Thursday, January 12, 2012

தமிழர்தம் அடையாளம், தமிழ்ப் புத்தாண்டு! தடம் மாறுகிறது, தமிழக அரசு!!


-முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன்
(பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர்
தினமணி 22.08.2011 நாளிட்ட இதழில் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தலைப்பில் லா.சு.ரங்கராஜன் என்பவரின் குறுங்கட்டுரை வெளிவந்தது. அதில் இந்து தர்ம மறை நூல்கள் விதித்த முறைப்படியே தமிழ்நாட்டில் பெருவாரி யான மக்கள் காலங்காலமாகப் பல பழக்க வழக்கங்களைப் பயபக்தியுடன் பின்பற்றி வருகின்றனர். அவற்றை ஒவ்வொன்றாக மெல்ல மெல்லக் குலைத்து ஒடுக்குவதற்கு, சென்ற தி.மு.க. ஆட்சியில் பல நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சித்திரை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பை, தை மாதத்திற்கு மாற்றிய அதிரடிச் சட்டம்.
... தை முதல் தேதிதான் புத்தாண்டு என்று மாநில அரசு வேண்டுமானால் வீம்புக்குச் சட்டம் இயற்றி, அரசாங்கப் படிவங்களில் அச்சடித்து அழகு பார்க் கலாம். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அச்சட்டம் கிஞ்சித்தும் செல்லுபடியாக வில்லை. ஆகவே, ஆன்மீகம் செறிந்த தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பத்தை ஏற்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை யிலான இன்றைய அ.தி.மு.க. அரசு, சித்திரை முதல் தேதியையே எப்போதும் போல் புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே அனை வரின் வேண்டுகோளாகும். என்று இன் றைய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுவதோடு அக்குறுங்கட்டுரை முடிகிறது.
அக்கட்டுரையை எழுதிய லா.சு.ரங்க ராஜனுக்கு மறுநாளே கைமேல் பலன் கிடைக்கிறது. அதாவது 22.08.2011 அன்று கட்டுரை வெளிவருகிறது. மறுநாள் 23.8.2011 அன்று தமிழகச் சட்டப் பேரவை யில் சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? தினமணி ஆசிரியருக்கே வெளிச்சம்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கொண்டு வந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது? 24.08.2011  நாளிட்ட தினமணியில் அது வெளிவந்துள்ளது.
தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்ற சட்டம் வழக்கமான நடைமுறைக்கு எதிராக உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் கள், வானியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை  அறிஞர்களும், பொதுமக்களும் ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண் டாகப் பின்பற்றுவதில் பொதுமக்களிடையே நடைமுறை இடர்ப் பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. 2008இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் காலத்தால் முற்பட்ட வழக்கத்தை மீட் டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
தினமணி கட்டுரையில் இந்து தர்ம மறை நூல்கள் விதித்த முறைப்படியே தமிழ்நாட்டு மக்கள் பயபக்தியுடன் பின் பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. கட்டுரையாளர் லா.சு.ரங்கராஜன் கருதும் இந்து தர்ம மறைநூல்கள் யாவை? அவற்றுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்து தர்மம் என்கிறாரே, அது எப்போது தோன்றியது?
ஆன்மீகம் செறிந்த தமிழ்மக்களின் உள்ளார்ந்த விருப்பம் என்று எதைக் கருதுகிறார்?
லா.சு.ரங்கராஜன் கூறும் இந்து தர்மப்படிதான் ஓர் அரசு சட்டம் இயற்ற வேண்டுமா?
ஆன்மீகவாதியான தமிழ்க்கடல் மறைமலை யடிகளார் தலைமையில் 1921 ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியில் 500 தமிழ்ப் புலவர்கள் கூடி தை முதல் நாள் தான் திருவள்ளுவர் ஆண்டு; அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவெடுத்து அறிவித்தார்களே, அதை ஏற்றுக் கொண்டு 2008 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் சட்டம் கொண்டு வந்தாரே, அதில் என்ன தவறு இருக்க முடியும்?
புதிய அரசு, 2011இல் நிறைவேற்றி யுள்ள இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறை இடர்ப்பாடுகள் எவை? தடை எது? எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது? இவற்றுக்கு என்ன பதில்? நடைமுறை இடர்ப்பாடு, தடை, எதிர்ப்பு எல்லாமே லா.சு.ரங்கராஜன் போன்றவர்களால் தினமணி மூலம் வருபவைதாமே. மற்றபடி, தொல்லியல் அறிஞர்கள், வானியல் வல்லு நர்கள், ஊடகங்கள் வாயிலாகக் கருத்தை வெளியிட்டுள்ளதாகக் கதை கட்டுவது ஏன்? சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டாகக் கொண்டாடுவது காலத்தால் முற்பட்ட வழக்கமாம். தமிழ் விரோத அரசின் புதிய சட்டம் புகல்கிறது. யார் காதில் பூச் சுற்றப் பார்க்கிறார்கள்?
சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு என்பது ஆரிய ஆபாசக் கதையை அடிப் படையாகக் கொண்டதுதானே. அதனை மீண்டும் கொண்டுவரச் சட்டம் இயற்றுவது தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட பார்ப் பனப் பண்பாட்டுப் படையெடுப்பே என்று தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி கணித்திருப்பது சரியானதுதானே.
