Monday, September 24, 2012

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு


புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு
...... இந்துக்கள் என்போர்களின் தெய்வங்கள் என்பவை முழுவதும், அதாவது பிள்ளையார் முதல் பிரணவ சொரூபம் வரை அப்புராணக் கூற்றில் கற்பிக்கப்பட்ட தெய்வங்களாகவும், அவைகளினுடைய நாமங்களும், ரூபங்களும், குணங்களும், செய்கைகளும் எல்லாம் அப்புராணக் கூற்றைக் கொண்டதாகவும் காணப்படுவதும் அதற்கு மக்கள் செய்யும் பூசனை, வேண்டுதல், உற்சவம் முதலிய யாவும் கற்பனைகளையே ஆதாரமாகக் கொண்டதாக ...... பொதுநோக்கில் நன்று சுருதி, யுக்தி, அனுபவம், சையன்ஸ் ஆகியவைகளுக்கு ஒத்த முறையில் நின்று புராணக் கூற்றை ஆராய்வோம்.
பெரியார், புராணம் என்பதன் முன்னுரையில் திராவிடர் கழக வெளியீடு, பத்தாம் பதிப்பு 1999.
கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சாணிப் பிள்ளையாராக இருந்த ஒன்றை அரசியல் பிள்ளையாராக, தேசியப் பிள்ளையாராக, இந்து வகுப்புவாதப் பிள்ளையாராக மாற்றியவர் தீவிரவாதி என்று புகழப்படும் (?) பாலகங்காதர திலகர். 1898 ஆம் ஆண்டு அவர் விநாயக சதுர்த்தியை அரசியல் கணேச பூஜையாக மாற்றியமைத்து பாமரர் களுக்கு மதஉணர்வை வெறியாக மாற்றி, இந்துத்துவ அரசியலுக்கு அச்சார மிட்டார். இதைத் தொடர்ந்து சிவாஜி விழா, பசுபாதுகாப்பு அமைப்பு, தடி பயிற்சி அமைப்பு போன்றவையும் அமைக்கப்பட்டன.
விநாயகரின் வாகனமாம் எலிகள்
பம்பாய் மாநிலத்தில் பிளேக் நோய் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபோது பிளேக் நோய் (தடுப்பு) கமிஷன் ஒன்று பம்பாய் அரசால் உரு வாக்கப்பட்டது. அந்தக் கமிஷன், பிளேக் நோய் பரவுவதற்கு சுகாதார மற்ற இருண்ட இடங்களில் நடமாடும் எலிகளே காரணம் என்று கண்டறிந்து பிளேக் நோயைக் கட்டுப்படுத்த எலிகளை ஒழிப்பது அவசியம் என்று கூறியது. எலிகளைப் பிடித்து அழிப் பதற்காக பிளேக் கமிஷன் அதிகாரி களும், அலுவலர்களும் வீடுவீடாகச் சென்றனர். விநாயகப் பெருமானின் வாகனமான எலிகளைக் கொல்வது இந்துமத உணர்வைப் புண்படுத்துவ தாக அரசியல் விநாயகர்களின் பக்தர்களால் பிரச்சாரம் செய்யப் பட்டது. திலகரின் கேசரி பத்திரிகை பிளேக் கமிஷனைச் சாடியது. கலவ ரங்கள் வெடித்தன. பிளேக் கமிஷனர் ர்ண்ட் என்பவரும் அவரது துணை அதிகாரி அயர்ஸ்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். 1897இல் திலகர் கைது செய்யப்பட்டார். 18 மாதக் கடுங்காவல் தண்டனைக்கு ஆளானார்.
அன்று கணேசர்-கணேச பூஜை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கு மட்டுமல்ல, முஸ்லீம் எதிர்ப்பு வகுப்புக் கலவரங்களுக்கும் வன்முறை அரசிய லுக்கும் காரணமாக அமைந்தன. இவ்வாறு அரசியல் பிள்ளையார் 1893இல் அவதாரமெடுத்தார். இதற்கு 60 ஆண்டுகள் கழித்து 1953இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட் டத்தை நடத்தினார். மூடநம்பிக்கை களின் பிடியிலிருந்து மக்களை மீட்கும் போராட்டமாக அது இருந்தது.
