Monday, February 13, 2012

காட்டிக் கொடுக்கும் சு.சாமியின் கதறல்


கொழும்பு, பிப். 13- தனிப்பட்ட முறையிலோ வேறு கமுக்கமான காரியங்களுக்காகவோ இலங்கை சென்றுள்ள சு.சாமி செய்தியாளர்களிடம் கூறிய பார்ப்பனீயத்துக்கே உரித்தான தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் பேட்டி இதோ: இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். சு.சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம் வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே. இதனால் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் தோல்வியடைந் திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வி அடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாராம் சு.சாமி.


.
 2

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...