Saturday, July 21, 2012

அய்யப்பன் பின்னணியில்...


கேரள மாநிலம் அய்யப்பன் கோயில் தொடர்பான சில பிரச்சினைகள் - நியாயமாக மக்கள் - பக்தர்கள் மத்தியில் புதிய சிந்தனை களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
1) மகரஜோதி என்பது பற்றிய முதல் பிரச்சினை; மகரஜோதி என்பது அய்யப்பன் சக்தியால் உருவாவது அல்ல; அது திட்டமிட்ட வகையில் மக்களை ஏமாற்றிட, மோசடி செய்ய செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.
தேவசம் போர்டும் ஒப்புக் கொண்டு விட்டது. சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், கேரள மாநில முதல் அமைச்சராகவிருந்த ஈ.கே. நாயனார் அவர் களே இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவராகவிருந்த ஜோசப் எடமருகுவிடம் ஒப்புக் கொண்டு விட்டார்.
மதத்தின் கோட்பாடு நாணயமுடையதாக, நேர்மை உடையதாக இருக்குமானால், மகர ஜோதிப் பித்தலாட்டத்தை நிறுத்திக் கொண் டிருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? மோசடி என்று மிக வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, அந்த மோசடி தொடர அனுமதிக்கப்படுவது எப்படி?
மதத்தின் பெயரால் எந்த மோசடியையும் செய்யலாம் என்று சட்டம் ஏதாவது நாட்டில் இருக்கிறதா? இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், உண்மையின் அடிப்படையில் மகர ஜோதியைத் தடை செய்ய ஆணை பிறப்பிக்காதது ஏன்? பக்தர்களாவது உண்மை தெரிந்த நிலையில் மகர ஜோதியைத் தரிசனம் செய்வது என்ற பெயரால் செல்லுவது எத்தகைய அறிவீனம்! பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
இரண்டாவதாக தேவபிரசன்னம் பற்றிய பிரச்சினை. சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோதிடர் உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர் தலைமையில் 21 சோதிடர்கள் தேவபிரசன்னம் மேற்கொண்டனர். பெண் ஒருவர் அய்யப்பன் திருமேனியைத் தீண்டியதாகவும், அதன் காரணமாக அய்யப்பன் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தேவ பிரசன்னத்தின் வாயிலாகக் கூறப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகை ஜெயமாலா அய்யப்பன் திருமேனியைத் தொட்டது நான்தான் என்று தானாகவே முன்வந்து கூறினார்.
இதனால் பெரும் சர்ச்சை வெடித்துக் கிளம்பியது. அய்யப்பன் கோயில் தந்திரிகள் வழக்கொன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இப்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதிலும் பொது மக்களும் பக்தர்களும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பெண் என்றால் சக்தியின் வடிவம் என்று சொல்கிறார்களே, அப்படி இருக்கும்போது ஆண் பக்தர்கள் அய்யப்பன் திருமேனியைத் தீண்டலாம், பெண் மட்டும் தீண்டக் கூடாது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது? இது குறித்துப் பெண் பக்தர்களாவது சிந்திக்க வேண்டாமா? போர்க் கொடியை உயர்த்த வேண்டாமா?
இந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் கடவுளா செய்தார்? அப்படி ஒருவர்தான் இல்லையே! இந்தப் பார்ப்பனர்கள் செய்து வைத்த சூழ்ச்சி தானே! உருவம் அற்றவன் என்று சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில் உருவத்தைச் செதுக்கி வைத்ததால் எவ்வளவுப் பெரிய குளறுபடிகள் என்று சிந்திக்க வேண்டாமா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...