Wednesday, April 11, 2012

ஏப்ரல் 11 ஆர்ப்பாட்டம்!


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (3.4.2012) நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தின்படி தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மூன்று முக்கிய காரணங் களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்.
1. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகும். நூற் றாண்டைக் கடந்துவிட்டது. அவ்வப்பொழுது இத் திட்டத்தை நிறைவேற்றுவதுபற்றிப் பேசப்பட்டுள்ளதே தவிர, செயல்பாட்டுக்கு வந்தது கிடையாது.
திராவிடர் கழகமும், தி.மு.க.வும் பல காலக் கட்டங்களில் தீர்மானங்களை வடித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதுண்டு.
கழகம் நடத்திய பேரணிகளில் எல்லாம் இதுகுறித்த முழக்கங்களை ஒலித்ததுண்டு. கழகத்திற்கே உரித் தான சுவர் எழுத்துக்களில் சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம் முக்கிய இடத்தைப் பெற்று வந் திருக்கிறது.
இதற்காக குமரி முதல் சென்னை வரை தொடர் பிரச்சாரப் பயணத்தையும் திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது.
கடைசியாக 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தத் திட்டம் உண்மையிலேயே செயல்பாட்டுக்கு வருவதான முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு முந்தைய பி.ஜே.பி. ஆட்சியிலும் இதற் கென ஒரு திட்டம் கூட வகுக்கப்பட்டது. எந்தப் பாதை யில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என்பதற் கான ஆய்வுகளும் அப்பொழுது மேற்கொள்ளப்பட்டது. 6 ஆவது நீர்வழித் தடத்தில் இத்திட்டத்தை நிறை வேற்றலாம் என்று அப்பொழுது முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், ஏட்டளவிலேயே இத்திட்டம் முடங்கியது.
டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அமைச்சரவை யில் தி.மு.க. இருந்த நிலையில் - அதுவும் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் நல்ல வாய்ப்பால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2008 இல் அதன் வழியே உலகின் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் பயணிக்கும்; தென் மாவட்டங்கள் புத்தம் புதிய செழிப்போடு குலுங்கும் என்று ஆசையோடு இருந்த நிலையில், திடீர் ஞானோதயம் ஏற்பட்டதுபோல பி.ஜே.பி. சங் பரிவார்க் கும்பல் - ராமன் பாலத்தை உடைத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று பொய்யான அழுக்கு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினார்கள்.
உங்கள் ஆட்சியிலே தானே அந்த வழித்தடம் இறுதி செய்யப்பட்டது! இப்பொழுது எதற்காக வேறு குரலில் பேசுகிறீர்கள்? என்ற நியாயமான கேள்விக்கு அறிவு நாணயத்தோடு பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் தரப்பிலிருந்து பதிலே இல்லை.
இதற்கிடையே சுப்பிரமணியசாமி என்னும் அக்மார்க் முத்திரைப் பார்ப்பனரும், அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற இனப் பண்பாட்டுச் சொல்லையும் கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று திட்டத்தின் செயல்பாட்டை முடக்கியுள்ளனர்.
இதன்மூலம் பார்ப்பனர்கள் தமிழர்களின் முன் னேற்றத்திற்கு எப்பொழுதுமே முட்டுக்கட்டை யானவர்கள் என்பதை இன்னொரு முறை வரலாற்றில் நூறு விழுக்காடு மெய்ப்பித்துக் காட்டி விட்டனர்.
நியாயமாக இதற்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக் கூடாது. மத்திய அரசும் வலுவாக நின்று தொழில்நுட்ப ரீதியாக உறுதி செய்யப்பட்ட அந்த ஆறாவது நீர்வழித் தடத்தில் திட்டத்தை நிறைவேற்றிட முயன்றிருக்கவேண்டும்.
தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிபோல வேறு மாநிலங்களுக்கு இழைக்கப்பட்டு இருந்தால் நாடே தீப்பற்றி எரிந்திருக்கும்.
ஆனால், தமிழர்களோ எதிலும் அரசியல் எனும் தொற்றுநோய்க்கு ஆளாகி எல்லோரும் இங்கே தனித்தனிதான் என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவூட்டி நடந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் திராவிடர் கழகம் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை நடத்தும் நிலையில் வரும் 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டங் களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட உள்ளது.
கழகத் தோழர்களே, தமிழ் உணர்வாளர்களை இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்வீர்!
உரிமைக்குக் குரல் கொடுப்போம்; அடுத்து உரிய விலையையும் கொடுப்போம்!


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...