Friday, January 20, 2012

இது உண்மையா? - தமிழ்நாடு தேர்வாணையத்துக்குத் தலைவர் ஒரு பார்ப்பனரா?


தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவர் பதவி (சேர்மென், தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தற்போது காலியாக உள்ளதில் ஒரு பச்சைப் பார்ப்பன அதிகாரி, ஓய்வு பெறவிருப்பவரை நியமனம் செய்யப் போகிறார்கள் என்று பரவலாக உத்தியோக வட்டாரங்களிலும், பத்திரிகை களிலும் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன!

இது உண்மையா? நமக்குத் தெரிய, இதுவரை தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் தலைவராக, மூன்று சதவிகிதம்கூட இல்லாத பார்ப்பன சமுதாய அதிகாரி எவரையும் நியமித்ததாக வரலாறே கிடையாது!

இந்நிலையில் இப்படி ஒரு விபத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தினால் அதை விட சமூக நீதிக்கு மரண அடி வேறு இருக்க முடியுமா?

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கலாமா?

முதல் அமைச்சர் அவர்களின் 69 சதவிகித சட்டம்தான்  முன்பு அவரது சாதனையில் சரித்திரம் படைத்தது.

இது மாதிரி நியமனம் செய்து - அதைத் தலைக்குப்புற கவிழ்க்கப் போகிறாரா -  என்பது சமூக நீதியாளர்களின் கேள்வியாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...