காலத்தால் முற்பட்ட வழக்கம் என்ற பொய் முத்திரை குத்தி, சித்திரை யைத் தூக்கிப் பிடிக்க நினைக்கும் சூது மதியினரே! தெரிந்து கொள்ளுங்கள். கி.பி.78ஆம் ஆண்டில் சாலிவாகனன் என்னும் வடநாட்டு வேந்தனால் ஏற்பட்டது தான், சாலிவாகன சக வருடம் என்பது. அது பிரபவ-விபவ, பிம்ம, மோதுத எனும் 60 ஆண்டு கால வட்டமாகக் கொள்ளப் படுகிறது. இந்த 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்று கூட தமிழ்ச் சொற்கள் இல்லை. அனைத்துமே சமஸ்கிருதப் பெயர்கள்தாம். இந்த 60 ஆண்டுகளின் தொடக்கம்தான் சித்திரை முதல் நாளாம். அதைத்தான் தமிழ் வருடப் பிறப்பு (Tamil New Years Day)  என்று தவறாக வழங்கி வந்தார்கள்.
அந்த 60 ஆண்டுகளும் எப்படிப் பிறந்தன என்பதற்கு ஒரு புராணக் கதை கூட உண்டு. அது ஆபாசத்தின் உச்சக் கட்டக் கதையாகும். கண்ணன், பெண்ணாக மாறிய நாரதருடன் 60 வருடம் கூடி மகிழ்ந்து, 60 ஆண் பிள்ளைகளைப் பெற்றா ராம். (ஒன்று கூட பெண்பிள்ளை இல்லை யாம்!) அந்த 60 ஆண் பிள்ளைகள்தாம் 60 ஆண்டுகளாம். இந்தக் கதையை அடிப் படையாகக் கொண்டு அமைந்த பற்சக்கர ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை முதல் நாள். அது எப்படித் தமிழ்ப் புத்தாண்டா கும்? புதிய அரசு பகுத்தறிவோடு சிந்தித் துப் பார்த்திருக்க வேண்டாமா?
. . .  தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்! என்றும்
புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பொன்னான வரிகளையாவது புதிய அரசு எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா? எண்ணிப் பார்த்திருந்தால், இந்தப் புதுக் குழப்பத்திற்கு வழி பிறந்திருக்குமா?
நூற்றாண்டு விழாக் காணும் தமி ழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கள் கொண்டாடினார்கள்  என்று ஆணித் தர மாகக் கூறியுள்ள கருத்தையாவது புதிய அரசு கருதிப் பார்த்திருக்க வேண்டாமா?
கலைஞர் எதைச் செய்தாலும் அதற்கு நேர் எதிராக எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று எண்ணிச் செயல்படு வோருக்கு, சிந்திக்க நேரமேது?
சட்ட மசோதா தயாராகிக் கொண் டிருக்கும் அதே நேரத்தில் தினமணிக் கென்று ஒரு கட்டுரையும் அல்லவா தயா ராகிக் கொண்டு இருந்திருக்கிறது?
தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம், என்பது தமிழகத்தில் மட்டு மன்று, உலகளாவிய நிலையிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்த ஒன்றாகும். மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம் பூரில் 06.10.2001 அன்று ஒரு மாபெரும் மாநாடே நடைபெற்றது. எதற்காக தெரி யுமா? தமிழ்ப் புத்தாண்டின் தொடக் கம் தை முதல் நாளே என்பதை உலகளாவிய நிலையில் பிரகடனம் (பரிந்துரை) செய்வ தற்காகத்தான் அம்மாநாடு கூட்டப் பெற்றது. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒருங் கிணைந்து அம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.
அம்மாநாட்டில் தமிழகம், ஈழம், சிங்கப்பூர், சுவிட்சர் லாந்து, செர்மனி, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா முதலான பல நாடுகளிலிருந்து பிரதிநிதி கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். அம்மாநாட்டின் இறுதியில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று முதன் முதலாக பரந்துரை (பிர கடனம்) செய்யப்பட்டது.
30.9.2007 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியத் தமிழர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை மீண்டும் மறு உறுதி செய்து உலகப் பரந்துரை (பிரகடனம்) செய்தன. அப்பரந் துரையின் நகல்கள் அனைத்து நாட்டுத் தமிழர் அமைப்பு களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அம்மாபெரும் பரந்துரை விழாவில், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அறிவார்ந்த பார்வைக்கும் உடனடி அறிவிப்புக் கும் மலேசியத் தமிழர்களின் சார்பாக இவ்வேண்டுகோளை முன் வைக்கின்றோம். டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தி லேயே உலகத் தமிழர் களின் தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு என்னும் இவ் வேண்டுகோள் நிறைவேறட்டும் என்னும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, அன்றைய முதல்வர் கலை ஞர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டது.
தமிழக அளவிலும், உலகளாவிய நிலையிலும் ஒருமித்து எடுத்த முடிவின்படி தான், முதல்வர் கலைஞர் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றி, தமிழர் தம் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்தார்.
புதிய அரசோ எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல், சில பஞ்சாங்கப் பேர்வழி களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு, மன்னிக்க முடியாத மாபெரும் பழிக்கு ஆளாகித் தவிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை முதல் நாள்தான் என்று சட்டம் இயற்றி தகாத செயலை இன்று செய்துள்ளார்கள்.
மீண்டும் கஞைர் ஆட்சிக்கு வந்து, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்னும் சட்டத்தை மீண்டும் இயற்றி, தமிழர் தம் அடையாளத்தை மீட்டெடுப்பார். அவனியெங்கும் வாழும் தமிழர்களை அதன்மூலம் அடையாளங்கண்டு அரவணைத்து மகிழ்வோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...