Thursday, November 1, 2012

மதிமயக்கம் என்பது இதுதானோ?


- ஊசி மிளகாய் -


தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளைபோல நடத்தப்பட்டு வருகிற ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தில் பேசும்போது பெரிய பெரிய தத்துவங்களையும், அருளுபதேசங் களையும் கூட உதிர்த்திருக்கிறார்! தினமணியில் (23.10.2012) படத்துடன் வெளிவந்துள்ளது.


தாய்மையின் பெருமையை இந்து மதம் எவ்வளவு உயர்த்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று சிலாகித்திருக்கிறார் - கேலி சித்திரக்காரர்.

பெண்களைப் பாப யோனிகள் என்று வர்ணித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதம் எது மதி அவர்களே? கண்ணனின் கீதை தானே அதைச் சொல்லுகிறது?

அதுமட்டுமா? பாரதத்தில் இன்னும் எப்படி யெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் படிக்கவேண்டாமா?

தாய்மையை ஹிந்து மதம் மதித்திருந்தால் அவதார புருஷன் இராமன் தனது மனைவியை தீக்குளிக்க வைத்திருப்பானா? இவன் கால் பட்டவுடன் கற்பைப் பறிகொடுத்த அகலிகைக்கு சாப விமோசனம் வரும்போது, இன்னொரு காலின்மூலம் எளிதில் சீதையை கற்பு திரும்பிய வராக சந்தேகத்திற்கு அப்பால் ஆக்கியிருக் கலாமே - நெருப்பில் குளித்துவரக் கட்டளை தேவையில்லையே!

நிறைமாத கர்ப்பணி சீதையை காட்டுக் கனுப்பிய இராமனைக் கடவுள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இராமாயணம் தானே இந்து மத இதிகாசம் எல்லாம்?

இதுமட்டும் பழைய காலத்தைவிட்டுத் தள்ளுங்கள் எங்கள் மாதாஜிக்களை பாருங்கள் என்று ஹிந்து மத இதோபதேசம் செய்யும் மதி மன்னர்களே!

இராஜஸ்தானத்தில் கணவன் இறந்தவுடன் 26 வயது கூட நிரம்பாத ரூப்கன்வார் எனும் பெண்ணை கணவனுடன் வலுக்கட்டாயமாகக் கட்டி, எரித்துக் கொன்று, தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு காணும் பா.ஜ.க. ஆட்சியில் - சதிமாதா கோவில் கட்டி  வழிபடும் ஸ்தலமாக்கியுள்ளார்களே, அதுதான் ஹிந்து மதம் தாய்மையைப் போற்றுவதற்கான அடையாளமா?

திருவிளையாடல் புராணத்தில் தன் தாயையே மனைவியாக அனுபவித்த (அருவருப்பான கதை) பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்த மாபாதகம் தீர்த்த படலம் பற்றி படித்துள்ளீர்களா?

அதையும் தாங்கள் ஓவியமாக்கலாமே! இன்னொரு கருத்திலும் சர்வமதவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார்.

கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் சொன்னாராம், தமிழ் இறைமொழி; ஆங்கிலம் வர்த்தக மொழி என்று. இறைமொழியான தமிழ், வர்த்தக மொழியான ஆங்கிலம் இரண்டையும் நாம் புறக்கணித்துவிட முடியாது!

நாம் இறைவனிடம் தாய்மொழியான தமிழில் வேண்டுகிறோம். கீதையில் கிருஷ்ணன் கூறியதுபோல், கடமையைச் செய்யவேண்டும்; அதற்கான பலனை இறைவன் கொடுப்பான் என்று கூறுபவர்; கிருஷ்ணன் எந்தக் கடமையைச் செய்ய இப்படி உபதேசித்தான் என்பதை கீதையின் மறுபக்கம் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தால் புரியும்!

இறைமொழியாக தமிழில் கோவிலில் மந்திரங்கள் சொல்லக் கூடாது என்று கூறி உங்கள் தினமணி ஏட்டில் - 20.10.2012 (நான்கு நாள்களுக்கு முன்பு) கோவில்களில் தமிழ்; காந்திஜி கூறியதென்ன? என்று ஒரு கட்டு ரையை நடுப்பக்கத்தில் வெளியிட்டு, சமஸ் கிருதத்தில் மந்திரம் கோவில் வழிபாடு இருக்க வேண்டும்; தமிழ் வேண்டும் என்று கூறுவது கூடாது.

கோவில் பூஜைகள், குட முழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆத்திகத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர்!

சங்ககாலத் தமிழ்ப் புலவர்களோ, சைவ சமயத் திருக்குரவர்கள் நால்வருமோ அல்லது வேறு யாருமோ வடமொழி வழிபாட்டை ஆட்சேபித்த தாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங் களில் தாய்மொழி அபிமானிகளோ, மலை யாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை என்று கூறி, காந்திஜியைத் துணைக்கு அழைத்தனர். கோவில்களைப்பற்றி அவை விபச்சார விடுதிகள் என்று சொன்னவர் காந்தியார் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அதை உங்கள் ஏடு மகிழ்ச்சி பொங்க - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறுத்து மகிழ்ந்ததைப்போல வெளியிட்டுள்ளது!

மதி அவர்களே, நீங்கள் தினமணியில் எந்தக் கட்சி? தமிழா, சமஸ்கிருதமா? அல்லது இறைவன் விட்ட வழியா?

மதியை மதிக்கலாம்; ஆனால், பரிதாபத்திற் குரிய மதியின் மதி, மதிக்கக் கூடிய நிலையில் இல்லையே!

அந்தோ பரிதாபம்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...