Saturday, February 18, 2012

நான் அசல் பிராமணன் அல்ல! சோ ஒப்புதல்! (3)


- கலி.பூங்குன்றன்
]
(Females activists of Durga Vahini, the women wing of Bajrang Dal are being imparted weapons and sword training at its camps for taking part in future activities against minorities.)
இந்த வன்முறைப் பயிற்சிகள் பற்றி சோவாளின் பேனா வாய் திறந்ததுண்டா?
ஆனந்த விகடனின் கேள்வி (1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பன லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல் லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?
ஒரு லாபி என்றால் அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.
மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் . . . இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தேன் நான். இவர்கள் எல்லோரும் பிராமணர்களா? அப்பொழுதெல்லாம் இந்தப் பார்ப்பன லாபி குற்றச்சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து வந்து முளைத் திருக்கிறது?
இவ்வாறு திறமையாக பதில் சொல்ல முயற்சி செய்கிறார்.
இந்தப் பதிலில் கூட நான் மனிதன் என்று சொல்ல முன்வரவில்லை; ஆம் . நான் பிராமணன் என்றுதான் அழுத்தமாகச் சொல்லுகிறார். (அசல் பிராமணன் இல்லை என்கிறார் - இதற்குள் நாம் புகுவது நமது தகுதிக்கு அழகாக இருக்காது)
அதே நேரத்தில் அசல் பிராமணன் யார்?  டூப்ளிகேட் பிராமணன் யார்? இரண்டுக்கும் இரு வேறான கல்யாண திருக் குணங்கள் என்ன? என்பதையும் அவர் விளக்கினால் நாம் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
இவர் கூற்றிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. அவர்கள் கூறும் பிராமண இலக்கணத்துக்குள் வரா விட்டாலும் பிராமணன் என்பதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதுதான் இப்பொழுது பிரச்சினையே!
அசல் பிராமணன் யாரும் இல்லை என்று முடிவான பிறகு, மாற்றங்களை வரவேற்க வேண்டியதுதானே - கலந்து விடவேண்டியதுதானே!
அசல் பிராமணன் இல்லை என்கிற போது பிராமண உரிமை எங்கே இருந்து குதித்தது?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை யென்றால், ஆகம சாஸ் திரங்களைத் தூக்கிக் கொண்டு வருவானேன்?
அது எங்கள் பிராமணருக்கு மட்டும்தான் உரியது என்று அடம் பிடிப்பானேன்? உச்சநீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவானேன்?
அசல் பிராமணன் இல்லை; ஆனாலும் அசல் பிராமணனுக்குரிய ஜாதித் திமிரும், ஜாதி உயர்வும் அந்தஸ்தும், உரிமைகளும் வேண்டும் என்றால் - அதற்குப் பெயர்தான் வருணாசிரமக் கொழுப்பு என்பது.
இல்லாவிட்டால் ஆச்சாரியார் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் என்பது வெளிப்படையாக ஆனபிறகு, காங்கிரஸ்காரர்களே அவ்வாறு கூறிய நிலையில், திருவாளர் சோ ராமசாமி அந்தக் குலக்கல்வித் திட்டத்தை 34 ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்து வாங்கி எழுதுவதன் உட்பொருள் என்ன?
ராஜாஜி கொண்டு வந்த அருமை யான கல்வித் திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் (துக்ளக் 15-.7.-1988).
இவருடைய பதிலில் காமராஜருடன் தாம் நெருக்கமாக இருந்ததாகக் கூறி, காமராஜர் என்ன பிராமணரா என்று வினா கிளப்பியுள்ளாரே, அந்தக் காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று கூறவில்லையா? ஆச்சாரியார் பதவியை விட்டு விரட்டப் பட்ட நிலையில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்த காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஏன் ஒழித்துக் கட்டினார்?
ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தை உசத்தியாகத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சோவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறோம்.
அந்தக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு அல்லாமல் ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடி னாரே - அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கும் சூழ்ச்சியின் நிறம் என்ன? அதற்கு என்ன சமாதானம்?
ஒரு அரசு என்பது கல்வியைக் கொடுக்கவா - கெடுக்கவா?
அசல் பிராமணன் இல்லையென்றாலும் அந்தப் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் மட்டும் கண் மூடித்தனமான வெறி ஏன்?
சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடியபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தாக்கினார்களே - அதனைக் கண்டித்து ஒரு வரி எழுத முன்வராததோடு மட்டுமல்ல, மாறாக என்ன எழுதுகிறார்?
ஒரு கோவிலின் வழிகாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறைக்கோ அதன் மூலம் அரசுக்கோ அதிகாரம் இருக்கிறதா? தலையிடலாம் என்றால் எதில், எந்த அளவில்? இந்தக் கேள்விகள் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளன. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் சிதம்பரம் கோவி லினுள் கனகசபையில் நின்று பாட வேண்டும் என்று சொல்வது அநீதி. (துக்ளக் தலையங்கம் 19-.3.-2008)
தமிழ்நாட்டுக் கோவிலில், தமிழின அரசர்கள் கட்டிய கோவில்களில் தமிழில் பாடினால் இந்த அய்யருக்கு பொத்துக் கொண்டு கிளம்பும் புயல் வேக சினத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் இவர் அசல் பிராமணர் அல்ல. கலப்படப் பிராமணர்தான்.
எங்கிருந்து கொண்டு பேசுகிறார்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பாடினால் நாஸ்திகம் என்கி றாரே! அந்த அளவுக்கு நம் இனவு ணர்ச்சி மரத்துப் போய்க் கிடக்கிறது!
பொது ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் துக்ளக்கில் என்ன எழுதினார்?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு (துக்ளக் 18-.11.-1988) என்று தலையங்கம் தீட்டுகிறாரே!
இவர் கூற்றுப்படி தமிழில் துதிபாடி யவர்கள் தேவாரம் பாடியவர்கள் எல் லாம் பக்த சீலர்கள் இல்லை. அப்படித் தானே?
ஒலிதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்? இப்படிக் கூறுவதற்கு இவருக்குள்ள தகுதி (Authority) என்ன? ஆதாரம் என்ன?
எல்லாம் கடந்த வல்லவரான கடவுள் கேவலம் ஒரு ஒலிக்குத்தான் மயங்குவாரா?
பார்ப்பானுக்குச் சமஸ்கிருதம் தேவைப்படும் என்றால் எதையோ சொல்லுவார்கள். இப்பொழுது ஒலியைக் கண்டுபிடித்துள்ளனர். எலும்பைப் பெண்ணாக்கியது, பாம்பு கடித்த பாலகனை மீட்டது என்ற தேவாரப் பார்ப்பனர்களின் சக்தி எல்லாம் சுத்தப் புரூடா என்று இன்னும் வெளிப்படையாக எழுதுவாரா?
தேவாரப் பாடலின் ஒலியைக் கேட்டு பகவான் அருள் புரிந்தது எல்லாம் சுத்த கப்சா என்று எழுதட் டுமே பார்க்கலாம்.
எழுதமாட்டார். ஏன் என்றால் அப்படிப் பாடியவர்கள் எல்லாம் முதுகில் பூணூல் தொங்கும் பிராம ணோத்தமர் ஆயிற்றே!
தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசு சட்டம் கொண்டு வந்தால், ஏ அப்பா, எப்படிப் பாய்கிறது இந்தப் பூணூல்?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது வழக்கத்துக்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. நமது கலாச்சாரத்துக்கு விரோதமானது (துக்ளக் 27.-12.-2010) என்று எழுதுவதில் தமிழின் மீதான துவேஷ உணர்வு துடிக்க வில்லையா?
நமது கலாச்சாரத்துக்கு எதிரானது என்கிறாரே - அது என்ன நமது கலாச் சாரம்! அந்த நமது என்பது யார்? எவ் வளவுத் தந்திரமான சொற் பிரயோகம்! பார்ப்பனக் கலாச்சாரம்தான் நமது கலாச்சாரமா?
நாரதனுக்கும் கிருஷ்ணனுக்கும் (இரு தடிப் பயல்களுக்கு) பிறந்ததுதான் 60 தமிழ் வருஷங்கள் என்பதுதான் தமிழ்க் கலாச்சாரமா?
இந்தப் பிரச்சினை பற்றி எந்த நிலையிலும் விமர்சிக்க நெருங்குவ தில்லையே _ ஏன்? அதற்குப் பெயர் தான் வெட்கம் கெட்ட பார்ப்பனீயத் தின் அறிவு கெட்ட நாணயம் என்பது!
