Saturday, December 31, 2011

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று யாராவது சொன்னால் தாயை அடையாளம் காணத் தெரியவில்லை என்று பொருள்!


சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, டிச.31- திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடர் என்று சொல்லக்கூடாது என்று இப்படிச் சொல்லுகிறவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் தாயை அடையாளம் காணத் தெரியவில்லை என்றுதான் பொருள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி உரை யாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 24.12.2011 அன்று இரவு விடுதலை சந்தாக்கள் வழங்கிய நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பெரியார் சொல்லுகிறார். உண்மை யில் நான் அக்காரியங்களில் மறை வாகவோ, வெளிப்படை யாகவோ சம்பந்தம் வைத்திருப்பே னேயானால் அவை அவ்வளவு வெற்றி கரமாக முடியும் என்று இருக்காது. மக்கள் ஏமாற்றப்பட்டே போயிருப் பார்கள்.
விடுதலை பல நேரங்களில் சந்தித்திருக்கிறது. அவ்வப்பொழுது சில பேருக்கு காழ்ப்புணர்ச்சி, சங் கடங்கள் வருகிறது. எப்பொழுது அவர்களால் தாக்குப்பிடிக்க முடிய வில்லையோ அப்பொழுது வெளியே போய்விடுகிறார்கள்.
ஏன் தாடி வைத்திருக்கிறீர்கள்?
போகிறவன் சும்மா போவதில்லை. ஏன் வந்துவிட்டீர்கள் என்று கேட்டால் ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து சொல்லுவான். தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக் கின்றார்.
நான் சமாதானம் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்னொரு இடத்திலே சொல்லு கிறார். நீ ஏன் தாடி வைத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்டான். நான் உடனே பதில் சொன்னேன். முளைக் கிறது. அதனாலே வைத்திருக்கிறேன். இது என்ன பெரிய கேள்வியா? (கைதட்டல்). நான் பேசின விசயத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் எடுத்துக் கேள். அதைப் பற்றித்தான் நான் சொல்ல வேண்டும் என்று நினைத் தேன். அதனால் சில குற்றச்சாட்டுகள் வந்தால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்.
சொல்லவேண்டியவர்களுக்கு விளக்கம் சொல்லுவார். பதில் சொன் னால் எதிரி வளர்ந்து விடுவான் என்பது அவருக்குத் தெரியும். சில நேரங்களில் நினைக்கலாம். என்னய்யா விடுதலை யில் இதற்கு உடனே பதில் வரவில் லையே என்று ஆனால் நாங்கள் பெரியாரின் அந்த அணுகுமுறையை வைத்துக் கொண்டு பார்க்கும்பொழுது எதிரிகள் எங்களை சீண்டி வளர்ந்து விடுவதற்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
விடுதலையின் வரலாற்றின் எத்தனையோ சம்பவங்களும், நிகழ்வுகளும் உண்டு.
உண்மைப் பெயரைச் சொல்லாமல்
பெரியார் சொல்லுகிறார். மேற் கண்ட மூன்று மாநாடுகளைக் கூட்டிய வர்களின் எண்ணம் கைகூடாமல் போனதற்கு காரணம் என்னவென்றால் அம்மூன்று கூட்டத்தாரும் தமிழர் பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற ஆரம்பித்ததால் தோல்வி அடைந்தார்களே ஒழிய அவர்கள் கூட்டிய மாநாட்டின் உண்மைப் பெயர்களைச் சொல்லி காட்டியிருப் பார்களேயானால் ஆட்சேபணையே இருக்காது என்று அய்யா சொல்லு கிறார்.
மதத்தைப் பரப்புகிறவன். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவன் தமிழர் மாநாடு என்று பெயர் போடுகிறான். அந்த காலத்திலே அப்படி வந்தார்கள்.
அரசியலில் பிழைக்கிறவர்கள்
இந்த காலத்தில் அரசியலில் பிழைக்கிறவர்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திராவிடத்தால் வீழ்ந் தோம். திராவிடர் என்று சொல்லக் கூடாது என்று இப்படிச் சொன்னால் அவர்களுக்குத் தாயை அடையாளம் தெரியவில்லை என்பதுதான் பொருளே. தவிர வேறு ஒன்றும் இல்லை. (கைதட்டல்).