மராட்டியத்தில் திலகர் கொண்டு வந்த விநாயகர் விபரீதம் சமீப காலமாக தமிழ் மண்ணிலும் பரிசோதிக்கப் படுகிறது. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள், சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள், வகுப்புக் கலவரம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சி னைகளுக்காக, காரணிகளாக மாற்றப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி சிலைகள் கரைப்ப தற்கான ஊர்வலங்கள் வன்முறைக் கலவரங்களின்றி அமைதி யாக முடிந் திருந்தன என்று நாளேடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி நாளேடு ஒன்று பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குப் போதுமான ஏரி, குளம், குட்டைகள் இல்லாமல் நில ஆக்கிர மிப்புகள் நடந்துள்ளதைப்பற்றி சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.
வக்கிர மனம்
மக்களுக்கு-மனித சமூகத்திற்குத் தேவையான நீர்வளம் வரம்பற்ற, முறையற்ற நில ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்படுகிறதே என்றுசமூக ஆர்வலர்கள்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்ற வேளையில், நில ஆக்கிரமிப்புகளால் பிள்ளையார் சிலை கரைப்புக்கு ஏற்படும் தடைகளைப் பற்றிய கவலைக்கு முன்னுரிமை தருகின்ற வக்கிரமனம் கொண்ட மதவாதிகளின் விநாயக நேயத்தை என்னவென்பது?
தியாகராய நகரில் வெடிப்புகையுடன் நள்ளிரவில்  வெளிவந்த திடீர் பிள்ளை யாரும், பால் குடிக்கும் விநாயகர்களும் அவ்வப்போது அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்துஸ் தானத்தில் கொலையும் கூட ஒரு மதச் சடங்கே-கொடுமையான வழிபாட்டு முறையின், சீரழிவான நிலையை அது எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றால், அங்கே இயற்கையின் அதிபதியான மனிதன் (வழிபாட்டின் பெயரால் அனுமன் என்ற குரங்கு மற்றும் சபலா என்று பகு ஆகிய விலங்குகளின் முன் னால் பரவசத்துடன் மண்டியிடுகிறான்.
- கார்ல் மார்க்ஸ்
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு
இர்பான் ஹமீபிள் இந்திய வரலாறு மீதான கட்டுரைகள் என்ற புத்தகம், பக்கம் 150.
மதத்தின் பெயரால் ஆறறிவுள்ள மனிதன் ஐந்தறிவுகூட இல்லாதவற் றினை, நீண்ட பருந்தினையும் நெடிய குரங்கினையும் யானை, புலி, சிறுத்தை, சிங்கம் போன்றவற்றையும், பசு, எருது, மயில், கோழி, ஏன் எலியையும் கூட தன்னைவிட பல மடங்கு சிறந்த தெய்வங்களாக ஏற்று மண்டியிட்டும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்தும் வணங்குவதில் அருவருப்புக் கொண்ட மார்க்கம், அவரது முன்னோடி ஏகலும் பிராமணீயச் சடங்குகளை, பிராமணீயத் தால் பாமர மக்களிடையே புகுத்தப் படும் மூடநம்பிக்கைகளை சீரழிவுச் சின்னங்களாகவே பார்த்தனர்.
இத்தகைய உருவ வழிபாட்டை நியாயப்படுத்தி பிராமணீயம் கூறுவது என்ன? ராமகிருஷ்ண மடத்து சுவா ஹானந்தரால் எழுதி வெளியிடப் பட்டுள்ள இந்து உருவகங்கள் (Hindu Symbology) என்ற புத்தகத்தின் சில வரிகளைப் பார்ப்போம்.
“Images are the forms of god visulised by saints and seers in their hours of communion (voith god). Art has also contributed to their beauty and richness. ..... As the image is the production of the saintly artist, every single detail of the form is expressive of some deeper universal truth.’’
துறவிகளும் ரிஷிகளும் கடவுளுடன் இணையும்போது அவர்களால் காணப்பட்ட கடவுளின் வடிவங்களே (விக்கிரக) உருவங்கள் ஆகும். கலை அதற்கு அழகையும், செழுமையையும் தந்துள்ளது...... இந்த உருவங்கள் துறவிக் கலைஞர்களின் படைப்புகளாக இருப்பதால், அவற்றின் ஒவ்வொரு நுண்ணிய அம்சமும், மிக ஆழமான உலகளாவிய உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன.