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே, என்னதான் அ.தி.மு.க.வை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தாலும், ஒரு முறை சட்டப்பேரவையில் அதிமுக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொண்டதைக் குறித்து எப்படி ஆத்திரப்படுகிறார் இந்த அய்யர்வாள்?
கேள்வி: சட்டசபையில் அதிமுக. வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், பிராமண பாஷையில் பேசியது யாரைக் கிண்டல் செய்ய?
பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந்தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்போது! ஏன் அப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை. (துக்ளக் 22-.7-.2009 - பக்கம் 14)
தான் ஒரு பச்சைப் பார்ப்பான் - வெறியன் என்பதை இதன் மூலம் தன் குடலை அறுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு புலம்புகிறாரே திருவாளர் சோஅய்யர்வாள்?
பிராமண பாஷையைக் கிண்டலாகப் பேசியது குற்றம் என்றால் யார் பேசி இருந்தால் என்ன? கண்டிக்க வேண்டியதுதானே!
தி.மு.க.வில் யாராவது பேசியிருந்தால் கண்டித்து இருப்பாராம். சோவின் அறிவு நாணயம் அம்பலமாகி விட்டதே! ஏதோ ஆதாயத்தை எதிர்பார்த்துக் கண்டிக்கவில்லை. அப்படித்தானே!
சமஸ்கிருதத்துக்கு தமிழின் தயவால் செம்மொழி தகுதி கிடைத்தால் உச்சி குளிர்கிறது. தமிழ் மொழிக்குக் கிடைத்தால் . . .
செம்மொழி, மஞ்சள் மொழி, பச்சை மொழி என்று சொல்லி கற்காலத்துக்கு தமிழ் ஜனங்களை அழைத்துச் செல்வதில் குறியாக அலைகின்றனர். (துக்ளக்  _ 15.-10.-2008)
சங்கராச்சாரி பார்ப்பனரிலிருந்து சவுண்டிகள் வரை தமிழ் மீது எவ்வளவு துவேஷத்தை நெஞ்சில், நாக்கில் தேக்கி வைத்துள்ளனர்?
பார்ப்பனர் என்றால் நீதி, ஒழுங்கு, சட்டம் எதையும் பாராது விழுந்து புரளக்கூடிய புத்தி பார்ப்பனர்க்கே உரியது.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்  கோவில் மேலாளர் சங்கரராமன் படுகொலையில் கைது செய்யப்பட்டு 61  நாள் வேலூர் மத்திய சிறையில் தவமிருந்தார் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திரர்.
அதைப்பற்றி என்ன சொல்கிறார் இந்த சோ? சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது (இந்தியா டுடே 9-.2.-2006 பக்கம் 22).
பார்ப்பான் கொலை செய்தால் முண்டனம் செய்து விடவேண்டும். (அதாவது பார்ப்பானின் தலையிலிருந்து ஒரு மயிரை நீக்கிவிடவேண்டும்) என்ற மனுதர்மம் இன்று இல்லையே! அந்த ஆத்திரத்தில் இப்படி சட்டத்தையும், நீதி மன்றத்தையும் உதைத்துத் தள்ளி, உஷ்ணமாகப் பேசுகிறார். இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது - அவர் அசலாக இல்லாவிட்டாலும் கூட!
தமிழர்கள் பாதிப்புக்கு ஆளா கிறார்கள் என்றால் எள் முனை அள வுக்குக் கூட இதயத்தில் இரக்க நீர் சுரக் காது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எவ்வளவு குரூரமாக எழுதினார்? அதே நேரத்தில் காஷ்மீர்ப் பார்ப் பனர்கள் பற்றி இவர்களின் நிலைப்பாடு என்ன?
20-.8.-2008 நாளிட்ட துக்ளக்கில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த திருவாளர் சோ என்ன பதில் எழுதினார்?
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி, அகதி களாக டில்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டி லேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப் பட்ட கெதி நேர்ந்ததும், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலை களை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று மனம் நொந்து எழுதினாரே!
அதே நேரத்தில் ஈழத் தமிழர் களைப் படுகொலை செய்தபோது, அடித்து விரட்டியபோது இதே பூணூல் ஒரு வரி அனுதாபத்தோடு எழுதியதுண்டா?
