Monday, April 30, 2012

புதுமைச் சமுதாயம் படைக்க சூளூரை ஏற்போம்!


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் மே தின வாழ்த்து

புதுமைச் சமுதாயம் படைக்க சூளுரை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:

நாளை மேதினியெங்கும் கொண்டாடப்படும் நாளான மே நாள் என்பது உலக தொழிலாளர் உரிமைப் போர் வென்ற நாள்! இங்கே தொழிலாளர் என்றால் மனுதர்மப்படி சூத்திரன் பஞ்சமர் தான்!

இன்னும் சூத்திரப் புரட்சி வெடித்து, ஜாதி, வருண, வர்க்கபேதம் ஒழிந்த ஒரு புதுமைச் சமுதாயம் படைக்க சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டிய நாளாகும்!

அனைவருக்கும் நமது மே தின வாழ்த்துக்கள் புதியதோர் உலகு செய்ய புறப்படுவோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...