அதாவது விசித்திரமான இக்கடவு ளர் சுயம்புகள் (தன்னைத்தானே தோற்றுவித்தவர்கள்) அல்ல. துறவிகள், ரிஷிகள் போன்றவர்களால் உருவகப் படுத்தப்பட்டவர்கள். அந்த கற்பனை உருவங்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் உள் தத்துவத்தை விளக்குவதாக உள்ளதாம். மனிதன் படைத்த கடவுளரைப்பற்றி பகுத்தறிவாளர் இங்கர்சால் பின்வருமாறு கூறுகிறார்:
ஒவ்வொரு தேசமும் ஒரு கடவுளை உருவாக்கியது, அந்தக் கடவுள் அதனைப் படைத்தவர்கள் சாயலில் இருந்தது .........
இந்தக் கடவுளர்கள் எண்ணற்ற மாதிரிகளில், மிகவும் விசித்திரமான கோமாளித்தனமான வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டனர். சிலருக்கு ஆயிரம் கைகள் இருந்தன. சிலருக்கு நூற்றுக்கணக்கான தலைகள் இருந்தன, சிலர் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர், சிலரது கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன, சிலருக்கோ வாட்களும் கவசங்களும் இருந்தன, வேறுசிலருக்கு கேடயங்கள் இருந்தன, சிலருக்கு சிறகுடைய தேவதூதர்கள் இருந்தனர், சிலர் பார்வைக்குத் தெரியாமல் இருந் தனர், சிலர் எங்கும் பரவி நின்றனர், சிலர் முதுகுப் புறத்தைக் காட்டியே நின்றனர், சிலர் பொறாமைக்காரர் களாக இருந்தனர், சிலர் முட்டாள் களாக இருந்தனர், சிலர் மனிதர்களாக உருவம் ஏற்றனர், சிலர் அன்னப் பறவைகளாக மாறினர், சிலர் எருது களாயினர், சிலர் புறாக்களாயினர், சிலர் புனிதப் பிசாசுகளாயினர், சிலர் மனிதர்களின் அழகிய பெண்களுடன் மையல் கொண்டு புணர்ந்தனர். அனை வருமே மணம் புரிந்திருக்க வேண்டு மென்றாலும் சிலர் மட்டும் மணம் செய்துகொண்டனர், சிலர் ஆதியி லிருந்தே பழைய பிரம்மச்சாரிகளாக இருந்தனர், சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன, அந்தக் குழந்தைகளும் கடவுளராக மாற்றப்பட்டு அவர்களின் தந்தையரைப் போலவே வழிபாடு பெறு பவனாயினர். பெரும்பாலான கடவுளர் பழிஉணர்ச்சி கொண்டவர்களாகவும், கொடுமைக்காரர்களாக, காமம் மிகுந் தவர்களாகவும், அறிவிலிகளாகவும் இருந்தனர். பொதுவாகக் இக்கடவுளர் கள் செய்திகளுக்காக அவர்களது பூசகர்களையே நம்பியிருந்ததால் அவர்களது அறியாமை நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை.
இந்தக் கடவுளருக்கு அவர்கள் படைத்த உலகங்களின் வடிவங்கள் கூடத் தெரியாது, அவையனைத்துமே முழுமையாகத் தட்டையாக இருப்பதாக நினைத்தனர். சிலர் சூரியனை நிறுத் துவதனால் பகற்பொழுதை நீட்டிக்க முடியும் என நம்பினர்; கொம்புகளை ஊதுவதால் (கோட்டை) நகர மதில் களை இடிக்கலாமென நினைத்தனர். ஏறக்குறைய அனைத்துக் கடவுளரும் அவர்கள் படைத்த மனிதர்களின் உண்மையான இயல்புபற்றி அறிந் திருக்கவில்லை. ஆகவே தம்மை நேசிக் கும்படி அம்மக்களிடமே வலியுறுத் தினர்...... இச்சிறிய பூமியின் தோற்றம் குறித்து கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு கடவுளும் இருக்கவில்லை. அனைத்து கடவுளரும், கவலையளிக்கும் வகையில் மண்ணியல் (geology)   மற்றும் வானியல் ஞானமற்றவர்களாகவே இருந்தனர்.பொதுவாகவே அவர்கள் சட்டமியற்றுவதில் மிகவும் இழிந்த வர்களாகவும் நிர்வாகிகள் என்ற முறையில் சராசரி அமெரிக்க ஜனாதி பதிகளை விட தரங்குறைந்தவர் களாகவுமே இருந்தனர். .......... ஆமாம், அவர்கள் எப்போதுமே தங்களைப் படைத்தவர்களிடம் சார்பு கொண்ட வர்களாகவே இருந்தனர். அந்த ஒரு தலைச் சார்பினால் மற்றவர்களை கொள்ளையடிக்கவும், அழிக்கவும், அவர்களது மனைவியரையும் பெண் களையும் சீரழிக்கவும் தம்மைப் படைத்தவர்களுக்கு உதவினர்.
