Thursday, November 24, 2011

வடமொழியில் சிபாரிசா?


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று
தமிழறி குன்றக் குடியார்
ஒரு சொல்லால் ஒரு சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடிவந்தார் பார்ப்பனர்கள்
சிறைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?


- புரட்சிக் கவிஞர்
குயில் புதுச்சேரி, 12-8-1958

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...