Saturday, August 4, 2012

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?


நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறி ஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.
ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.

ஆனால் நம்முடைய திராவிட ஆட்கள் என்பவர்களோ அதற்கு நேர்மாறான குணம் படைத்தவர்கள் தன் வாழ்வுக்கு தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத்தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண அனுமார்களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.
--------------------- “ விடுதலை” 8-9-1953
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆகஸ்ட் 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...