Wednesday, January 30, 2013

அன்றும் - இன்றும் - என்றும் பார்ப்பனர்கள்!


பார்ப்பனர்களைப் பாழும் சொற்களால் திட்டித் தீர்க்கிறீர்களே. அவாளால் என்ன தொந்தரவு? தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒதுங்கித் தானே போகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் அவர்கள் பரம சாதுவாகி விட்டார்கள் _ எல்லாம் கலந்து  போச்சு! முனியாண்டி ஹோட்டலில் சாப்பிடுறா... சகஜமாகப் பழகுறா... இன்னும் அவர்களின் மேல் தூஷணையா என்று வக்காலத்துப் போட்டுப் பேசும் ம.பொ.சி.யின் மிச்ச சொச்ச  வகையறாக்கள் இன்று வரை இருக்கத்தானே செய்கிறார்கள்?
ஒரே ஒரு கேள்வி, தமிழ் _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்திலே அவர்கள் இன்றுவரை தமிழர்களோடு எந்த அளவு ஒன்றி கலந்திருக் கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
இம்மாதம் 13ஆம் தேதி (13.1.2013) தினமலர் ஏட்டில் 3ஆம் பக்கத்தில் வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று.

இதற்கு என்ன பொருள் என்று விளக்குவார்களா?
ஆந்திர மாநிலத்தில் - _ அய்தரா பாத் அருகில் ஒரு கிராமம் உரு வாக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ:
21ஆம் நூற்றாண்டு அக்கிர(ம)காரம்!
ஆந்திரப் பிரதேச தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில் அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ., தூரத்தில் நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000 பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.
அங்கு மனை வாங்க சில பாரதீய ஜனதாக் கட்சிக்காரர்கள்கூட முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் விற்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி. கமலாகரசர்மா என்ப வர் இதன் உரிமையாளராம்; வெளிநாடு வாழ் இந்தியராம்! _ இது செய்தி.
எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி! பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?
எந்த ஜாதியினால் படிக்கக் கூடாத, வேலை பார்க்கக் கூடாத ஜாதியாக ஆக்கப்பட்டோமோ, அந்த ஜாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு தரக்கூடாது என்று கூச்சல் போடும் ஜாதித் திமிர் கொண்டவர்கள் இந்தப் பார்ப்பன ஜாதித் திமிர்  கொண்ட செய்கைக்கு என்ன சமாதானம் கூறுவார்கள்?
பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் -_  என அண்ணா சொன்னது சரிதானே!
அப்பொழுதே விடுதலை (5.1.2008) வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
மற்றொரு விளம்பரமும் உண்டு தினமணியில் (20.10.1993) வெளிவந்த அந்தச் செய்தி இதோ:
தற்போது பலருக்கும் பலவிதமான வியாதிகளும் திடீர் மரணங்களும், ஜலக் கஷ்டத்தினால் அவதிகளும் இப்படி பல வகையான துன்பங்கள் தனி மனிதனிலிருந்து, குடும்பம், நாடு வரையில் உள்ளவற்றை குறைப்ப தற்காக ஒவ்வொரு பிராமணரும் ஸந்தியாவந்தனம் செய்த பிறகு ஒரு மண்டல காலம் (45 தினங்கள்). ஸஹஸ்ர காயத்ரி ஜபம் (1008 முறை காயத்ரி ஜபம்) தங்கள் குடும்ப ஷேமத்திற்காகவும், நாட்டின் ஷேமத் திற்காகவும் என மனதில் ஸங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபம் முடிந்தபிறகு 12 முறை சூர்யனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள பிராமண ஸமாஜம் இதற்கு முழு முயற்சி எடுத்து இது வரையில் தொடங்காதவர்களை விஜயதசமிக்கு தொடங்கிவிட முயற்சி செய்யவும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்வாமிகளின் அபிப்ராயம் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இப்படி தொடங்கின விபரத்தை கீழ்க்கண்ட விலாசத்திற்கு தெரிவித்தால் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளிடம் தெரிவித்து விசேஷ பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பிராமண ஸமாஜம்,
3, கொல்லா சத்திரம் தெரு,
காஞ்சிபுரம், 631 502
தினமணி 20.10.1993
நாட்டின் க்ஷேமத்துக்காக பிராமணோத்தமர்கள் மட்டும்தான் ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டுமா? (இவர்கள் ஸந்தியா வந்தனம் செய்வதால் ஆகப் போவது ஒன்று மில்லை என்பது வேறு  செய்தி!)
லோகக்குரு என்று அவாள் கூறும் சங்கராச்சாரியார் அக்கிரகார சம்பந்தப்பட்டவராக இருக்கிறாரே தவிர, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தானே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுப் போதாதா?
ராஜபாளையம் சேதி ஒன்றும் இருக்கிறது. ராஜபாளையம் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேத பாட சாலையில் மாணவர்கள் சேர்க்கைக் கான விளம்பரம் இதோ:
