Tuesday, September 4, 2012

கீதை புகழ் பாடுகிறார் தமிழக முதல்வர்!


தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த வொரு மதப் பண்டிகையையும் விடுவதில் லை. அரசின் சார்பாக அதற்கு வாழ்த்து தெரிவித்துவிடுவார். கிருஷ்ண ஜெயந் திக்கும் அப்படியாகவே அறிக்கை வெளி யிட்டிருக்கிறார்.
இந்திய அரசு மதச்சார்பற்றது என்று அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள் ளது. இதன் அர்த்தம் மதம் என்பது குடி மக்களின் தனிப்பட்ட விவகாரமேயன்றி, அரசு அதில் சம்பந்தப்படாது என்பதாகும். ளநஉரடயச எனும் அந்த ஆங்கிலச் சொல்லுக்கு மதத்தோடு சம்பந்தப் படாதது என்றுதான் வெப்ஸடர் ஆங்கிலப் பேரகராதி பொருள் தந்துள்ளது. ஆனால், மத்திய ஆட் சியாளர்களோ-காங்கிரசார் என்றாலும், பாஜகவினர் என்றாலும்-இதற்கு சகல மதங்களையும் சமமாக நடத்துவது என்றே அர்த்தப்படுத்தி அப்படியாகவே நடந்து வந் தார்கள். இது அர்த்தம் அல்ல, அனர்த்தம்.
பெரியார் கேட்டார்: ஆங்கிலத்தில் எசைப என்றொரு சொல் இருக்கிறது. இதன் பொருள் ஆணோடு சம்பந்தப்படாத பெண் என்பதுதானே தவிர, சகல ஆண் களையும் சமமாக பாவிப்பவள் என்றா சொல்லுவீர்கள்? உண்மையில் மதச் சார்பற்றது என்பதை சகல மதச்சார் பானது என்று ஆக்கி விட்டார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.
அவர்கள் வழியில் தீவிரமாகச் செல் கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதிலே இவர் நடத்தும் கட்சியின் பெயர் அண்ணா திமுக., தங்களுடையது பெரியார் -அண்ணா பாரம்பரியம் என்று சொல் லிக்கொண்டு, அவர்களது படங்கள் மேடையின் பின்னணி திரைச்சீலையில் இடம் பெறுகின்றன. அப்படிப்பட்டதொரு கட்சியின் ஆட்சி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக் கும் என்று பாவம், அவர்கள் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள்!
புராணங்களையும், இதிகாசங்களை யும் பெரியாரும் அண்ணாவும் எப்படி யெல்லாம் விமர்சித்து எழுதினார்கள், பேசினார்கள் என்பதைத் தமிழகம் அறியும். அவர்கள் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் முதல்வரோ பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறி முறையைக் கண்ணபிரான் உலகிற்கு எடுத்துரைத்தார் என்று கீதையையும் புகழ்ந்திருக்கிறார்.கீதை பற்றி பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எத் தகைய கருத்துக்களைக் கொண்டிருந் தார்கள் என்பதை அம்மையார் அறியார் போலும்.
யுத்த களத்தில் மனச் சோர்வு கொண்டு அர்ச்சுனன் தளர்ந்து நின்றபோது, அவனுக்குத் தைரியம் கொடுக்க கிருஷ்ணன் கீதையை உபதேசிக்கிறான். அர்ச்சுனனுக்கு ஏன் மனச்சோர்வு வந்தது தெரியுமா? போரில் சொந்தபந்தங்களைக் கொன்றுவிட்டால் மணம்புரிய ஆண்கள் இன்றி தனது ஷத்திரிய குலப்பெண்கள் இதர வருணத்து ஆண்களேடு சேர்ந்து விடுவார்களே, வருணதர்மம்- சாதியக் கட்டுமானம்-குலைந்து போகுமே என்பதுதான் அவன் கவலை. கீதையின் முதல் அத்தியாயத்தின் சுலோகங்கள் 40 முதல் 43 வரை இதையே விவரிக்கின்றன.