திராவிடர் கழகம், தந்தை பெரியார் தனது இயக்கத்திற்குப் பெயர் வைத்தார். சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்க முடியுமா? திராவிடர் என்று பெயர் வைத்தால் தான் பார்ப்பான் உள்ளே நுழைய முடியாது என்பது பெரியாருக்குத் தெரியும்.
புத்தருக்கு ஏற்பட்ட ஆபத்து
இந்த நாட்டில் பார்ப்பனர் பிரவே சிக்க முடியாத ஒரு அமைப்பாக இருக்கிற காரணத்தால்தான் புத்தருக் கும், புத்த மார்க்கத்திற்கும் ஏற்பட்ட ஆபத்து திராவிடர் கழகத்திற்கோ, பெரியார் கொள்கைக்கோ ஒரு போதும் வராது. (கைதட்டல்).
பெரியார் கொள்கையைப் பாதுகாப்பதே
இனிமேல் நாம் பெரியார் கொள் கையைப் பரப்ப வேண்டும் என்பதை விட, நமது ஆயுதம் எதற்குப் பயன்பட வேண்டுமென்றால் பெரியார் கொள் கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆயுதம் பயன்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய நிலை.
நமது பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களைப் பாருங்கள். உலக அளவிலே இதை கொண்டு செலுத்த வேண்டும். அதற்குத் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையிலே நீங்கள் எவ்வளவு உற்சாக மாக இருந்தாலும் ஏராளமான பேச்சாளர்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். தோழர்கள் தமிழ்நாட்டிலே தெரு முனைப் பிரச்சாரம் உள்பட தொடர்ந்து நீங்கள் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.
அடுத்து அனைத்திந்திய களம்
அடுத்த களம் நம்முடைய களம். அனைத்திந்திய களமாக இருக்க வேண்டும். சமூகநீதியிலே மூட நம்பிக்கை ஒழிப்பிலே, ஜாதி ஒழிப் பிலே, மதவெறி ஒழிப்பிலே இத்த னையும் செய்ய வேண்டும்.
அதையும் தாண்டி உலகளாவிய நிலையில் பெரியாருடைய கொள்கை பரவவேண்டும். சுயமரியாதை இயக் கத்தை தோற்றுவித்தது ஏன் என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதி யிருக்கின்ற அந்த கருத்திலே அழகாக தந்தை பெரியார் அவர்கள் சொல்லு கின்றார். இது ஒரு குறுகிய நோக்கத் தோடு ஒரு வட்டாரத்திற்காகத் தொடங்கப்பட்ட இயக்கமல்ல.
உலக மானிடத்திற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம்
உலக மானிடத்திற்காகத் தொடங் கப்பட்ட இயக்கம். இது ஒரு மானிட இயக்கம் என்று அற்புதமாகச் சொல்லு கிறார்கள். எனவே மனிதர்களிடையே பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண் டும். சிந்தனைக்கு விலங்கு போடக் கூடிய நிலை மாற வேண்டும். மனித சமுதாயத்திலே மிகப்பெரிய மாற் றத்தை உருவாக்கக்கூடிய அளவிலே செய்து ஒரு பெரிய சமுதாயப் புரட் சியை உருவாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மத உதாரணம் தவறாக இருக்க லாம். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஏசு-கிறிஸ்து
ஏசுநாதர் கிறிஸ்த்துவ மதத்தை இன்றைக்கு மிகப் பெரிய அளவுக்குக் காட்டுகிறார்கள். உலகம் பூராவும்  கொண்டாடக் கூடிய அளவுக்கு இருக்கிறதே.
அது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கையாக இருந்தாலும், எல்லோ ரும் ஒரே மாதிரியாகப் பரப்பியிருக்கி றார்களே. ஏசுநாதர் செய்ததைவிட அவருடைய தொண்டர்கள் தானே செய்திருக்கிறார்கள். அதைப் பரப்பிய வர்கள் அவர்கள்தானே.!
