Wednesday, November 30, 2011

கோவில் கோபுரம் கோவிந்தா!


கலசம் இடிந்து விழுந்தது
காஞ்சீபுரம், நவ.30- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உட்பிரகார கோபுர கலசம் இடிந்து விழுந்தது. இது உலகப் புகழ்பெற்றது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
உலக நாடுகளிலிருந்து பக்தர்கள் காஞ்சி புரத்தில் உள்ள  ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து செல்கின்றனராம். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. இக் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு சிவகாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரநாதர், இறைவியின் பெயர் ஏலவார்குழலியம்மையாம்.
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள மாமரம் 3500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.
கலசம் உடைந்து விழுந்தது
பல சிறப்புகளையும், புகழ்களையும் பெற்ற இந்த கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கோபுரம் ஒன்றின் கலசம் (4 ஆவது கலசம்) திடீர் என்று உடைந்து விழுந்தது.
தன்னுடைய கோபுரத்தின் கலசத்தையே காக்க முடியாத கடவுளின் சக்தியை என்னவென்று சொல்வது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...