தங்களை நம்பாதவர்களைக் கொன்று கூறுபோடுவதைப் போன்று மகிழ்ச்சியளிக்கும் வேறு எதுவும் இக்கடவுளருக்கு இருப்பதில்லை. அதுபோன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ மறுப்பதைப் போன்று சினம் ஊட்டும் வேறு எதுவும் இருப்பதில்லை.
சில தேசங்கள் ஒரே கடவுளையே வைத்துக் கொள்ளுமளவிற்கு மிகவும் ஏழ்மையாக இருந்தன. கடவுளர்கள் மிக எளிதாகப் படைக்கப்பட்டனர்; அவர்களைப் படைப்பதற்கான கச்சாப் பொருள்கள் மிக மலிவாக இருந்தன; பொதுவாக இந்தப் போலி உருவங் களின் நெரிசலால் கடவுள் அங்காடிகள் பெருத்தும் போயிருந்தன.
- இங்கர்சால்: ‘The Gods’
கடவுளர் மனிதக் கற்பனையின் வீச்சின் அளவிலேதான் அமைந்தன. காலத்தைக் கடந்த உருவக் கடவுளைக் காண முடியாது. மனிதர்கள் இக்கடவுளரைப் படைத்தபோது எதையெல்லாம் அறிந்திருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் கடவுளரின் உருவங்கள் படைக்கப்பட்டன.
அவர்கள் அன்று படைத்த தொன்மைக் கடவுளுக்கு கற்கால ஆயுதங்களே இருந்தன. முக்காலமும் அறிந்தவராக சிறப்பிக்கப்படும் அக் கடவுளர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியையும், பீரங்கியையும், லேசர் ஆயுதங்களையும் தாங்கியிருக்கவில்லை. புலித்தோல், மான்தோல் போர்த்திய கடவுளரையும் படைத்தார்களேதவிர தைத்த சட்டை, பனியன், ஜட்டி, டிரௌசர் அணிந்த கடவுளர் இங்கே வரவில்லை. மாடு, புலி, எலியின் மீதும், புறா, மயில், கழுகு போன்றவற்றின் மீதும் பயணித்த கடவுளருக்கு, சைக்கிள் போன்றவை கூட இருக்கவில்லை. கார், பைக், டாங்க் போன்றவற்றை ஞானக்கண்ணால்கூட அறிந்திருக்கவில்லை. கோயில்களில் மறைக்கப்படாத மார்பகங்களுடன் காணப்பட்ட பெண் கடவுளருக்கு, தற்காலத்து ரவிவர்மா ஓவியங்களில் ஜாக்கட்டும், 16 முழுப் புடவையும் கிடைத்தன. எனவே, ஞானியர் கடவுளரிடம் ஒன்றியபோது பார்த்த தோற்றத்தில் உருவங்கள் படைக்கப்பட்டன என்று கதைக்கப்படும் போது, அது தெய் வீகத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களது கற்பனைகளின் சுருங்கிய எல்லைகளைத்தான் வெளிப்படுத்து கிறது. (ராமகிருஷ்ண மடத்து சுவாமி வாகானந்தா எழுதிய Hindu Symbology).
இங்கே கடவுளர்கள் கோமாளித் தனமாக, காட்டுமிராண்டிகளாக, வேடிக்கையாக உருவப்படுத்தப்படுதற்கு தத்துவார்த்தம், உள்ளார்த்தம் என்று பதவுரை பொழிப்புரை கூறுவது தெரிந்தே செய்யப்படுகின்ற மோசடி யாகும். சுவாமி சுவாஹானந்தா சிவன் கடவுளுக்குத் தரும் தத்துவார்த்தத்தைப் பார்ப்போம்.
