Wednesday, May 2, 2012

தீட்சிதர் வீட்டில்


இது விடுதலையின் தலைப்பு அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் எழுதிய முதற்பக்கக் கட்டுரையின் தலைப்பு.
எப்பொழுது? இன்றைக்கு 70 ஆண்டு களுக்கு முன்பு (19-4-1942). இன்னும் சொல்லப்போனால் இந்தத் தலைப்பு அண்ணாவுக்குக் கூட சொந்தமானதல்ல.
1942 ஏப்ரல் 11, 12 நாள்களில் திரு வாளர் நடராச பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கும் தில்லையிலே - ஆம் - அந்தச் சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுய மரியாதை மாநாடுகள் நடைபெற்றன.
அந்த மாநாட்டுக்கு நன்றியுரை கூறவந்த இயக்கவீரர் எஸ்.வி.லிங்கம் அவர்கள் நன்றி உரை நவில வந்தபோது பயன்படுத்திய வாசகம் அது!
சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுயமரி யாதை மாநாடு நடப்பது என்றால், அது தீட்சதர் வீட்டிலே ஆதி திராவிடர்களுக் குக் கல்யாணம் போன்றது என்றாராம்.
அதே தலைப்பை வைத்துதான் சிதம்பரத்தில் நடைபெற்ற அவ்விரு நாள் மாநாடுகள் குறித்து அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான நடையிலே கட்டுரை தீட்டினார்.
அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்த ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனார் அவர்கள் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமானதா? அதிர்ச்சி ஊட்டக்கூடியதா? என்பது வாசகர்களின் பக்குவத்தைப் பொருத்தது.
சர் ஸ்டர்போர்டு கிரிப்ஸ்  என்பவர் இங்கிலாந்தின் அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர் - தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்.
இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த போது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க டில்லி வந்திருந் தார்.
நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் தந்தை பெரியாரும், ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனாரும் சென்றனர். கிரிப்ஸை சந்திக்க வருகின்றவர்களை யெல்லாம் படம் எடுக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவ்வாறே கிரிப்சைச் சந்தித்த தலைவர்களையெல்லாம் படம் எடுத்து ஏடுகளுக்குக் கொடுத்து வந்தனர்.
பெரியாரும், சவுந்தரபாண்டியனாரும் கிரிப்சைச் சந்திக்கச் சென்றபோது படம் எடுக்க வந்தவர்கள் - வந்தவர்கள் யார் என்று தெரிந்த நிலையில் படம் எடுக்காது சென்றுவிட்டனர். அதனைத்தான் சவுந் தர பாண்டியனார் சிதம்பரம் மாநாட்டின் தலைமையுரையில் சொன்னார்.
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஆரியர்கள் தமது இயல்பை, குரோதத்தை, விஷமத்தை, விட அவர்கள் தயாரில்லை.
அந்த மனப்பான்மை பார்ப்பனர்களை விட்டு இன்று வரை கூட ஓடி ஒளிந்துவிட வில்லை. காலம்தான் ஓடியிருக்கிறதே தவிர, காட்சிகள்தான் மாறியிருக்கிறதே தவிர, பார்ப்பனர்களைப் பொருத்தவரை கருத்துக்களில் ஏதும் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்தக் கருத்துக்கள்  கறுத்த காழ்ப்புணர்ச்சி என்னும் கனல் கட்டிகளைக் கக்கிக் கொண்டுதானிருக்கின்றன.
தமிழ் செம்மொழி என்று அரசு அறி வித்தால் ஆத்திரப்படத்தானே செய் கிறார்கள்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சட்டம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பார்ப்பனர்களுக்கு இல்லையே.
சமூக நீதி என்று சொல்லும்போது சண்டைக்கு வரும் குணம் இன்னும் மாறிடவில்லையே.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்திற்குச் செல்வதும் பார்ப்பனர்கள்தானே!
கிரிப்ஸ் காலத்திலும் சரி, அதற்கு முன் கிருஷ்ண பகவான் கிறுக்கியதாகக் கூறப்படும் கீதை காலத்திலும் சரி பார்ப்பனர்களின் கிரிமினல் குணம் மாறியதாகத் தெரியவில்லையே!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கள் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கையகப்படுத்த முயற்சித்த போதெல்லாம், நீதி மன்றம் சென்று தடையாணையைப் பெற்றுக் கொண்டுதானே இருந்தார்கள்.
அதற்கொரு முடிவை ஏற்படுத்தியவர் முதல் அமைச்சராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள்தான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்களே, யார் அப்பன் வீட்டுச் சொத்து போய்விட்டதாம். சிதம்பரம் நடராஜன் கோயில் கட்ட எந்த ஒரு பார்ப்பானும் ஒரு செங்கல் கூட எடுத்துக் கொடுத்தது கிடையாதே!
தமிழ் மன்னர்கள்தான் கட்டினார்கள். கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி கொண்டது போல தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களே!
கணக்கு வழக்குகள் சகலமும் அவாள் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டது.
அவர்கள் ஆக்கிரமிப்பில் நடராஜர் கோயில் இருந்தபோது அவர்கள் நீதி மன்றத்தில் கொடுத்த கணக்கு என்ன தெரியுமா?
ஆண்டு ஒன்றுக்கு வருமானம் : ரூ.37,199 செலவு ரூ. 37,000 போக மீதி இருப்பு ரூபாய் வெறும் 199 தானாம்!
கடவுளின் அருகிலேயே இருப்பவர் களாயிற்றே! அதுவும் தில்லை தீட்சதர்கள் யார் தெரியுமா? கைலாயத்திலிருந்து சிவ பெருமானாலேயே அழைத்து வரப்பட்ட வர்களாம்!
அப்படிப்பட்ட அந்தப் பார்ப்பனர் கள்தான் இப்படிப் பித்தலாட்டமாக நீதி மன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.
இந்தப் பித்தலாட்டம் எப்பொழுது கிழிந்தது தெரியுமா? அரசின் கைகளுக்கு சிதம்பரம் கோயில் கிடைத்த 15 மாதங்களில் வருமானம் ரூ 25,12,485,
இதற்கு விளக்கமும் தேவையா?
இத்தகைய சிதம்பரத்தில்தான் வரும் ஏழாம் தேதியன்று எழுச்சியூட்டும் மாநாடு - இன முரசு கொட்டப் போகிறது.
சுவர் எல்லாம் மாநாட்டு விளம்பரங் கள்தான் - சுவரொட்டிகள்தான் - பதாகைகள்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தில்லை யில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் பெரிய நிகழ்ச்சி.
டெசோ அதிகார பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மாநாடு சிதம்பரம் மாநாடுதான்.
கருஞ்சட்டைக் கடலே கர்ச்சனை செய்து வா! தில்லை, தீட்சிதர் வீடல்ல - தீரம் கொண்ட திராவிடர்தம் கோட்டம் என்பதை நிரூபிப்போம் வாரீர்! வாரீர்!!
- மின்சாரம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...