Wednesday, February 27, 2013

இதுதான் மதச் சார்பின்மையா? அறிவியல் மனப்பாங்கா? வெட்கக் கேடு - மானக் கேடு!


- ஊசி மிளகாய்


இந்திய அரசியல் சட்டத்தின்மீது உண்மை யான நம்பிக்கை கொண்டு அதன்படி, கடமையாற்றுவேன் என்றுதான் பிரதமர், முதல் - பஞ்சாயத்துத் தலைவர் வரை உறுதி மொழி கூறி பிறகு பதவியேற்கிறார்கள்!
ஆனால் நம்முடைய நாட்டில் மதச் சார்பின்மை எப்படி கேலிக் கூத்தாக்கப்படு கிறது என்ற செய்தி அன்றாடம் ஏடுகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு, உறுதிமொழி மீறல் என்ற குற்றம் வேறுண்டா?
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாளை அவருடைய கட்சிக்காரர்கள் கொண் டாடுவது அவர்களுடைய உரிமை.
அதற்காக தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையே யாக சாலையாக மாற்றியா கொண்டாடி, மதச் சார்பின்மை - Secular State - என்பதை கொச்சைப்படுத் துவது?
இதுபற்றி பேச, எழுத, கண்டிக்க, ஜன நாயக வாதிகள் - இடதுசாரிகள் என்ற முற் போக்கு அக்மார்க் முத்திரையாளர்கள் முன்வர வேண்டாமா?
ஒரு நாளேடு - அதுவும் அம்மாவின் ஆட்சிக்கு முழு ஆதரவு தரும் அக்கிரகார பூணூல் நாளேடு இன்று காலை வெளி யிட்டுள்ள செய்தி இதோ:
யாக சாலையாக மாறிய வீட்டுவசதி வாரிய அலுவலகம்
சென்னை நந்தனத்தில் உள்ள, வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக வர வேற்பறை, நேற்று திடீரென, யாக சாலை யாக மாறியதால், ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், தலைமை அலுவலகம் நந்த னத்தில் உள்ளது.
வாரியத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர், செயலர் ஆகி யோரின் அலுவலகங்கள் இங்கு செயல்படு கின்றன. இந்நிலையில், நேற்று காலை, வாரிய பணியாளர்களும், அதிகாரிகளும் வழக்கம் போல், வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், வாரிய அலுவலக கட்டடத்தின் தரைத் தளத்தில், வரவேற்பறை அமைந்துள்ள பகுதியில், புரோகிதர்கள் புடைசூழ, அக்னி வளர்க்கப்பட்டு, யாகம் நடந்து கொண்டிருந்தது.
வாழை, மாவிலை தோரணம் என்று, வழக்கமான அரசு அலுவலகத்துக்கான நிலையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஒரு யாக சாலையாகவே மாறியிருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள், நம் அலுவலகத்துக்கு தான் வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது யாக சாலைக்குள் சென்று விட்டோமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
காரணம் என்ன? இதுகுறித்து விசாரித்த போது, அண்ணா தொழிற்சங்கம் சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இந்த யாகம், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், வீட்டுவசதி வாரிய தொழிற் சங்கத்தினர், வாரிய தலைமை அலுவலகத்தை, யாக சாலையாக மாற்றி யிருப்பது குறிப் பிடத்தக்கது. - (தினமலர் பக்கம் 12)
யாகசாலை நடத்தலாமா? வீட்டு வசதி வாரியம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட லாமா? யாகக் குண்டம் அங்கேதான் நடத்த வேண்டுமா? எளிமையாகக் கொண்டாடுதல் என்பது இதுதானா?
மதச்சார்பின்மைபற்றி எழுத்தில், பேச்சில் பீற்றிக் கொள்ளும் முற்போக்காளர்கள் எல்லாம் இதைக் கண்டும் காணாததுபோல் முக்காடு போட்டுக் கொண்டு சீட்டுப் பிச்சைக் காக திருவோடு ஏந்தி நிற்கலாமா?
இது ஒருபுறம், இன்னொருபுறம்  செயற் கைக்கோள்களுடன் சிறீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மிகச் சிறப்பாகத் தயாரித்த பி.எஸ்.எல்.வி.20 ராக்கெட் வெற்றி கரமாக பறந்தது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! விரைவில் செவ்வாய்க் கிரகத் தினை நோக்கி நம் செயற்கைக் கோள் செலுத் தப்படும் என்று பெருமிதத்துடன் நமது குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!
ஆனால் அந்த இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன் நாயர், இதை விண்வெளிக்கு அனுப்புமுன், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியிடம் வைத்து (Miniature
-  சிறிய மாடல்) அர்ச்சனை செய்து பிறகே திரும்பி, இந்த ராக்கெட்டைச் செலுத் தியுள்ளார். இவ்வளவு விஞ்ஞானிகளின் மூளையை - ஆராய்ச்சியை - அறிவை - வெறும் சூன்யப்பிரதேசமாக ஆக்கிக் காட்டியிருக் கிறார்! விஞ்ஞானிகளே இப்படி மூடநம்பிக்கை பரப்பும் முகவர்களாக இருக்கலாமா? நல்ல வேளை கோவிந்தா கோவிந்தா கோஷம் கொடுக்கச் செய்யவில்லை!
அவருக்குப் பக்தி இருந்தால், அது அவரது சொந்த விஷயம்; வீட்டுக்குள் பூஜை புனஸ்காரம் என்று புரண்டு புரண்டு எழட்டும் நமக்குக் கவலை இல்லை; இப்படி பொதுவான ஒரு அறிவியல் சாதனையை - விஞ்ஞான வளர்ச் சிக்கு விரோதமாகச் செய்து காட்டுவது எவ் வகையில் நியாயம்? மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமல்லவா?
நாளைக்கு கிறிஸ்துவர் அதிகாரி வந்தால்  சர்ச்சுக்குப் போவார் - இஸ்லாமி யர் மசூதிக்குப் போவார் என்றால் அதை விடக் கேலிக் கூத்து வேறுண்டா?
அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ் உள்ள, குடிமகனின் அடிப்படைக் கடமை அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது என்ப தற்கு நேர்மாறானதல்லவா - ராதாகிருஷ் ணன்களின்  பக்திப் பரவசம்?
இவர் முன்பும் இதேபோல ஏழுமலையான் தரிசனம் செய்துவிட்ட ராக்கெட் ஏன் பாதி துரத் திலேயே வீழ்ந்தது? வெட்கமாக இல்லையா? வெளிநாட்டவர்கள் இதனைப் பார்த்து மகிழ்வார்களா? காரித் துப்ப மாட்டார்களா? பூசாரிகளாக இருந்து செய்வது, இஸ்ரோ தலைவரே செய்வது வெட்கக் கேடு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மானக்கேடும் ஆகும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...