Tuesday, August 28, 2012

நாம் பெற்ற பேறு!


விடுதலை ஆசிரியருக்கான விழா விடுதலையின் முதல் வாசகரான கலை ஞர் தலைமையில் நடப்பது பொருத்தம் தானே என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னபோது கரவொலிதான்.
-கலி. பூங்குன்றன்
அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியர் பணியில் பயணித்த தலை வருக்கான கொள்கை விழா அது! வெறும் புகழ் ஒலி அங்கு கேட்கவில்லை. கொள்கை சார்ந்த வேட்டு முழக்கங்கள் தான் பெரும்பாலும் கேட்டன.
பிற்பகல் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு (25.8.2012) நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்டது.
விடுதலை ஆசிரியருக்கான விழா விடுதலையின் முதல் வாசகரான கலை ஞர் தலைமையில் நடப்பது பொருத்தம் தானே என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னபோது கரவொலிதான்.
முதலில் நான் படிக்கும் ஏடு விடுதலை என்று சொன்னவர் ஆயிற்றே அவர்.
ஆகஸ்டு 25 என்பது திருவாரூரில் 15 ஆவது நீதிக்கட்சி மாநாடு நடைபெற்ற நாள் என்று சொன்னபோதும் ஆரவாரம் தான். அம்மாநாட்டில் - நிறைவேற்றப்பட்ட முற்போக்குத் தீர்மானங்களையும் நினை வூட்டினார்.
விழாவில் பங்கேற்கும் பெருமக்களின் சிறப்பு இயல்புகளைத் தம் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
சு. அறிவுக்கரசு
அறிமுகவுரை யாற்றிய கழகத் தின் செயலவைத் தலைவர் சு. அறி வுக்கரசு அவர்கள் - ஒரு இயக்கத் திற்கு ஏடு இல் லாதது இறக்கை இல்லாத பறவைக்குச் சமமானது என்ற பீடிகையுடன் தன் உரையைத் தொடங்கினார்.
மாணவர் பருவத்தில் கலைஞர் அவர்கள் முரசொலி கையேட்டை நடத்தி யதையும், அதேபோல ஆசிரியர் அவர்கள் கடலூரில் முழக்கம் என்ற கையேட்டை நடத்தியதையும் ஒப்பிட்டுக் கூறினார்.
ரமேஷ் பிரபா
கலைஞர் தொலைக்காட்சி யின் தலைவர் ரமேஷ் பிரபா அவர்கள் கலை ஞர் அவர்கள் வீற் றிருக்கும் ஒரு மேடையில் முத லாவதாகப் பேசும் மேடை இதுதான் என்று குறிப்பிட்ட அவர், அதுவும் பகுத் தறிவு மேடையாக இருப்பது
பெருமைக் குரியது என்ற பீடிகையோடு தன் உரையைத் தொடங்கினார்.
ஒரே சொல்லில் மக்கள் விளங்கிக் கொள்ளும் தலைவர்கள் நம் தலைவர்கள் பெரியார் என்றால் - தந்தை பெரியார் தான். அறிஞர் என்றால் அண்ணாதான். கலைஞர் என்றால் நம் தலைவர்தான். பேராசிரியர் என்றால், அன்பழகன் அவர் கள்தான். அதுபோல, ஆசிரியர் என்றால் நமது விடுதலை ஆசிரியரை மட்டுமே தான் குறிக்கும் என்றபோது பெருத்த கரவொலி!
ஏடு நடத்துவதில் உள்ள சிரமத்தை தந்தை பெரியார் அவர்கள் 2.9.1937 இல் எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டி னார். இந்நிலையில் ஓர் இயக்க ஏடு - விடுதலை ஏடு 78 ஆண்டுகள் நடை பெறுவது அதிசயமே என்றும் கூறினார்.
நமது ஆசிரியர் அவர்கள் வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி பல வண்ணங்களில் விடு தலையை வளர்த்த விதத்தைப் பாராட் டினார்.
தொடக்கக் காலத்தில் கலைஞரும், நமது ஆசிரியரும் மாணவர் சுற்றுப் பயணத்தில் எவ்வளவு வசதிக் குறைவான தன்மையில் பொதுத்தொண்டில் ஈடுபட்ட தையும் எடுத்துக் கூறினார்.
தலைவர்களைப் பார்க்கும்பொழுது, இப்பொழுள்ள அவர்களின் உயர் நிலையை மட்டும் பார்த்துவிடக் கூடாது; அவர்களின் பின்னணியில் உள்ள கடந்த கால கஷ்ட நஷ்டங்களையும் கவனிக்க வேண்டும், தியாகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் - அப் பொழுதுதான் குறுக்கு வழியில் மேலே வந்துவிடலாம் என்று நினைக்கும் மனப்பான்மை இளைஞர்களை விட்டு அகலும் என்பதுதான் அவர் உரையில் தெரிவிக்கப்படக் கூடிய முக்கிய கருத் தாகும்.
(பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று எவரும் வியக்கும் வண்ணம் தம் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுவருபவர் திரு. ரமேஷ் பிரபா. தகுதி திறமை தங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டும் மனிதர் களுக்கு சவாலாக நம் தமிழர்கள் எழுந்து நிற்கவில்லையா? எம்.பி.ஏ., படித்தவர் மட்டுமல்ல; எம்.பி.ஏ. கல்லூரி ஒன்றையே நடத்தி வருகிறார். கலைஞர் தொலைக் காட்சி செய்தி னுஹஆ ழுனுஞ கணக்கீட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது; அதன் பின்னணியில் ரமேஷ் பிரபா உள்ளார் என்பதையும் வரவேற்புரையில் கலி. பூங்குன்றன் நினைவூட்டினார்).
ஏ.எஸ். பன்னீர்செல்வம்
(ஆங்கில ஊடகத் துறையில் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர் ஏ.எஸ். பன்னீர் செல்வம். உலகில் அய்ந்து நாடுக ளில் செயல்பட்டு வரும் தெற்காசிய பானோஸ் நிறு வனத்தின் (ஞயடிள ளுடிரவா ஹளயை) நிருவாக இயக்குநராக இருப்பவர். ஆசிய பத்திரிகையியல் கல்லூரியில் இணைக் கவுரவ ஆசிரியரும்கூட! மனோ தத்து வத்தில் முதுகலைப் பட்டம் பெற் றிருக்கும் இவர் 1998 இல் ஆக்ஸ் ஃபோர்டு பல் கலைக் கழகத்தில் ராய்டர்ஸ் நிறுவனத் தின் ஃபெல்லோவாக இருந்தவர் ஆவார்).
அவர் தன்னுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
விடுதலை ஆசிரியர் அவர்களை நான் சந்தித்ததில் நான்கு கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கான கருப் பொருள்கள் கிடைத்தன.
1. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மடத்தை விட்டு இரவோடு இரவாக தலைமறைவானது.
2. மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றியவை
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்பற்றியது.
4. இந்தியக் கம்யூனிஸ்டுத் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி திராவிடர் இயக்கம் குறித்து தெரிவித்த தவறான தகவலுக்கான பதில்கள்.
இந்த நான்கு பிரச்சினைகள் பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள ஆசிரியர் அவர்களுடன் ஏற்பட்ட உரையாடல் பெரிதும் துணை புரிந்தது என்று குறிப் பிட்டார்.
தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட பொருளா தார வளர்ச்சி குறித்து சரியாகப் பதிவு செய்யத் தவறியதைச் சுட்டிக் காட்டினார். கும்மிடிப்பூண்டி தொடங்கி 30 கிலோ மீட்டருக்கு ஒரு தொழிற்சாலை வளர்ந் துள்ளதையும் எடுத்துக்காட்டினார்.
இவர் உரையில் அமைந்திருந்த கருத் தினை கலைஞர் அவர்கள் தமது நிறைவு ரையில் எடுத்துக்காட்டிப் பேசினார்.
பன்னீர்செல்வம் அவர்களின் உரை யில் பொதிந்திருந்த கருத்துகள் அனை வரையும் புதியதோர் சிந்தனைக்கு உட்படுத்தின என்பதில் அய்யமில்லை.
திராவிடர் இயக்கம் பலவற்றைச் செய்திருந்தும், அவை சரியான வகையில் பதிவு செய்யப்படவில்லை என்ற சோகம் கவனிக்கத் தக்கதே!
ஆனால், பார்ப்பனர்கள் இதில் எப்படி இருக்கிறார்கள்? ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை தொழிற்கல்வி என்று சாதிக்க முற்படுவதையும் கவனிக்க வேண்டும்.
நெருக்கடி காலகட்டத்தில் தணிக்கை அதிகாரிகளான மூன்று பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
ராஜாஜி திணித்தது குலக்கல்வி என்று விடுதலை வெளியிட்டதை சிகப்புக் கோடு போட்டு அழித்துவிட்டு ராஜாஜியின் தொழிற்கல்வித் திட்டம் என்று திருத்தியதையும் இந்த இடத்தில் கோடிட்டுக் காட்டப்படவேண்டும்.
