Wednesday, January 18, 2012

செய்திச் சிதறல்கள்!


ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தீமை எடுத்துக்கொண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று நாட்டிய மணி ஸ்ரீநிதி நினைப்பதில்லையாம்.
ஆனால், இவ்வாண்டு ஒரு தீமை (Theme) எடுத்துக்கொண்டு இருக்கிறாராம். அதுதான் அயோத்திப் பிரச்சினை.
நீ பொறுமையின் பிறப்பிடம். ஆனால், நீ பிறந்த இடம் இன்று பிரச்சினைக்குரியதாகி விட்டதே என்ற பாடலுக்குத் தயாராகி விட்டாராம் ஸ்ரீநிதி.
என்ன இருந்தாலும் அவாளின் பண்பாட்டைத் தூக்கி நிறுத்துவதில் அவாள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா!
இராம பக்தி என்னும் தளத்தையும் கடந்து சங் பரிவார் தடத்திற்குத் திடீரென்று பாய்ந்து விடுகிறார்கள். நம் தமிழிசை கலைஞர்கள் இதனைக் கொஞ்சம் மனதில் போட்டு ஊற வைத்து கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு இந்திரஜித்தின் வீரத்தை, இரணியனின் போர்க் குணத்தை வெளிப்படுத்தக் கூடாதா?

அய்யப்பப் பக்தர்களுக்குத் தரமான பிரசாதம் - தேவஸ்வம் போர்டு உத்தரவாதம் தரவேண்டும். அரசு கண்காணிக்கவேண்டும்.
இதன் பொருள் என்ன? பக்தர்களின் பணத்தை மட்டும் பறித்துக் கொள்ளலாம். உண்டியல் வைத்துப் பணத்தை உறிஞ்சலாம். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கும் பிரசாதம் மட்டும் தரத்தில் இல்லையென்றால், நியாயமா? டின்களில் அடைத்துக் காசுக்கு விற்கப்படும் பிரசாதம் தரக் குறைவாம். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 28 ஆயிரம் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பக்தர்களின் உயிரோடு விளையாடுகிறார்களே - யாரிடம் சொல்லுவது?
அய்யப்பனிடமா? அதுதான் கல்லாயிற்றே!


40 வயதுக்குமேல்தான் ராஜாஜியின் சிறப்பை உணர்ந்தேன்.
- தமிழருவி மணியன்
முதலமைச்சர் பதவியைவிட நான் ஒரு பிராமணன் என்ற தகுதியை நான் அதிகம் மதிக் கிறேன் என்றவர். காமராசரைக் கறுப்புக் காக்கை என்று சொல்லி அதனைக் கல்லால் அடிக்கவேண்டும் என்று சொன்னவர். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, சிரைப்பவன் மகன் சிரைக்க வேண்டும்,வெளுப்பவன் மகன் வெளுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தவர்.
இந்தச் சிறப்புகளையெல்லாம் தன் 40 வயதுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டுள்ளார் போலும்.

இனத்தின் அடையாளங்களை இனம், மொழி, ஆன்மிக உணர்வைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.  - தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதர்
இனம் சரி, மொழி சரி... அது என்ன ஆன்மிகம்?
ஜாதி - அதன் சமாச்சாரங்கள் தவிர பார்ப்பன ஆன்மிகத்தில் என்ன வாழ்கிறது?
தைமுதல் நாள்தானே தமிழ்ப் புத்தாண்டு. இதில்தானே தமிழும், தமிழரும் (இன அடையாளம்) இருக்கிறது.
தினமணி வைத்தியநாதய்யர் உள்பட வலியுறுத்தும் சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு. அந்த ஆண்டுகளின் பெயர் தமிழில் இருக்கிறதா?
பிரபவ தொடங்கி - அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு பெயர் தமிழில் உள்ளதா? இந்த இலட்சணத்தில் இனத்தின், மொழியின் அடையாளம்பற்றி தினமணி ஆசிரியர் சிலாகித்து இருப்பது - எந்த இனத்தின் அடையாளமோ!
இதே தினமணியின் ஆசிரியர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திரு. அய்ராவதம் மகாதேவன் தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறுதியிட்டுக் கூறியுள்ளாரே -
அவரை விட ஆராய்ச்சி திலகமோ இந்த வைத்தியநாத அய்யர்வாள்?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...