Thursday, November 1, 2012

புரோகிதன்


கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே செல்ல முடியும். அவர்கள் தான் அர்ச்சனை  செய்ய உரிமை பெற்றவர்கள் - தகுதி உடையவர்கள் - ஆகமங்கள் அப்படித்தான் கூறுகின்றன என்று வக்கணைப் பேசும் பார்ப்பனர்களைக் காண முடிகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வகையில் வாதாடுகிறார்கள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில்கூட சொல்லு வார் ராத்திரி பூராவும் மாமா வேலை செய்துவிட்டு, காலை யில் அர்ச்சகனாகப் பணி யாற்றுகிறானே! என்று கூறுவதுண்டு.

இப்பொழுது அதையும் தாண்டி புரோகிதப் பார்ப் பனர்களும், அர்ச்சகப் பார்ப் பனர்களும் தனி ஒழுக்கம் ஏதுமின்றி தண்ணீர் ஒழுக் கத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

பவானி கூடுதல் துறை யில் இறந்தவர்களுக்காக ஆத்மா(?) சாந்தி அடைய பரிகாரப் பூஜைகள் (திவசம், கருமாதி முதலியன) நடத்தப் பட்டு வருகிறது.

அங்கு புரோகிதராக இருந்து வந்தவர் தம்மிடம் வந்த திருப்பூர் குடும்பத்தினரை மற்றொரு புரோகிதரான சீனிவாசன் என்பவரிடம் அனுப்பி வைத்தார்.

அந்தப் புரோகிதப் பார்ப் பான் சரியான குடி போதை யில் பெருங்குடி மகனாக உருண்டு கிடந்திருக்கிறார்.

இறந்து போன தங்கள் பெற்றோர்களுக்கு தடபுட லாக விருந்து பார்சலை அனுப்ப வந்த திருப்பூர் குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். விஷயம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் நடராஜ் என்பவருக்குச் சென்றது.
அதனைத் தொடர்ந்து இரு புரோகிதப் பார்ப்பனர் களையும் அந்த அதிகாரி தற்காலிக வேலை   நீக்கம் (Suspension) செய்துள் ளார்.
(ஆதாரம்: மாலை மலர் ஈரோடு பதிப்பு - 29.10.2012 முதல் பக்கம்)

குடிக்கும் - பார்ப்பானுக் கும் நெருக்கமான உறவு உண்டு என்பது தெரிந்தது தான். அவர்கள் சுரா பானம் குடித்ததனால் சுரர் என்று அழைக்கப்பட்டனர். திராவி டர்கள் குடியை மறுத்ததால் அசுரர் (சுரர் என்பதற்கு எதிர்ப்பதம்) என்று புராணங் களிலும், வேதங்களிலும் எழுதி வைத்து விட்டனர்.

இது புரியாமல் குடிகாரப் பார்ப்பனர்களாகிய சுரர் களை ஒழுக்கவான் என்றும், குடிக்க மறுத்த மக்களை அசுரர்கள் என்றும் கூறி அவர்கள் ஒழுக்கம் கெட்டவர் போலவும் தலைகீழாகப் புரட்டிவிட்டனர்.(பகுத்தறிவைப் பயன்படுத்தாவிட்டால் இதுபோன்ற புரட்டல் உருட் டல்களுக்குப் பலியாக வேண்டியதுதான்)

காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயிலுக்கு வந்த பெண்க ளிடம் கர்ப்பக் கிரகத்திலேயே உடலுறவு கொண்டான்; அவற்றைப் படம் பிடித்தும் வைத்திருந்தான் என்பதும் சாதாரணமா?

இந்த யோக்கிதையில் உள்ள பார்ப்பனர்கள் கர்ப்பக் கிரகத்தில் உள்ள சாமி சிலைகளைத் தொடலாமாம்; அர்ச்சனை செய்யலாமாம்; முறைப்படி பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் ஒழுக்கவாதிகளாக இருந்தா லும் பிறப்பின் காரணமாக கர்ப்பக் கிரகத்திற்குள் போகக் கூடாதாம்! அப்படி போனால் சாமிக்குத் தீட்டுப் பட்டு விடுமாம். இந்தப் பார்ப் பனீய பம்மாத்தை உடைத்து எறிய வேண்டாமா?
  - மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...