தமிழர்கள் என்றால் ஒரு கண் ணோட்டம். காஷ்மீர்ப் பண்டிதர் களான பார்ப்பனர்கள் என்கிறபோது இன்னொரு கண்ணோட்டம். இதற்குப் பெயர்தான் பார்ப்பன இனப்பற்று என்பது.
கேள்வி: மரணமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வராஜூக்கு, தனது உடல் நலனையும் பொருட் படுத்தாது, நேரில் சென்று கலைஞர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்துள்ளது பற்றி?
பதில்: கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ்பெற்ற டி.கே.பட்டம்மாள் குறித்து ஒரு அனுதாபச் செய்தி கூட கலைஞரிடமிருந்து வரவில்லை.
(துக்ளக் 29.-7-.2009 பக்கம் 25)
டி.கே.பட்டம்மாள் பற்றி சோவுக்கு என்ன அவ்வளவு காருண்யம்? ஒன்று மில்லை. அவர் பார்ப்பனர் என்பது தான்.
இதே பார்ப்பன  ஏடுகள் பார்ப் பனர் அல்லாதார் தலைவர்கள் மறைந்தபோது  எவ்வாறு நடந்து கொண்டன?
அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறை வினை மரணமடைந்தவர்கள் பகுதியில் (Obituary) என்ற இடத்தில்தானே வெளியிட்டது அவாளின் இந்து ஏடு?
தந்தை பெரியார் மறைவுக்கு ஒரு துணைத் தலையங்கம் கூடத் தீட்ட மனம் வரவில்லையே இந்துவுக்கு?
பனகல் அரசர், மறைமலையடிகள், ஆர்.கே.சண்முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்த தற்குத் தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனிவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய ஆரிய தலைவர்களுக்கு மட்டும் தலையங்கம் எழுதக் காரணமென்ன? திராவிடத் தோஷம்!  திராவிடனே சிந்தித்துப்பார்! -(விடுதலை 16-.10.-1957)
பார்ப்பனர்களின் போக்கு எப்பொ ழுதுமே இப்படித்தான். இந்த நிலையில் டி.கே.பட்டம்மாளுக்கு கலைஞர் ஒரு அனுதாபம் தெரிவிக்கவில்லையாம்! என்னே பார்ப்பனர்களின் தளுக்கும் குலுக்கும் நிறைந்த இரட்டை வேட சாகசம்!
The above pictures are from training camps of Hindu terrorist group 'Durga Vahini'. They are famous for their theory of elimination of Sikhs and Muslims from Pakistan to make India a Hindu-only state. They have been killing Sikhs and Muslims in India and spreading their saffron terror.
வன்முறையைப் பற்றிக் கூட வாய்கிழிய பேசுவார். அது கூட ஒரு வழிப்பாதைதான்! ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் வேட்டையாடப்பட்ட போது, தன் தாயும், மகளும், சகோதரியும் தன் கண்ணெதிரே அந்தக் கயவர்களால் மானபங்கப்படுத்தப்பட்ட போது ஆயுதம் ஏந்திய போராளிகள் வன்முறையாளர்கள் - சோவின் பார்வையில்.
அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் மண் வெட்டியையும் கோடாரியையும் தூக்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்த அநாகரிக வன்முறைக் கூட்டத்துக்கு அசல் மனு தர்மப் பீலி கொண்டு விசிறிவிடுவார். இதற்குப் பெயர்தான் அவாளின் இரட்டை வேடம் என்பது.
கேள்வி: திராவிடர் கழக உறுப்பினர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப் போவதாக கி.வீரமணி அறிவித்துள்ளது பற்றி . . . ?
பதில்: ஒழுங்காக லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்திருப்பவர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால், அதில் பிரச்சினை இருக்காது. விதி முறை எல்லாம் பற்றிக் கவலைப் படாமல், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு துப்பாக்கிக் கும்பலை இவர் தயார் செய்தால், அது விபரீதத்திற்கு வழி வகுக்கும். - (துக்ளக் 24-.7.-2002)
விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு கட்டு பட்டும் நடப்பது தான் திராவிடர் கழகம். கத்தி வைத் திருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கட்டளையிட்டபோது கூட அது சட்டத்திற்குட்பட்ட அளவினை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லத் தவறவில்லை தந்தை பெரியார்.