இதற்கு கிருஷ்ணன் இரண்டுவித மாகத் தேறுதல் சொல்கிறான். முதல் வகை தத்துவரீதியானது. இரண்டாவது வகை காரியார்த்தமானது. மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர ஆன்மாவிற்கு அல்ல; எதிரே இருக்கும் சொந்தபந்தங்களின் உடல்தான் அழி யுமே தவிர அவர்கள் - அவர்களது ஆன்மாக்கள்-அழியமாட்டா, எனவே கொல்லு என்பது. யுத்தத்தில் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று ஆராய்ந்து அதை நடத்து அல்லது நடத்தாதே என்று சொல்லாமல், ஆன்மா அழியப் போவ தில்லை. ஆகவே நடத்து என்றான்.
இதிலுள்ள ஆபத்து என்னவென்றால் இந்தக் கருத்தியலைக் கொண்டு நியாய வான் ஒருவனும், அநியாயக்காரன் ஒரு வனும் தத்தம் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்க முடியும். ஆன்மா அழிவற்றது எனும் தைரியத்தில் காந்திஜி ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி னார். அதே தைரியத்தில்தான் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றான்! இரு வரையும் உத்வேகப்படுத்தியது ஒரே கீதை!
இரண்டாவது வகைத் தேறுதல் காரியார்த்தமானது என்பது எப்படி என்றால் வருண தர்மம் ஒருபோதும் அழியாது, அதை உருவாக்கியது தானே, அதற்கு ஆபத்து வரும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்று தைரியம் சொன்னது.
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று ஆரம்பமாகிறது அத்தியாயம் நாலின் சுலேகம் 13. குணத்துக்கும், செய்கைக்கும் தக்கபடி நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன. உருவாக்கியவன் நானே என்றாலும் அவற்றை மாற்றிச் செயல்பட வைக்க என்னாலும் முடியாது என்பதை அறிந்திடு என்பது அதன் முழு அர்த்தம்.
இது மிகவும் வினோதமானது. வருணாசிரம அமைப்பை பகவானே உருவாக்கினார் என்றது மட்டுமல்லாது, அதை அவரே நினைத்தாலும் மாற்றி யமைக்க முடியாது என்று அவரை விட்டே சொல்ல வைத்தது! உருவாக்கிய ஒன்றை மாற்ற முடியாத அளவிற்கு பலவீனமான வரா பகவான்? அப்படிப்பட்டவர் எப்படி பக வான் ஆவார்? - இப்படிக் கேள்விகள் எழலாம். இது பற்றியெல்லாம் கவலைப் படாது, வருணாசிரம அமைப்பு நிரந்தர மானது, அதை யாராலும் மாற்றியமைக்க முடியாது எனச் சொல்வதே கீதாசிரி யனின் நோக்க மாக உள்ளது.
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி தானே வருணப் பாகுபாடு என்று கிருஷ் ணன் கூறியிருக்கிறான் என்று நினைக்க லாம். குணம் - செய்கை என்பதெல்லாம் ஒரு மனிதன் பெரியவனான பிறகுதான் தெரியவரும். ஆனால், வருணப் பாகு பாடோ பிறந்தவுடனேயே வந்தது, பெற் றோரின் வருணத்திலிருந்து வந்தது. குணம், செய்கையின் அடிப்படையில் அது முன்னமே-பரம்பரை பரம்பரையாக - நிச்சயமாகிப்போன விஷயம். இப்போது தந்தையின் வருணமே பிள்ளையின் வரு ணம். இதுதான் இந்த சுலோகத்திற்கு அர்த் தம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறியிருக்கிறார் அவரது தெய்வத்தின் குரல் நூலில். இதற்கு மேல் அப்பீல் உண்டோ?
இன்னும் சந்தேகம் இருந்தால், அத்தி யாயம் ஒன்பதின் சுலோகம் 32 அய்ப் படித்துக் கொள்ள வேண்டும். அதில் பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்த வர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லப் பட்டுள்ளது. பாபயோனய எனும் சொற்கள் அங்கேயிருந்து நம்மைக் காலங்காலமாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன.
