Wednesday, January 2, 2013

செய்திச் சிதறல்கள்


விலையில்லாததா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர் தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விலையில்லா ஆடுகளைப் பொது மக் களுக்குக் கொடுத்தது. விலையில்லா, ஆடுகள், விலையுள்ள ஆடுகளாகி விட்டன. அவை கசாப்புக் கடைக்குச் சென்று விட்டன என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
இப்பொழுது கால்நடை வளர்ப்புத் துறைக்குப் புதிய வேலை என்ன தெரியுமா? அப்படிக் கொடுக்கப்பட்ட ஆடுகள் இருக்கின்றனவா? விற்கப் பட்டனவா? என்று விவரம் சேகரிப்பது.
இது மாதிரி செய்வதைவிட அனைவருக்கும் இலவசக் கல்வி எல்லா நிலைகளிலும் என்பதைக் கொண்டு வந்தால் இந்தத் தலை முறைக்கு மட்டுமல்ல; அடுத்துவரும் தலைமுறைக்கும் பயன்படுமே!
####
மதிப்பெண்தான் மதிப்பா?
+2 தேர்வு மற்றும் 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஒரு சுற்ற றிக்கை தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையிலிருந்து வெளி வந்துள்ளது.
எழுத்துத் தேர்வில் +2 தேர்வில் 150-க்கு 70 மதிப்பெண்கள் பெற வேண்டும்; செய்முறைத் தேர்வில் 50-க்கு 30 மதிப்பெண்கள் பெற வேண்டுமாம். எழுத்துத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்று செய்முறைத் தேர்வில் 30 மதிப்பெண் பெறா விட்டால் தோல்வி தானாம். 10ஆம் வகுப்பிலும் இதுபோன்ற குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை எப்படி இருந்தது? அதில் என்ன குறைபாடு? ஏனிந்த மாற்றம் என்பது விளக்கப்படவில்லை.
குறிப்பாக செய்முறைத் தேர்வில், தேர்வாளர் மனப்பான்மையைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறக் கூடும்.
கிராமப்புறங்களில் இன்னும் சோதனைச் சாலைகள் (டுயடிசயவயசல) எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின் றன என்பது தெரிந்த ஒன்றே!
டாக்டர் அம்பேத்கர் கூட 35 மதிப்பெண் பெற்று தான் தேர்வில் வெற்றி பெற்றார். அப்படி வெற்றி பெற் றவர்தான் இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கே சிற்பியானார் என் பதை மறந்து விட்டு, மதிப்பெண்களைப் பிடித்துத் தொங்க வேண்டாம்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரனே இதனைச் சுட்டிக் காட்டினார்.
மதிப்பெண் மதியை அளக்கும் மதிப்பெண்ணா? தேவையில்லாமல் கிராமப்புறப் பிள்ளைகளின் எதிர் காலத்தோடு விளையாட வேண்டாம்.
#####
கடலைத் திருவிழாவாம்!
ஓசூர் ராஜகணபதி நகர் ஆஞ்ச நேயர் கோயிலில் ஒரு முட்டாள்தன மான விழா, ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று; அந்தக் குரங்குக் கட வுளுக்கு (ஆஞ்சநேயருக்கு) வேர்க் கடலை தூவி தேர்த்திக் கடனாம். இப்படி செய்தால் வேர்க் கடலை மகசூல் பிரமாதமாக இருக்குமாம்.
நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட் டால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகி இருக்கின்றன.
ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடன் செய்தால் மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் கிடுகிடு என்று விண்ணை முட்டி கொழிக்கும் என்றால் இந்தச் சுலபமான வழியை டெல்டா பகுதி களிலும்கூட நடத்தலாமே!
இதுதான் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கும் வழியா? மதத்தை முதலில் ஒழித்தாலே நாடு சுபிட்சம் அடையும் என்க!
@@@@@
பலே பஞ்சாப்!
பாலியல் தொடர்பான வழக்கு களில் பாதிக்கப்படும் பெண்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரிக்கக் கூடாது;
பெண்கள் வீட்டுக்கே சென்று விசாரிக்க வேண் டும் என்று பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் ஆணை பிறப் பித்துள்ளார்.
நியாயமான ஒன்றே! டில்லியில் பேருந்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூடத் தெரிவிக்கக் கூடாது என்கிற நாகரிகம் பாராட்டத்தக்கதே. அதே கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டியதுதான் சரியானது.
வேலியே பயிரை மேய்வதுபோல இரவு நேரத்தில் பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிலை
ஆணைகளையும் மீறி, அழைத்துச் சென்று பாலியல் வன் முறைகளை நடத்துவது சர்வ சாதார ணமாக நடக்கவில்லையா!
(விழுப்புரத்தில் ரீடாமேரிக்கு என்ன நடந்தது?)
இந்த நிலையில் பஞ்சாப் முதல் வரின் ஆணையை மத்திய அரசின் உத்தரவாகக் கூட வெளியிடலாமே! இதை மற்ற மற்ற மாநில அரசுகளும் பின்பற்றலாமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...