அதே நேரத்தில் சோ ஆதரிக்கும் பி.ஜே.பி. சங் பரிவார்க் கும்பலின் நிலை என்ன?
விசுவ ஹிந்து பரிஷத்தின் சார்பில் துர்கா வாஹினி என்ற பெண்கள் அமைப்புக்குக்கூட உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த செய்தி படத் துடன் ஏடுகளில் வெளிவந்துள்ளதே. அது பற்றி எழுத சோ பேனா மூடியைத் திறந்தது உண்டா? ஒருவர், இருவருக்கல்ல.  விசுவ ஹிந்து பரிஷத் என்றால் திரிசூலங்களை தொண்டர் களுக்கு வழங்கி வன்முறைக்குத் தூபம் போடும் அமைப்பு. 5000 பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளிக் கிறது என்றால் அதன் விபரீதத்தைச் சொல்லவும் வேண்டுமா?
2000 மார்ச்சில் இது போல மது ராவில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, நாங்கள் இந்து இளைஞர்களுக்குக் காமக் களியாட்டப் பயிற்சியா அளிக்கிறோம்? எங்களுக்குக் காந்தி யின் அகிம்சையில் நம்பிக்கை இல்லை. எந்த சவாலையும் சந்திக்கத் தயார்! என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் முன்னணித் தலைவர் ஓம் கார்பாவே கூறினாரே - சோ ராமசாமி அப் பொழுது எங்கே போயிருந்தார்?
இப்படிப் பச்சையாக பார்ப்பன வெறி கொண்டு திரியும் இந்த ஓநாய் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் - இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். அப்பொழு தெல்லாம் இந்தப் பார்ப்பன லாபி குற்றச் சாட்டு எங்கே போனது? என்று சாமார்த்தியமாக எழுதுவது போல பூணூலுக்கு முத்தம் கொடுத் துப் பேசுகிறார்.
காமராஜரைப் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் கேலி செய்தார்கள்? ஏன், அவர்களின் ஆச்சாரியாரே கறுப்புக் காக்கை. அதை சுட்டுக் கொல்லவேண்டும் என்று கடற்கரையில் பேசினாரே!
பெரிய பதவி, சின்னப் புத்தி என்று கல்கி கார்ட்டூன் போட்டதே!
சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்களும், நிர்வாண சாமியார்களும் இந்தியாவின் தலைநகரில் பட்டப் பகலில் பகிரங்கமாக பச்சைத் தமிழர் காமராசரைப் படுகொலை செய்யத் துடித்தார்களே -  அதன் பின்னணி என்ன?
காமராசரிடம் நெருக்கமாக  இருந்த தாகச் சொல்லுகிறாரே! இதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? தெரியும் என்றால் குரலை மாற்றி ஏன் பேசுகிறார்? இதற்குப் பெயர்தான் அசல் பார்ப்பனத்தனம் என்பது!
ஆக இந்தப் பூணூல் காமராசரிட மும் வேடம் போட்டு ஏமாற்றியிருக் கிறது என்றுதானே பொருள்?
(நிறைவு)


.
 7

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#1 அன்பன் 2012-02-26 22:59
1967 இல் காமராஜர் மார்ஷல் நேச மணியின் மறைவால் ஏற்பட்ட, நாகர் கோவில் மக்களவைத் தொகுதியின் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து சோ.ராமசாமியின் குருவான ராஜாஜியின் சுதந்திரக் கட்சியின் சார்பில் டாக்டர் மத்தியாசு அவர்கள் போட்டியிட்டார்க ள். அப்பொழுது காமராசர் வெர்றிபெற்றுவிட ுவார் என்ற நிலையில், இதே துக்ளக் சோ.ராமசாமி அவ்ரின் இதளில், " நாடாளுமன்ற தேர்தல் இல்லை அது நாடார் மன்றத் தேர்தல்" என்று தன் கிண்டலான வயிற்றெரிச்சலைக ் கொட்டிக் கொண்டார். அப்படிப் பட்ட இவர் எப்படி காமராஜருடன் நெருக்கமாக இருந்திருக்க முடியும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...