Saturday, December 29, 2012

தகுதி - திறமை...?


எதைக் கொடுத்தாலும் சூத் திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
எனவே அதனை அடியொற்றி நடக் கின்ற பார்ப்பனர்கள் சூத்திர மக் களுக்கு கல்வியைக் கொடுக்காமல் பல்லாண்டு காலமாக அவர்களை ஏய்த்து, அடக்கி, ஒடுக்கி கோலோச்சி வந்தனர்.
இத்தகைய அநீதியைக் கண்ட பெரியார் சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தை யும், அதன் இன்றியமையாத் தேவை யையும் எடுத்துக் கூறி பாமர மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
அதன் பயனாய் விதியை நினைத்து, வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர மக்கள் மெல்ல மெல்ல சிந்திக்கத் தொடங்கினர். இதன்மூலம், பாமர மக்கள் மத்தியில் எழுச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் உணர்வைப் பெற்றனர்.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், மற்ற நாட்டு மக்களைப் போன்று நம் நாட்டு மக்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்று இரவு - பகலாக சிந்தித்ததன் விளைவால்;
தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாக வும் இருந்து செயல்பட்டதன் பயனாய் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பள்ளிகள் திறந்து கல்வி நீரோடையை வெள்ளம் போல் பாய்ந்தோடச் செய் தனர்.
இவ்விரு தலைவர்களின் தன்னல மற்ற, தளராத உழைப்பின் பயனாய் பாமர மக்கள் கல்வியின் அவசியத்தை யும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர்.
ஆண்டாண்டு காலமாக இன எதிரி களால் வஞ்சிக்கப்பட்டு கல்வி - வேலை வாய்ப்பின்றி முடங்கி முடமாகிப் போன பாமர மககள், மேற்கண்ட அப்பழுக்கற்ற இரு பெரும் தலைவர்களின் பெரு முயற்சியால் கல்வியின் பயனை நுகரத் தொடங்கி அதன் மூலம் தற்போதுதான் வேலை வாய்ப்பினை எட்டியுள்ளனர்.
அதற்குள்ளாக, நாட்டின் பெரும் பான்மை மக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அங்கம் வகிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், எப்படியாவது இதனை தடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகுதி - திறமை பற்றி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டனர்.
ஆம், அண்மையில் நாளேட்டினை நோக்கியபோது (19.11.2012) ஆசிரியர் பணிக்கு தகுதிதான் அடிப்படை! எனும் தலையங்கத்தை கண்ணுற்றேன்.
அத்தலையங்கத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதித் தேர்வுதான் திறமையைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்றால்; பட்டப் படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியர் பணிக்காக பயிற்சி மேற் கொண்ட மாணவர்களுக்கு கல்வித்துறை சான்றிதழ் வழங்கியது எதற்காக?
தகுதித் தேர்வு தான் அடிப்படை எனில், ஆசிரியர் பணிக்கென்று படித்த மாணாக்கர்களுக்கும், சான்றிதழ் வழங்கிய கல்வித் துறைக்கும் தகுதி இல்லை என்று பொருளா? கல்வித் துறை, ஆசிரியர் பணிக் கென்று தனியாக பட்டயப் பயிற்சி அளித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களைத் தானே பதிவு மூப்பு மூலம் இத்தனை ஆண்டுகாலம் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்தது.
பிறகு, தற்போது எங்கிருந்து குதித் தது மேலும் ஓர் தகுதித் தேர்வு? பட்டப் படிப்பும் அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பட்டயப் பயிற்சியும் (பி.எட்) முடித்து பத்து அல்லது பதினைந்து வருடங்கள் ஆன நிலையில் தகுதித் தேர்வு என்று ஒன்றை அவர்கள்மீது திணித்தால், அதில் அவர்களால் எப்படி தேர்ச்சி பெற இயலும்?
சமூக நீதிக் கொள்கையை நேரடியாக எதிர்க்க முடியாத இன எதிரிகள், மறைமுகமாக தகுதித் தேர்வு என்று ஒன்றை திணிப்பதன் மூலம் சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புவதற்கான சதி வலையை சன்னமாகப் பின்னுகின்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகநீதி அடிப்படையில் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல், சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தில் இத்தகைய தகுதித் தேர்வினை நடத்து வது என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல னுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி அல்லாமல் வேறு என்ன? என்று சமூக நலனில் அக்கறை கொண்ட சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.
தகுதி - திறமை என்பது ஒரு மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் கூறியதில், எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை அடங்கியிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பகுத்தறிவுப் பகலவன் - தந்தை பெரியாரின் பெரு முயற்சியால் கிடைக்கப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை, நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த வகையிலும் அனுபவித்து விடக் கூடாது என்கின்ற நயவஞ்சக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்தகைய தகுதித் தேர்வினை அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்!
மேலும், இவை பெரும்பான்மை மக் களுக்கு எதிரானதும், விரோதமான தும் ஆகும் என்பதால் முற்போக்கு சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூகநல ஆர்வலர் கள், ஆசிரியர் சங்கங்கள், மகளிர் நல அமைப்பினர் ஆகியோர் மத்தியில் தகுதித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் ஒழுக்கமுள்ளவர் களாக, அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் களாக, மனிதநேயம் மிக்கவர்களாக, கட்டுப்பாடு உடையவராக இருந்தாலே ஆசிரியர் பணி என்பது அறப்பணி  யாக அமையும் என்பதே பெரும் பான்மை மக்களின் கருத்தாகவும், எண்ணமாகவும் உள்ளது.
ஆதலால், சமூகநீதிக்கு எதிராக வும், விரோதமாகவும் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழ் மண் ஏற்றுக் கொள்ளாது - அனுமதிக்காது என்பதை எடுத்துக்காட்டும் வகை யிலும்; மேலும் தகுதித் தேர்வால் ஏற்படுகின்ற இன்னல்களையும், அதில் அடங்கியுள்ள சூட்சுமத்தையும், அத னால் பெரும்பான்மை மக்களுக்கு எதி ராக இழைக்கப்படுகின்ற அநீதிகளை யும் விளக்கிடும் வகையில் இளைஞர் களும், மாணவர்களும் ஒன்றிணைநது நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே மாபெரும் பிரச்சாரப் பயணத்தை துவக்கிட ஆயத்தமாகி விட்டனர்!
ஆகவே, தமிழக அரசு சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு இவ்விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, ஆசிரியர் பணிக்காக நடத்தப்படுகின்ற தகுதித் தேர்வினை ரத்து செய்து பெரும்  பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோல ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோளாகும்.
- சீ. இலட்சுமிபதி,
தாம்பரம், சென்னை - 45

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...