ஜெக்மோகன்சிங் வர்மா
இவர் உத்தரப் பிரதேசம் லக்னோ பல்கலைக் கழகப் பேராசிரியர் நைஜீ ரியா அமெரிக்கப் பல்கலைக் கழகங் களில் ஆசிரியரா கப் பணியாற்றிய வர், சமூக இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் - முனைவர் பட்டமும் பெற்றவர்.
சமூகநீதிக் கொள் கையில் அழுத்தம் மிக்கவர்.
அவர் தம் உரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகநீதித் துறையில் பெரியார், வீரமணி, விடுதலை ஆற்றிய, ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
பொன்னீலன்
அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் தலைவர் இவர். இவருடைய இயற் பெயர் கண்டேசு வர பக்தவத்சலம். இவரின் தந்தை யார் பெயரான பொன்னீலவடிவு என்பதில் பொன்னீலன் என்பதைத் தம் பெயராகக் கொண்டு எழுதிவரும் சிந்தனையாளர்.
சாகித்ய அகா டமி விருது பெற்ற வர். தமிழ்நாடு அரசு பரிசுகள் பல பெற்றவர் - தஞ் சைத் தமிழ்ப் பல் கலைக் கழகத் திலும் விருது பெற்றவர்.
இவருடைய நூல்கள் பஞ்சாபி, ருசிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன.
இவர் எழுதிய மறுபக்கம் எனும் நாவல் மண்டைக்காடு கலவரத்தை மய்யப்படுத்தி எழுதப்பட்டது. சங் பரிவார்க் கூட்டத்தின் நச்சு விதைகளை அலசக் கூடியது.
இதனைப் பாராட்டி 2011 டிசம்பர் 27 அன்று வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் உயராய்வு மய்யத்தின் சார்பில் இவர் பாராட்டப்பட்டு பெரியார் விருது வழங்கிப் பொற்கிழியும் அளிக்கப் பட்டது.
எத்தனையோ விருதுகள் நான் பெற்றிருந்தாலும், சமுதாய உணர்வுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நான் பெற்ற விருதினைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.
விடுதலையில் வெளிவரும் கட்டுரை கள், தலையங்கங்களை வெகுவாகப் பாராட்டிய பொன்னீலன் அவர்கள் உல கத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் தாழ்த்தப்பட்டவர் கள்மீது பரம்பரைப் பரம்பரையாகப் படிந்துள்ள அழுக்கை, தீட்டைப் போக்கவே முடியாது என்று சிருங்கேரி சங்கராச் சாரியார் கூறி இருப்பதை விடுதலை தலையங்கத்தில் படித்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிட்டார்.
நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள எங்களூரில் (மணிக்கட்டிப்பொட்டல்) திராவிடர் கழகம் இல்லாமல் இருந்தது. இப்பொழுது சில இளைஞர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். எனக்குப் பெருமகிழ்ச் சியைத் தருகிறது என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எழுத்தாளர், இலக்கியவாதியாக இருக்கக் கூடிய ஒருவர் முதலமைச்சராக இருந்தது தமிழ்நாட்டில்தான் என்று கலைஞர் அவர்களைப்பற்றிப் பெருமிதத் துடன் குறிப்பிட்டார்.
ருசியாவுக்குச் சென்றபோது, அந்தக் குழுவுடன் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களும் எங்களோடு வந்திருந்தார்.
அப்பொழுது வீதி வழியாக நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது சிலர் வீதிகளைக் கூட்டிக் கொண்டிருந்தனர்.
கிரம்ளின் மாளிகையில் உள்ளவர்கள் எந்த உடையை உடுத்திக் கொண்டு இருந் தார்களோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு உடை உடுத்தியிருந்தனர்.
நாங்கள் எல்லோரும் அந்தக் காட்சி யைக் கண்டோம் என்றாலும், ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களை ஓடோடிச் சென்று கட்டிப் பிடித்துக்கொண்டார். காமிராவை என் னிடம் கொடுத்து பொன்னீலன், இதனைப் படம் எடுங்கள்! என்று சொன் னாரே - அந்த உணர்வை என்னவென்று சொல்லுவது! என்று அவர் கூறியபோது, கூட்டத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போய் கையொலி எழுப்பினர்.
விடுதலை ஆசிரியர் கி.வீரமணி
பெரியாருக்கு நான் கிடைத்தேன் என்று இங்கே பலரும் சொன்னார்கள். உண்மையைச் சொல்லப் போனால், தந்தை பெரியார்தான் எனக்குக் கிடைத் தார். அவர்மூலம் திராவிடர் தத்துவம் கிடைத்தது, அரிய வாய்ப்பு எனக்கல்லவா கிடைத்தது என்று சொன்னது, புதுமை யானதாகவும், அதேநேரத்தில் உண்மை யாகவும் தெறித்தது.
