Saturday, March 10, 2012

லோகக் குரு என்றால் லோ லோ என அலைபவரா?


கேள்வி: கல்யாணத்தை திருமணம் என்றும் ஆசீர் வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம்தான் என்று பெருமிதம் கொள்கிறாரே கருணாநிதி?
பதில்: ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார். அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நேர்மையை மடத்தனம் என்றும், ஊழலை சம்பாத்தியம், என்றும், உண்ணாவிரதத்தை தமாஷ் என்றும் போலீஸ்காரர்களை கழகக்காரர்கள் என்றும், அமைச்சர்களை - கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழை வியாபாரம் என்றும் மாற்றி, இன்னும் பல மாற்றங்களையும் செய்து கடைசியாக கழகத்தை குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே அவர்கள்! - துக்ளக் 14.3.2012 பக்கம் 3
விதண்டாவாதம் என்று ஒன்றைச் சொல்லுவார்களே அது வேறு யாருக்கும் பொருந்துவதைவிட திருவாளர் சோ, ராமசாமி அய்யர்வாளுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். தமிழ் என்றால் தாண்டிக் குதிக்கும் துவேஷம் அவாளின் ரத்தத்தோடு பிறந்ததாயிற்றே!
நாமும் சொல்லக் கூடுமே! லோகக் குரு என்றால், பெண்களைத் தேடி லோ லோ என்று அலைபவர் களாகவும், காமகோடி என்றால் காமவெறி பிடித்துத் திரிபவர்களாகவும் சங்கராச்சாரியார் என்றால் ஆளை அடியாட்களை  ஏவி கொலைகள் செய்யும் தாதாக் களாகவும் அர்ச்சகர் என்றால் பக்தைகளைப் பதம் பார்ப் பவர்களாகவும், கர்ப்பக்கிரகம் என்றால் கர்ப்பத்தை உண் டாக்கும் கட்டில் என்றும் மந்திரம் என்றால் ஜொள்ளுப் பார்ட்டி என்றும் மாற்றியவர்கள் என்றும் சொல்லலாமே!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...