்றி முனைகள் -
இவையெல்லாம் ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது எமக்கே சொந்தம் என்று தொழில் நடத்திக் கொண்டி ருந்தவர்களின் தலைகளில் இடியை இறக்கி விட்டது - அதனுடைய ஒட்டுமொத்த ஒப்பாரிதான் - அவலக்குரல் தான் குறுக்குச்சால் ஓட்டுவதாகும்.
இந்திய அரசு இதில் சரியாக நடக்கவில்லை - அதிருப்தி தரக் கூடியதாக உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசிடம்தான், பிரதமரிடம்தான் கோரிக்கைகளைத் திரும்பத் திரும்ப வைக்கவேண்டி யுள்ளது - இதனை வைகோ போன்றவர்கள் செய்த தில்லையா?
ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கூடப் பெயர் வைக்க முடியாமல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் சிந்திக்க வேண்டாமா?
மானமிகு கலைஞர் அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து, ஜெயலலிதாவை பொன் பேழையில் வைத்து, இவர்தான் ஈழத் தமிழர்களின் விடியல் என்று பேச ஆரம்பித்திருக்கும் தலைவர்களே, ஜெயலலிதாவின் கடந்தகால நிலைப்பாடு என்ன? செயல்பாடுகள் என்ன?
ஈழத் தமிழர்களை ஜெயலலிதா காப்பார், அவர் களுக்காக வாதாடுவார் என்றெல்லாம் அரசியல் - தேர்தல் நோக்கோடு பரப்புரை செய்கிறார்களே - சில அரசியல் கட்சித் தலைவர்கள் - கூட்டணி உறவுக்காக உண்மையை மறைக்கிறார்களே! உண்மையிலேயே இந்த ஜெயலலிதா யார்? அவரின் உண்மை உருவம் என்ன?
ஜெயலலிதாவை ஜெயலலிதா மூலமே இதோ படம் பிடித்துக் காட்டுகிறோம்.
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் இதோ:
மாண்புமிகு செல்வி ஜெயலலிதா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் செயல்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சர்வதேச பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தது குறித்து இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாது காப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகச் சம்பந்தம் உள்ளவை. இவை குறித்து தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள். இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு உறுப்பினர்களும் தங் களுடைய கவலையைத் தெரிவித்து இங்கே பேசியுள்ளார்கள்.
- இவ்வாறு செல்வி ஜெயலலிதா சட்டப் பேரவையில் உரையாற்றினாரே!
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேர வை யில் முதலமைச்சர் ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானம் வருமாறு:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்.டி.டி.ஈ.யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அர சினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந்தேன்.
அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத் தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு.பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, 1995 இல் Interpol-International Criminal Police Commission  அமைப்பின் வாயிலாக பிரபாகரனை கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மவுனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனு மதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
- இவ்வாறு சட்டப்பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.
தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு நான் தமிழக முதல மைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை வலி யுறுத்தினேன். என்னுடைய பெருமுயற்சியின் காரண மாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
அந்த இயக்கத்தின்மீதான தடை இன்றுவரை தொடரு கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார் (நமது எம்.ஜி.ஆர்., 23.10.2008, பக்கம் 1). (ம.தி.மு.க. பொதுக் குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல் வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா அடைக்கலம் தேடுகின்றனர்).
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.
- ஜெயலலிதா அறிக்கை
(நமது எம்.ஜி.ஆர். ஏடு, 23.10.2008).
இதன்மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப்பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது. பேரணி நடத்த முடிகிறது. போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல்தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறையிருந்தால் விரோதியை நண்பராகவும், நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?
இந்தியா தலையிடக்கூடாதாம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலி களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
- ஜெயலலிதா 
(நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).
போரை நிறுத்தவேண்டும் என்பதன்மூலம் கருணா நிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் குழுப் பாட்டுப் பாடும் கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல்லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் - குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்!
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தானாம்!
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படு கிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ.ஜெயலலிதா 
(நமது எம்.ஜி.ஆர், 18.1.2009)
இலங்கை ராஜபக்சேவின் உடன்பிறந்த சகோதரி யாக அல்லவா ஜெயலலிதா பேசுகிறார்? ஈழத் தமிழர் கள் படுகொலை செய்யப்படுவதை சகஜம் என்ற சொல் லால் நியாயப்படுத்துகிறாரே - இவருக்குப் பராக்குப் பாடுவோர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்ப வர்களா - இல்லையா?
சண்டை நடைபெறும்போது அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.
- கருணா அம்மன் 
(ஜூனியர் விகடன், பேட்டி 1.2.2009)
போரில் பொது மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை
இப்படி கூறியிருப்பவர் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
(ஈழச்சுதந்திரன் நவம்பர் 2008 பக்கம் 15)
இதையேதான் இங்குள்ள ஜெயலலிதாவும் கூறுகிறார்.
இவர்தான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறா ராம் - ஈழத் தமிழர்களுக்காக டெசோ காணும் கலைஞர் நாடகமாடுகிறாராம் - (வைகோ, ஆனந்தவிகடன் பேட்டி, 6.3.2013) இன்னும் இருக்கிறது.
(வளரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...