இந்து தலையங்கத்தை எதிர்த்து எழுது - அதுதான் நம் நிலைப்பாடு என்று தந்தை பெரியார் சொன்னது வேடிக்கைக் காக அல்ல!
மண்டல் குழுப் பரிந்துரை செயல் படுத்தப்படக் கூடிய ஒரு காலகட்டம் அது. அப்பொழுது இந்து என்ன எழுதியது தெரியுமா?
Burry The Mandal Report என்று எழுதியது. விடுதலையில் என்ன எழுதி னோம்?
Hurry The Mandal Report என்று எழுதினோம். அது மிகச் சரியாகவும் இருந்தது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னபோது பலத்த கரவொலி!
விடுதலையின் வெற்றிக்கு நான் தனி மனிதன் காரணமல்ல, என்னோடு இணைந்து ஊதியம் பாராமல் பணி யாற்றும் சக தோழர்களுக்கெல்லாம் இதில் மிக முக்கியப் பங்குண்டு.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தோழர் அழகுக்கரசு, சுதர்சனம், திராவிட அரசு, நாதன், சிறுவனாக விடுதலை பணிமனையில் நுழைந்து பிறகு ஃபோர்மேன் அளவுக்கு வளர்ந்த ராதா, வெங்கடகிருட்டினன் போன்ற தோழர்களை எல்லாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என்று ஆசிரி யர் அவர்கள் குறிப்பிட்டது அவரிடத்தில் குடிகொண்டிருக்கும் நன்றி உணர்வுக் கான எடுத்துக்காட்டாகும்.
மனிதன் யார்? என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் கூறும் விடை:
நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனா வான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் ரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளே யாகும்!
(குடிஅரசு, 23.10.1943, பக்கம் 7)
கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியார் கொள்கை என்று நினைப்பவர்கள், தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கவியல் பாடத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதன் அடையாளம்தான் மறக்காமல் விடுதலையின் பயணத்தில் தங்கள் பங்கு பணியாற்றிய தோழர்களை ஆசிரியர் நினைவூட்டியதாகும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
திராவிடர் இயக்கத்தின் அருமை - அதன் செயல்பாடுகள் - கடந்து வந்த  கடும் பாதைகள் - இன்றைக்கு எதிரிகள் நம்மைக் கண்டு அஞ்சும் நிலை, விடுதலை முரசொலியின் எதிர்நீச்சல் பணிகள், பெரியாருக்குப் பிறகு தமது இளவல் ஆற்றிவரும் பணிகள் பற்றியெல் லாம் மானமிகு கலைஞர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
முத்தாய்ப்பாக பதித்த வரிகள் இதோ!
ஆசிரியர் அவர்கள் மீண்டும் நம் மோடு வந்து இன்றைக்கு அவருடைய அய்ம்பதாவது ஆண்டு விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார் என்றால், இது நாமெல் லாம் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும் (கைதட்டல்). அத்தகைய பேறு நமக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் வாழவேண்டும், எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் உண்டு. என்னைவிட இளையவர். இன்னும் நீண்ட காலம் வாழவேண் டும். வாழப் போகிறவர் (கைதட்டல்). அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டிற்கு - தமிழ்ச் சமுதாயத் திற்கு, அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணி யாற்றவேண்டும்.
அந்தப் பணிக்கு நான் இருந்தால், நானும், அவருக்கு உதவியாக இருப்பேன் என்று கூறி, இந்த விழாவில் பங்கு எடுத்துக் கொண்டதை ஒரு பெரும் பேறாகக் கருதி, அவருக்கு என் வாழ்த்துகளை மேலும் மேலும் குவித்து விடை பெற்றுக்கொள்கிறேன் என்ற மானமிகு கலைஞர் அவர்களின் முத் தாய்ப்பான உரை, அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மிகவும் நெகிழ வைத்தது - உணர்வுக் கண் ணீரை உகுத்தச் செய்தது.
பெருந்தன்மையும், தன்னடக்கமும், தன் இளவல்மீது வைத்துள்ள அளப்பரிய அன்பும், நம்பிக்கையும், ஆசிரியர் அவர் களின் அருமையையும் உணர்த்தும் உள் ளக் கிடக்கையும் அசாதாரண மானவை!
மக்கள் காட்டும் அன்பும், உற்சாகமும், கொள்கை நழுவாத் தொண்டர்களின் பண்பும், உழைப்பும்தான் நம் தலைவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கான ஊட்டச் சத்தும், அருமருந்துமாகும்! அவற்றை நாம் கொடுப்போமாக!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...