யார் அதிகமாக முத்தம் கொடுக்கின்றானோ
ஒருவன் முத்தம் கொடுத்தான். யார் தன்னை அதிகமாக முத்தம் கொடுக் கிறார்களோ அவர்களிடம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். பெரியார் அவர்களுடைய காலத்தி லிருந்து நாம் பார்த்திருக்கிறோம். பதின்மூன்றாவது சீடனை அடையா ளம் தெரியவில்லை என்று சொன்ன வுடனே  என்ன செய்தார்கள்?
அடையாளம் எப்படி கண்டு பிடிக்கிறது என்று கேட்டார்கள். இது கதையா? நடந்ததா? என்றால் தத்துவம் முக்கியம். நான் யாரைத் தழுவி கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கின்றேனோ அவர்தான் என்று தெரிந்துகொள் ளுங்கள். அவரை கைது பண்ணுங்கள் என்று சொன்னார்.
எச்சரிக்கையாக இருங்கள்!
அதே மாதிரி நம்மைக் கட்டித் தழுவுகிறவர்களிடமும் நீங்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
ஆரியம் நேரடியாக வராது. (கைதட்டல்). பல யூதாஸ்களைத் தயாரித்துக் கொண்டு வரும். அதையும் எல்லா கோணங்களிலும் அடை யாளம் காணவேண்டும்.
அனைத்து ஜாதியினர் நீதிமன்றத்தில்
எல்லா திசைகளை நோக்கியும்  நமது விழிகள் அகலமாக விரிந்து செயல்பட வேண்டிய கட்டம் இருக் கிறது. ஆகவே நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன.
ஜாதி ஒழிப்பிற்காக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் வழக்கு இன்ன மும் நீதிமன்றங்களிலே நிலுவையில் இருக்கிறது. ஆனால் இதுவரை நாம் எடுத்த சமூகநீதிக்கொள்கை எதுவும் தோற்றுப் போகவில்லை. ஜாதி ஒழிப்பு தோற்காது. அதற்கான முயற்சிகளை நாம் எடுப்போம்.
அதற்கெல்லாம் தூண்டுகோல். அதற்கெல்லாம் மூலாதாரம் எங்கே யிருக்கிறது. என்றால் நம்முடைய இயக்கத்தில் அந்த இயக்கத்தினுடைய ஒரு கருவியாகத்தான் கருத்தைப் பரப்பக்கூடிய ஏடாகத்தான் விடுதலை அமைந்திருக்கிறது.
எனவே விடுதலை மிகப்பெரிய அளவுக்குப் பரவ வேண்டும். பல கருத் தாழமிக்க புதிய பகுதிகள் விடுதலை யிலே சேர்க்கப்படும்.
இனி பெரும்பகுதி விடுதலை அலுவலகத்தில்
என்னைப் பொறுத்தவரையிலே நான் சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துகிற நேரத்திலே கவிஞர் அவர்கள் விடுதலையை ஓரளவுக்குப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவரும் வெளியே போக வேண்டி யிருக்கிறது. மற்றத் தோழர்களும் போக வேண்டிய நிலையிலே முன்பு இருந்ததை விட ஏனென்றால் ஏராள மான அளவுக்கு சந்தாக்களைச் சேர்த்து அதனுடைய தரம்-நிலை-பணி இவை அத்தனையையும் இன்னும் அதிகப் படுத்த வேண்டும் என்று சொன்னால் நான் இனி என்னுடைய நேரத்திலே மிகப்பெரும் பகுதியை விடுதலை அலுவலகத்திலேயே கழிப்பேன் என்பதை உங்களுக்கு  மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு (கைதட்டல்). அதற்கு நீங்கள் கொஞ்சம் ஒத்து ழைப்புத் தரவேண்டும்.
ஒத்துழைப்புத் தரவேண்டுமென் றால் வேறு ஒன்றும் நான் உங்களிடம் கேட்கவில்லை. கொஞ்சம் இங்கே வேலை செய்யவிடவேண்டும். இங்கே தங்கி இருக்கும் படியாகச் செய்ய வேண்டும்.
ஒரு அனுபவம்
நமது தோழர்கள் வருவார்கள். வழக்கமாக எனக்கு  ஏற்படுகின்ற ஒரு அனுபவம். நேரம் ஆகிவிட்டது. சுருக்கமாகச் சொல்கிறேன். அய்யா நீங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும். (சிரிப்பு). நீங்கள் ரொம்ப அலைகிறீர்கள். நீங்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது.
