Friday, December 21, 2012

திராவிடத் தேசியம்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வடசென்னையில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.
திராவிடர் இயக்கத்தில் நீண்ட காலம் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவருக்கு இத்தகு விழா எடுத்தது சாலப் பொருத்தமே!
இந்த விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் சரி, பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் சரி பேசிய உரையின் மய்ய நீரோட்டம் திராவிடர் இயக்கத்தைப் பற்றியதேயாகும்.
ஏதோ வெறும் பாராட்டு விழா என்றளவில் அமைந்திடாமல், திராவிடர் இயக்கத்தில் மூத்த தலைவராக இருக்கக் கூடிய ஒருவருக்கு எடுக்கப்பட்ட விழா - கொள்கையை மய்யப் புள்ளியாக வைத்து கருத்துக்கள் பரிமாறப் பட்டது வரவேற்கத்தக்கதே! அதுவும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் கிளப்பப்பட்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், மூத்த திராவிடர் இயக்கத் தலைவருக்காக நடத்தப்படும் விழாவில் அதுகுறித்த கருத்தினைப் பட்டாங்கமாகத் தெரிவிப்பதுதான் சரியானது. அந்தச் சரியான கடமையை நேற்றைய விழா ஆற்றியிருக்கிறது என்பதில் அய்யமில்லை.
திடீரென்று இந்தச் சர்ச்சையை ஏற்படுத்தி யவர்களுக்கு ஏதோ ஓர் உள் நோக்கம் இருக் கிறது. ஆரியர் - திராவிடர் என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை, வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள்தான் கூறி வந்தனர்.
பார்ப்பனர்கள் கூறி வந்த இந்தக் கருத் தினைத்தான் தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொண் டவர்கள் கடன் வாங்கிக் கொண்டுள்ளனர்.
உண்மை என்னவென்றால் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே ஆரியர் - திராவிடர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
திராவிடரா - தமிழரா என்ற வார்த்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் தமிழ்த் தேசியத்தில் பார்ப்பனர்கள் பற்றிய அவர்களின் புரிதல் என்ன என்பது தான் முக்கியம்.
பார்ப்பனர்களைத் தமிழர்களின் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இந்த இனத்துக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டனர்.
இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர் களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
திராவிடர் இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை முன்வைத்து எதிர்த்துப் போராடியதன் விளை வாகத்தான் பார்ப்பனர் அல்லாதார்களுக்கு சிவில் உரிமை, கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்தன.
சமூக நீதி என்னும் அருட்கொடையைப் பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கச் செய்தது திராவிடர் இயக்கமே.
இதனை மறந்து விட்டு, தமிழ்த்தேசியம் என்ற பெயரால் பார்ப்பனர்களை வாரி அணைத்துக் கொள்ளத் துடிப்பது சமூக நீதிக்கு வெட்டப்படும் ஆழமான குழியாகும்.
தமிழ்த் தேசியவாதிகளைப் பார்ப்பன ஊடகங்கள் தாங்கிப் பிடிப்பதற்கே காரணம் - இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி, தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் என்கிற அமைப்பை அரசியல் ரீதியாக உருவாக்கத் துடிப்பவரும் ஒரு தமிழ்த் தேசியவாதியே! தாழ்த்தப்பட்டவர் களை விலக்கி, பார்ப்பனர்களை அரவணைத் துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா? இந்த ஆபத்தைப் புரிந்து கொள்வீர்!
Adobe Flash Player not installed or older than 9.0.115!
Get Adobe Flash Player here


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...