இப்போதும் சந்தேகம் நீங்கவில்லை யென்றால் அத்தியாயம் பதினெட்டின் சுலோகங்கள் 41 முதல் 44 வரை படி யுங்கள். அதில் ஒவ்வொரு வருணத்தவ ருக்கும் இவைதாம் கடமைகள் என்று கிருஷ்ணன் வரையறுத்துச் சொல்கிறான். இதை மீறக்கூடாது எனும் மிரட்டல்தொனி அவற்றில் பட்டவர்த்தனமாக உள்ளது. அந்தக் கடைசிச் சுலோகம் இப்படி முடி கிறது- பணிவான தொண்டூழியம் செய்வதே சூத்திரர்களின் இயல்பான கர்மமாகும்.
கீதையில் வரும் கர்ம யோகம் பற்றிப் பிரமாதமாக வைதீகர்கள் பேசுவார்கள். அது விதித்துள்ள கர்மம் இதுதான். அங்கு தர்மம் பற்றியும் அடிக்கடி பேசப் படும். அந்த தர்மம் வருணதர்மமேயன்றி வேறில்லை. அந்த தர்மம் குலைந்து விடக்கூடாது என்றே அர்ச்சுனன் கவலைப்பட்டதை அறிவோம். அவனுக்கு கிருஷ்ணன் முடிவில் காரியார்த்தமான தைரியம் சொன்னான். அது தான் அந்தப் புகழ்பெற்ற சம்பவாமி யுகே யுகே சுலோகம். அதன் முழு அர்த்தம்: பார்த்தா! எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போ தெல்லாம் நான் அவதரிக்கிறேன்.
இதுதான் கீதையின் சாரம். இதுதான் கிருஷ்ணனின் அவதார மகிமை. கிருஷ்ண ஜெயந்தியையும் கீதையையும் இந்துத்துவாவாதிகள் போற்றிப் புகழு கிறார்கள் என்றால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. உள்ளடக்கம் தெரியாமல் ஏதோவெரு பண்டிகை என்று பாமர இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆனால், சகல குடிமக்களின் வரிப் பணத்தில் இயங்குகிற ஓர் அரசின் முதல்வர் ஏன் கிருஷ்ணனைப் புகழ வேண்டும், கீதையைப் போற்ற வேண்டும்? இது அரசியல் சாசனப் பிரகடனத்திற்கு எதிரானது, அவரது சொந்த திராவிட இயக்கப் பாரம்பரியத்திற்கு முரணானது, நாட்டில் எழுந்து வரும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு - சம தர்மச் சிந் தனைக்கு முற்றிலும் விரோதமானது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிருஷ்ண பக்தி இருக்கலாம். ஏன் அவரது கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகக் கூட அதை மாற்றலாம். அது அவருடைய சொந்த விவகாரம், அவருடைய கட்சி யினுடைய உள் விவகாரம். அவருடைய இஷ்டத்திற்கு அதிமுகவை ஆட்டி வைக்கலாம். ஆனால் தமிழக அரசின் முதல்வர் என்ற வகையில், அவர் இப்படி அறிக்கை விடும்போது விஷயம் ஆறரைக் கோடித் தமிழர்களையும் அதில் இழுத்து விடுவதாக ஆகி விடுகிறது. அதற்கான அதிகாரம் அம்மை யாருக்கு கிடையாது.
அதனால்தான் நமது அரசியல் சாசனத்தில் அரசு மதச்சார்பற்றது என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் அம்மையார் கிருஷ்ண ஜெயந்தி கொண் டாடலாம். ஆனால், அவர் அரசு கொண் டாடக்கூடாது என்பது. இது இந்துப் பண்டிகைக்கு மட்டு மல்ல, எல்லா மதப் பண்டிகைகளுக்கும் பொருந்தும்.
- அருணன்
நன்றி: தீக்கதிர் 11.8.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...