Thursday, February 7, 2013

தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு


தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு இந்துஸ்தான் டைம்ஸ் தரும் திடுக்கிடும் தகவல்கள்


புதுடில்லி, பிப்.7- பாகிஸ்தானின் தாலிபான் தலைவ ருடன் அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்தித்தது குறித்து திடுக்கிடும் தகவல் களை இந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தி யுள்ளது.
பா.ஜக. தலைவர் அத்வானி ஃபசூல் அர் ரகுமான் என்ற பாகிஸ்தான் தலைவரை 2005ஆம் ஆண்டில் சந்தித்துள்ளார். ரகுமான், தாலிபான் ஆதரவாளர் என்று சொல்லப்படுபவர். ஏன் ஆர்.எஸ்.எஸ்.,  பா.ஜ.க. , தலைவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும்? பல நேரங்களில் இந்திய  கிரிக்கெட் போட்டிகளையே பல தடவை பொறுத்துக் கொள்ளாதவர்கள் அவர்கள்.
அந்த சந்திப்பில் எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்பதை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டன
- தேசிய புலனாய்வுக் கழகம்
ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் வலதுசாரி தீவிரவாதி களின், பயங்கரவாதச் செயல்களைப்பற்றி சதித் திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவ தாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கத்தின் நாக்பூர் அலுவல கத்தில் இந்த்ரேஷ்குமார் என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர். வலதுசாரி தீவிரவாத மூளை எனப்படும் சுனில் ஜோஷி என்பவரை 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வெடிமருந்து வாங்க ரூ.50 ஆயிரம் பணம்
சுனில்ஜோஷி, மேலும், சம்ஜிவாதா வழக்கில் சாட்சியாகவும் ஆஜ்மீர் ஷரீப் வழக்கில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்டவருமான பாரத் பாய் என்பவருடன் அசி மானந்த் என்பவரும் நாக்பூர் சென்று  இந்த ஜோஷியை சந்தித்துள்ளனர். அவர், அவர்களுக்கு வெடி மருந்து மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000 கொடுத்ததாக சம்ஜுவாதா (Samthauta)  குற்றப் பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.
வலதுசாரி தீவிரவாத வழக்குகள் எதிலும், இந்த் ரேஷ் பங்கு பெற்றதாகக் குற்றம் சாட்டப்படவில்லையானாலும் அவரது பங்களிப்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த்ரேஷ்  சார்பாக வழக்கறிஞர் மீனாட்சி லேகி, இவையெல்லாம் பொய்த் தகவல்கள்; சிமி இயக்கத் தலைவர் சைதர் நகோரி மீது நடத்தப்பட்ட மன இயல் ஆய்வு உட்பட பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட சம்ஜுவாதா குண்டுவெடிப்பு பற்றிய அரசின் ரகசிய ஆவணங்கள் ஆரிஃப் காஸ்மானி என்ற லஸ்கர் என்ற பொருளுதவி செய்ததானது பற்றியதும் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானமும் பற்றிய 3500 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
சந்தித்தது உண்மையே!
புலனாய்வாளர்கள் பாரத் பாயிடம் பேசியபோது, அவர், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், இந்த்ரேசையும், சுனில் ஜோஷியையும் சந்தித்ததை ஒப்புக் கொண் டுள்ளார்.
இந்த்ரேஷ் மனேஜீக்கு, சுனில் ஜோஷி ரூ.50,000 கொடுத்தார். அவர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். எதற்காக அவர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு  மனேஜ், ஒரு முக்கிய  மான காரியத்துக்காகக் கொடுத்ததாக சொன்னார். அவர்களது தொடர்பு பற்றிய மேலும் இரு நிகழ்வுகள்  உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 1999ஆம் ஆண்டில் டங்கர்கான் என்ற இடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்,  சுனில் ஜோஷியும் அவரது மற்ற 2 சகாக்களும் சேர்ந்து வெடிப் பொருள்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். சுனில் ஜோஷி  கொல்லப்பட்டார்
ஆஜ்மீர் சபரி குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  மிஜோரம் என்ற இடத்தில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகத்தில் பல சந்திப்புகள் நடந்துள்ளன.
2007, டிசம்பர் 29ஆம் தேதி சுனில்ஜோஷி அவரது சகாக்களாலேயே மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
இருந்தாலும், ஷீட்டல் கெலாட் என்ற ஒரு சாட்சி புலன் ஆய்வாளர்களிடம் ஜோஷியின் கொலைக்குப் பிறகு, தேவாசில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து, இரண்டு பைகளில் துப்பாக்கிகள், இரும்புத் துண்டங்கள், மின் ஒயர்கள் முதலியன வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக  குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சி தப்பித்து ஓடியவன், அங்கிருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மற்ற பையானது நர்மதை ஆற்றில் வீசப்பட்டது.
எந்த அளவிலும்  எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. புலனாய்வு களை நம்பாதீர்கள் எங்களுக்கு நீதி அமைப்பில் முழு நம்பிக்கை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் சொல்லியுள்ளார்.
அத்வானி சந்திப்பின் மர்மம் என்ன?
2005-இல் நிகழ்ந்த, பாகிஸ்தான் தலைவர் ஃபசூல் ரகுமான் எல்.கே. அத்வானி இடையே நடந்த சந்திப்பினைப் பற்றிய விளக்கங்கள் வேண்டுமென்று NCP அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்வானியுடன்கூட மற்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பெருந் தலைகள்   தாலிபான் ஆதரவாளர் ரகுமானு டனான சந்திப்பில் பங்கு கொண்டுள்ளனர். டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், என்ன கருத்துப் பரிமாற்றம் நடந்தது? அந்த மாதிரி தலைவர்களுடன் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது? என்று NCP தொடர்பாளர் நவாப்  மாலிக் கேட்டுள்ளார்.
- (தகவல்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் புதுடில்லி 25.1.2013)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...