Thursday, July 26, 2012

இவர்தான் சாகுமகராஜ்


சாகு மகராசர் தனது நிர்வாகத்துக் குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை! பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டு மைசூர் அரசாங்கமும் அதே ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடந்த சென்னை மாகாண அரசாங்கமும் - இதே போன்ற ஆணைகளைப் பிறப் பித்தன. பின்னர் 1925 ஆம் ஆண்டு பம்பாய் அரசாங்கமும் இதே போன்ற ஆணையைப் பிறப்பித்தது.
கோலாப்பூரில் 1894 இல் 71 அலு வலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். 1912 இல் 95 அலுவலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்! இட ஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டது.
சாதி ஒழிப்பு
பிற்காலத்தில், இரண்டாம் கட்டத்தில், சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார், சாகுமகராசர்.
தாம் சார்ந்த மராத்திய சாதியாரின் சார்பாக நின்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது, சாகுமகராசருக்கு அவர்கள் பலமான ஆதரவு அளித்தனர். ஆனால் அவரே, பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும்  உழைத்தபொழுது அவர்கள் முகம் கோணினர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர் தம் பணியைத் தொடர்ந்தார்.
தாழ்த்தப்பட்டோர்
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதில் சாகு மகராசர் தனிக் கவனம் செலுத்தினார். அவர்களுக்கு என மாணவர் விடுதி ஒன்றை நிறுவியதை ஏற்கெனவே கண்டோம்.
அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் அவர்களையும் சம மாகக் கவனிக்கவும், நடத்தவும் ஏற்பாடு களைச் செய்தார்.
நிருவாகத்தில் அவர்களைப் பணியமர்த்தம் செய்தார்
அரசுக் கல்வி நிறுவனங்களிலும், மான்யம் பெற்று வந்தவைகளிலும் சாதி யின் பெயரால் மாணவர்களைப் பிளவு படுத்திப் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆணையிட்டார்.
கோலாப்பூர் நகர சபைக்குச் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தார். தீண்டப்படாதவர் களுக்கும் போதிய இடங்களை அளித்தார். இவர் காலத்தில் முதன் முறையாகத் தாழ்த்தப் பட்டவர் ஒருவர் நகரசபையின் தலைவர் ஆனார்.
கிணறுகள், குளங்கள் முதலிய பொது இடங்களில் மற்றவர்களுடன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சம உரிமை அளித்தார். அவர்களுக்கெனத் தனியாக இருந்த பள்ளிகளை மூடிவிட்டுப் பொதுப் பள்ளி களில், எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களையும் சேர்க்கச் சொன்னார்.
தீண்டப்படாதவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி அளித்தார்
கிராமங்களில் எல்லாச் சாதியாரும் கணக்குப்  பிள்ளைகளாக (குல்கர்னி களாக) நியமனம் பெற ஆணையிட்டார். அந்தப் பதவியில் மிகப் பெரும்பான்மை யாக இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், சாகுமகராசர் அதைப் பொருட்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இந்தச் செல்வாக்கான பதவியில் அமர்ந்தனர். இந்த நடவடிக்கையால் பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.
மகர்வடன்
மகர் என்ற தீண்டப்படாத சாதியார், கிராமத்தாருக்கும் அரசுக்கும் தண்டல், தலையாரி போன்ற வகையில் அடிமட்ட ஊழியம் செய்யவேண்டும். அதற்காக அவர்களுக்குச் சிறிது நிலம் அளிக்கப் பட்டது. அதற்கு மகர்வடன் எனப் பெயர். இரவு - பகலாக எல்லா வகையான கடின மான வேலைகளையும் கட்டாயமாகச் செய்து, அதற்காக அளிக்கப்பட்ட நிலத்தில் போதாத ஊதியமே பெற்று வந்தனர். சட்டப்படி வேலையை விட்டுவிட முடியாது. இவ்வாறு வேண்டாத வகையில் மகர்கள் நிலத்தோடு இறுகக் கட்டப் பட்டனர். இந்த முறையை ஒழிப்பதற்காக 1928 ஆம் ஆண்டு முதல், அவர் இறந்த 1956 ஆம் ஆண்டு வரை அண்ணல் அம்பேத்கர் பல வழிகளில் போராடினார்; முடியவில்லை. 1958 இல்தான் சட்டப்படி மகர்வடன் முறை ஒழிந்தது. அம்பேத்கர் பிற்காலத்தில் நிகழ்த்த விரும்பிய சீர்திருத்தத்தை, சாகுமகராசர் 1918 ஜூன் 25 இல் நிகழ்த்தினார். அந்த ஆண்டில் கோல்ஹாப்பூர் அரசின் மகர்வடன் முறையை ஒழிக்க ஆணை பிறப்பித்தார். ஆணையை மீறுவோர் தண்டத் தொகை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்.
(நூல் சமூகப் புரட்சியாளர் சாகுமக ராசர் - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்)
குறிப்பு: இன்றுதான் சாகுமகராசர் முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நாள் - 1902.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...