Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்

தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 10 -  இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண் டுமென தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி யுள்ளார். கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2009ஆம் ஆண்டு இலங்கையில்  விடுதலைப் புலிகளுக்கு எதிராக  நடைபெற்ற  உச்சக்கட்டப்போரின் போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்ஷே தலைமை யிலான  இலங்கை ராணுவம்  போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி  விசாரித்து  இலங்கை அரசின் மீது  உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  தொடர்ந்து  பல்வேறு நாடுகள்  வற்புறுத்தி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து 27-4-2011 அன்று  எனது தலைமையில் நடைபெற்ற  கழக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திலேயே  முதல் தீர்மானமாக; இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயி லாக  அமைக்கப்பட்ட இந்தோ னேசிய அரசின் தலைமை வழக்கறி ஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலை உறுதி செய் திருக்கிறது. ஏப்ரல் 25ஆம் நாளன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில்  நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசின் ராணுவம்  சுட்டுக் கொன்று விட்டதாகவும்,  போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொன்று விட்டதாகவும்,  வீராங் கனைகள் பலாத்காரம் செய்யப்பட் டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.   இந்தக் குற்றங்களுக்குக் காரணமான வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதற் குத் தேவையான அனைத்து முயற்சி களிலும் இந்திய அரசு  உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும்  வலியுறுத் தப்பட்டது.
தி.மு. கழக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே சுட்டிக்காட்டி,  1-3-2012 அன்று  நான் வெளியிட்ட அறிக்கையில் தி. மு. கழகத்தின் நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட வுள்ள தீர்மானத்தின் மீது  வாக் கெடுப்பு நடைபெறும்போது  எக் காரணம் கொண்டும்  இந்திய அரசு  இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக 2-3-2012 அன்று  நாடாளுமன்ற  கழகக் குழுத் தலைவர்  தம்பி டி.ஆர். பாலு,  இந்தி யப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து  கழ கத்தின் நிலைப்பாட்டினையும்,   உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வு களையும் எடுத் துரைத்தார்.  இன்னும் சொல்லவேண்டுமேயா னால்  2009ஆம் ஆண்டு  இலங்கை யில் இந்தக் கோரச் சம்பவங்கள் நடை பெற்றபோதே, 23-1-2009 அன்று ஆட்சியில் இருந்த தி.மு.கழகம் பேரவையில்  ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து,  கேட்டுக் கேட்டு பயன் விளையாமல் போனதால் -  இறுதி வேண்டுகோளாக முறையிடு கிறோம்;   உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து;  அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ  மலர்ந்திட ஆவன செய்திடுக!  என்று மத்திய அரசுக்கு உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுத் தோம்.    இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரி வித்திருக்கின்றன.  இலங்கையில் நடைபெற்ற  மனித உரிமை மீறல்கள் பற்றிய  ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வு களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று  மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர், திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் 8-3-2012 அன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது,  என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை.   மத்திய அரசில் இருப்போர்  அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே  தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.   அமெரிக்க நாட்டின் சார்பில் அய்.நா. சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தின் முன்பாக  தாக்கல் செய்யப் பட்டுள்ள  தீர்மானத்தில்; முக்கியமாக-

சட்டத்துக்கு முரணாக  மேற் கொள்ளப் பட்டதாகக் கருதப்படும்  படுகொலைகள் மற்றும்  ஏராள மானோர்  காணாமல் போனதாகக் கூறப்படும்  குற்றச்சாட்டுகள் குறித்து  பாரபட்சமற்ற விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும்.   சர்வ தேச சட்ட விதிகள்  தீவிரமாக மீறப் பட்டது குறித்து  இலங்கை அரசு அமைத்த குழு  போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதை யும் மனத்தில் கொள்ள வேண்டும்.  அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடை முறைப் படுத்துவதற்குரிய  ஆலோசனை களையும், தொழில் நுட்ப உதவி களையும்  அய்.நா. மனித உரிமைகள் ஆணையம்  வழங்க வேண்டும்; அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று குறிப் பிடப்பட்டுள்ளது.   எனவே அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்  கொண்டு வரப்பட்டுள்ள  இந்தத் தீர்மானத்தை -   இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும்  கடுமையானது மான  போர்க் குற்றங்கள் அனைத் தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு,  இனியும் காலம் தாழ்த் தாது,  இலங்கை அரசுக்கு எதிராக  அமெரிக்கா கொடுத்துள்ள தீர் மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக   அறிவித்திட வேண்டு மென்று  மீண்டும் ஒரு முறை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு  கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...