சிவனது திரிசூலம் திரிபுராசுரனை அழித்ததாகும். அதன் தத்துவார்த்தம் ஸ்தூல, சூட்சும், நடைமுறை நாள் என்ற அகங்காரத்தை வெற்றி கொள்வதாகுமாம்.
அவரது நெற்றிக்கண் அறிவுக்கண். முக்கண்களால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் பார்க்கிறாராம்.
அவர் பயணிக்கும் எருதின் நான்கு கால்கள் உண்மை, தூய்மை, பரிவு, கொடை இவற்றைக் குறிக்கிறதாம். (சிவனது இரண்டு கால்களும், இரண்டு கண்களும், நான்கு கைகளும் எந்தத் தத்துவங்களைக் குறிக்கின்றனவோ?)
அவர் சிகை மீது உள்ள நிலவு காலத்தையும் குறிக்கும், அழிவதையும் குறிக்குமாம். அதுமட்டுமல்ல ஞானத் தின் தோற்றத்தையும் குறிப்பதாகக் கொள்ளமுடியுமாம். (எது எதைக் குறிக்கிறது என்பதில் அவர்களுக்கே குழப்பமிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது) சில வழிபாடு வேதங் களில் (ருத்ர வழிபாடாக) இருப்பதாகச் சொல்பவர்களும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிந்துவெளி முத்திரையில் காணப் படும் சிவனுக்கு (?) முக்கண் இல்லை, கங்கையில்லை, உடுக்கையில்லை, கையில் நெருப்பு இல்லை. தலையில் பிறையும் இல்லை. மாறாக இரண்டு கொம்புகள் உள்ளன. குறைகண்ட வர்கள் ஆதியில் விலங்கின் கொம்பு கூடுதல் வலிமையைக் குறிப்பதாகக் கொண்டனர். எனவே அவர்கள் அனுமா னுஷ்யமான கடவுளரைப் படைக்கும் போது அவற்றைக் கொம்புகளுடன் வரைந்தனர். கொம்புகளை இணைத்து பிறையாக மாற்றியது பல நூறாண்டுக் கற்பனை விரிவாக்கத்தின் விளைவே. மனிதர் படைத்த கடவுளர் எப்படிக் கற்பனையோ அதைப்போலவே மதவாதிகள் கூறும் த்த்துவார்த்த விளக்கங்களும் கற்பனைகளே.
இத்தகைய பசப்பலான தத்து வார்த்தங்களைக் குறித்து கைவல்ய சாமியார் கூறியிருப்பதை நினைவிற் கொள்வோம். (உண்மை இந்து மதம்-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு 2008 பக்கம் 9-10).
- தொடரும்
பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

#3 pugazhendhi 2012-09-22 21:37
பிளேக் கமிசன் அதிகாரிகள் கொலை தொடர்பான வழக்கில் சிறை சென்ற திலகரை விநாயக வழிபாடு மூலம் தேச ஒற்றுமையை மக்களிடம் விதைத்தார் என்று போற்றும் கூட்டம் உள்ளது மூட நம்பிக்கையை வளர்த்தால் நீங்களும் தேசிய தலைவராகிவிடலாம்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
#2 thamesraja 2012-09-22 19:16
mr.karunananthan, when somebody writes with vicious mind, they will only write like what peranandhan does here. mr.peranandhan are you an expert in history and knows everything what has been happening in india for 5000 years? do not think yourself toomuch brilliant? you have right to write on anything but not with vengeance against one religion or community. you can discover something and write on it. no bar for that, but not with bad intention. vedas has been there for more than 5000 years and it contains stuthis on ganesa, then how come ganesa is a concept from buddhism. budhism prohibits worshipping. then how come they have such ganapathy? as we hindus believe in whatever form we worship god, he will come to us in that form. that is it. understand.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
#1 manokaran.m 2012-09-22 16:59
நன்றி ஆ .கருநாநந்தன் அவர்களே கடவுளின் அவதாரம் மற்றும் அவர்களின் உருவாமைப்பு எப்படி காலப்போக்கில் மாறியது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கிற ீர்கள் இக்கருத்து மக்களுக்கு விளக்கப்படவேன்ட ிய விஷயம்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...