இவ்வாண்டு முதல் நமது வேத பாடசாலையில் 15 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட சமஸ்கிருத நுழைவு/ தமிழக அரசின் 10ஆம் வகுப்பு தேர்வு அதற்குச் சமமான சமஸ்கிருத கல்வியுடன் கூடிய கல்வித் தகுதி யுடன் உபநயனமான மாணவர்கள் மேற்கண்ட அய்ந்தாண்டு கால குரு குல அமைப்பில் அத்வைத வேதாந்த சாஸ்திரம் என்ற புதிய வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். (தினமலர் 19.4.2002 பக்கம் 7).
வேதங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம். இப்பொழுது அப்படி யாரும் செய்ய முடியாது என்பதால் மறைமுகமாக பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற தன்மையில் எவ்வளவு சூழ்ச்சியாக செயல்படுகிறார்கள்.
உபநயனமான மாணவர்கள் தான் பங்கு பெற வேண்டுமாம்.
பொருள் புரிகிறதா? உபநயனம் ஆனவர்கள் என்றால் பூணூல் கல் யாணம் நடத்தி வைக்கப்பட்ட பார்ப் பனர்கள் மட்டும்தான் சேர்க்கப்படு வார்கள் என்பதை எப்படியெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லுகிறார்கள்.
தினமணி ஏட்டில் (7.2.1983 வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று:
கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் _- அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.
தேவை
கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
1. Accountants: B.Com
பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.
2. Typists: நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.
3. Saler Representatives:
வியாபாரத்தில் திறமையும் அனுபவம் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.
மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர் களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.
Raj & Co Post Box No 9
Coimbatore - 641 001.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களிடம் வியாபாரம் செய்து வயிற்றை கழுவிக் கொண்டு இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்த பார்ப்பனர்களை மட்டும் விளம்பரம் செய்து கூவி அழைப்பதை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
இவர்களை விட்டுத் தள்ளுங்கள். அவாளின் ஜெகத் குருக்கள் இருக்கிறார்களே _ அவர்கள்தானே ஜப்பானுக்கும், கனடாவுக்கும், எகிப்துக்கும், எத்தியோப்பாவுக்கும், ருசியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் குரு! (கடலைத் தாண்டிச் செல்வது தோஷம் என்று சொல்லுபவர்கள் எப்படி லோகக் குரு ஆவார்கள் என்று எவரும் கேள்வி எழுப்பிட வேண்டாம்) அவாளை நோக்கிக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது; காரணம் மகாபெரிய வா(ல்)ள்
மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் பெரியவாள் இருக்கிறாரோ, இல்லியோ - அவா(ள்) எப்படிப்பட்டவாள்?
தெய்வத்தின் குரல் என்று அவாளின் பேச்சுகள் எழுத்துக்கள் பல தொகுதிகளாக வெளிவந்தன. (அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பெரிய வாள்களைத் தோலுரித்துத் தொங்கப் போட்டுள்ளார் - சங்கராச்சாரி _- யார்? என்று நூலாகவும் வெளி வந்துள்ளது)
காஞ்சி மடத்திலே பல டிரஸ்டுகளை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
றீ ஸஸ்டியப்த பூர்த்தி ட்ரஸ்ட், வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு உற்சாக மூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்ட்!
வேத  ரக்ஷண நிதி ட்ரஸ்ட், வேதமாத நிதி  ட்ரஸ்ட் இந்தியா முழுவதும் வேதப் பாடசாலைகளை நடத்து வதற்கு
றீ கன்னிகாதான ட்ரஸ்ட் - _ பிராமணப் பெண்களை உத்தேசித்தே இந்த ட்ரஸ்ட் இப்படி ஜெகத் குரு என்று சொல்லப்படுபவரே பார்ப்பன வெறித்தனத்தில் ஊறிக் கிடக்கிறார் என்றால் மற்ற மற்ற பார்ப்பனர் களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
பார்ப்பனர் அல்லாதார் களிடத்தில் தட்சணை வாங்குவது --_ பயன்பாடோ பார்ப்பனர்களுக்கு என்னே சாமர்த்தியம்!
இப்பொழுது சென்னை யில் அக்கிரகார பகுதிகளில் புதிய தந்திரத்தைக் கையாளுகின்றார்கள். பிராமணர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு ஒதுக்கப்படும் என்ற பச்சையாக விளம்பரம் செய்வது சற்றுக் கடினமானது என்று கருதி “For Vegetarian  Only” என்று வீட்டு வாசலில் விளம்பரம் செய்துவிட்டு, நேரில் வரும்போது பிராமணாளா இல்லையா என்று விவரம் அறிந்து பார்ப்பனர்களாக இருந்தால் மட்டும் வாடகைக்கு விடும் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள்.
பார்ப்பனர்கள்பற்றி இன்னுமா பேச வேண்டும் என்று வாய் நீளம் காட்டும் பெரிய மனிதர்கள் இவ்வளவு எடுத்துக்காட்டுக்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?
- மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...