Friday, July 13, 2012

சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகையா?


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை (ந.க.எண் 037415/இ/இ1/12 நாள்: 15.6.2012) அனுப்பியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளில் சமஸ்கிருதம் பயிலும் திறனுள்ள மாணவ - மாணவியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் படிப்பு தொகையினை 2012-2013ஆம் ஆண்டில் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் நடப்பு ஆண்டில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களின் பட்டியலில் இரண்டு நகல்களை 31.8.2012 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
மத்திய அரசு சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய உதவித் தொகையை அளித்து வருகிறது என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மத்திய அரசு எவ்வளவுக் காலமாக இந்த உதவியைச் செய்து வருகிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுததே மத்திய பி.ஜே.பி. அரசு அந்தக் காலக் கட்டத்திலிருந்து இத்தகைய நிதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கவும் தோன்றுகிறது.
பி.ஜே.பி. ஆட்சி அகன்று எட்டு ஆண்டுகள் ஓடியதற்குப் பிறகும் அதே கொள்கையை மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தொடர்கிறதா? அல்லது இதில் போதிய சிந்தனையைச் செலுத்தாமல் எந்திரமயமாக செயல்படுத்தப்படுகிறதா என்பது முக்கிய வினாவாகும்.
இரண்டாவதாக இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்க, சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி உதவி செய்வானேன்? செத்துச் சுண்ணாம் பாகிப் போன  - மக்கள் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு மக்களின் வரிப் பணத்தை  செல வழிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
சமஸ்கிருதத்திற்குக் காட்டப்படும் இந்த அக்கறை மறைமுகமாக இந்தியை ஊக்கப் படுத்துவதாகும். இவையெல்லாம் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை தான்.
மத்திய அரசு பாடங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கேலி செய்வது ஒரு பக்கம் என்றால் பார்ப்பனர்களின் மொழிக்கு ஊக்கப்படுத்துவது இன்னொரு பக்கம்!
தமிழ்நாட்டு மக்கள் தூங்குகிறார்களா அல்லது விழித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று ஆழம் (குநநடநச) பார்க்கப்படுகிறதா?
பொதுவாக மத்திய அரசு, அதன் நிருவாகம் என்றாலே பார்ப்பனக் குணம் கொண்டது என்ற கருத்துண்டு. அது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் மற்ற மற்ற மாநிலங் களைவிட திராவிடர் இயக்கம் வேர்கள் பிடித்துள்ள தமிழ் மண்ணிலிருந்து பூகம்பம் வெடித்துக் கிளம்பும், எரிமலை சீறிக் கிளம்பும் எச்சரிக்கை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டிய அவசிய மில்லை என்பதே நம் கருத்தாகும்.



http://youtu.be/oZjkKzYXnfs

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...