நீங்கள் ஒரு மாதத்திற்கு எங் கெங்கோ போய்க்கொண்டு வரு கிறீர்கள். அப்படி அலைய வேண்டாம் என்று சொல்லிவிட்டு எங்கவீட்டுக்கு ஒரு கல்யாணத்திற்கு வரவேண்டும். எங்க ஊருக்கு வரவேண்டும். (கைதட் டல்).
அய்யா முதல் நாள் நான் கன்னியாகுமரியில் இருக்கின்றேனே எப்படி என்று கேட்பேன். இருந் தாலும் எங்க வீட்டில் இதுதான் கடைசி கல்யாணம் அல்லது இதுதான் எங்கள் வீட்டில் முதல் கல்யாணம். எதிரிகளுக்கு இதுதான் பிரச்சாரம் என்று சொல்லி தேதி கேட்பார்கள்.  நான் மாற்றி மறுப்பு சொல்ல முடியாது.
தலைமை நிலையமே பொறுப்பு
இதை எல்லாம் பார்த்துவிட்டு தலைமை நிலையமே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு விட்டது. நீங்கள் பாட்டுக்கு சுற்றுப் பயண தேதிகளை ஒத்துக்கொள்கிறீர் கள். அதை நாங்கள் ஒழுங்குப்படுத்து கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
இருந்தாலும் தோழர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். தோழர்கள் ஒத்துழைத்து அதிக நேரத்தை, அதிக நாளை விடுதலை அலுவலகத்திலே இருந்து நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன்.
புத்தகங்கள் எழுதி வெளியே வரவேண்டும். இப்பொழுது நிறைய ஆய்வுகள் வந்திருக்கிறது. அந்த ஆய்வுகளை எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது மிக, மிக முக்கியம்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் வரலாற்று ரீதியாக பல பேராசிரியர்கள் கிடைத்திருக் கிறார்கள். அந்தப் பணிகள் நடக்கிறது. இன்னொரு மிக முக்கியமான பணி.
கவிஞர், மற்றத் தோழர்கள் மத்தியிலே நாங்கள் பேசினோம். என்ன அந்தப் பணி நேரத்தின் நெருக்கடி யினாலே விரிவாக அதைப் பற்றிச் சொல்ல முடியவில்லை.
பெரியாரின் கருத்துகள் திரிபுவாதம்
இருந்தாலும் உங்களுக்குச் சொல்லு கின்றேன். இப்பொழுது அய்யா அவர்களுடைய கருத்தை திரிபுவாதம் செய்யக்கூடியவர்கள் ஏராளம். வரலாற்றில் அய்யா அவர் களுடைய பகுதியை மறைக்கக்கூடிய வர்கள். பெரியாருக்கும்-வைக்கத் திற்கும் சம்பந்தமில்லை என்று கூட பார்ப்பான் எழுதுகிறான்.
வைக்கம் வீரர் என்று திரு.வி.க. அவர்களாலே அழைக்கப்பட்ட வர லாறு உண்டு. நமது காலத்திலேயே இப்படி எழுதுகிறார்கள். நமது காலத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
பெரியார் ஆய்வுப் புலம்
ஆகவே இவை அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதற் காகத்தான் ஒரு அமைப்பை அதிகார பூர்வமாக ஒரு ஸ்திரமான நிலையை உருவாக்க வேண்டும். பெரியார் ஆய்வுப் புலம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இருக்கின் றோம். (கைதட்டல்). அதற்கு வாழ்நாள் முழுவதும் பெரியாரின் மாணவர் களாக நினைத்துக்கொண்டிருக்கின்ற எங்களைப் போன்றவர்கள் அந்தப் பணியை செய்வோம். பெரியாருடைய கொள்கையைப் பரப்புவது மட்டு மல்ல. பெரியாரைப் பற்றிய குற்றச் சாற்றுகளுக்குப் பதில் சொல்லுவது-பெரியாரைப்பற்றிய திரிபுவாதங் களுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
-(தொடரும்).


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...