Monday, October 17, 2011

புளுகடா!


கடவுளர் நம்பிக்கைக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. கணினி உலகம் காரண காரியத்தைத் தேடி அலைகிறது. இனியும் கடவுள் - பத்து அவதாரம் எடுத்தது என்கிற புனை சுருட்டுகள் எடுபடாது.
பூமியைப் பாயாகச் சுருட்டி இரண்யாட்சதன் கடலில் வீழ்ந்தான்; மகா விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துக் கடலில் மூழ்கிப் பூமியை மீட்டான் என்று சொன்னால் சிறுவன் கூட சிலேட்டுப் பலகையால் அடிப்பான்.
என்றாலும் முடிந்தவரை பார்ப்போம் - கடவுளை எப்படியும் காப்பாற்றுவோம் என்று தினமணி வைத்தி கள் புறப்பட்டு விட்டார்கள்.
கடவுளும், மதமும் கெட் டாக வேண்டுமானால் பார்ப் பான் கெட்டாக வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இட மாகும் (விடுதலை 24.4.1967) என்றார் பெரியார்.
பார்ப்பான் பிராமணனாக திமிரோடு வாழ வேண்டும் என்றால் இந்தக் கடவுள் எண்ணம் கெட்டிப் பட்டாக வேண்டும்.
கோயிலுக்குள் கடவுள் இருக்கிறது என்றும், அந்தக் கடவுளோடு தொட்டுப்பழகும்  கூடிக் குலவும் தனி உரிமை தங்களுக்கு மட்டுமே இருக் கிறது என்றும் பார்ப்பான் விடாப் பிடியாய்க் கட்டிக் கொண்டு அழுவதில் உள்ள ரகசியம் இதுதான்.
கடவுளை நேரில் கண்ட வர்கள் என்று தினமணி (14.10.2011) ஒரு பட்டியலை வெளியிடுகிறது.
கடவுள் பற்றிச் சொல்லும் போது கண்டவர் விண்டிலர்,  விண்டவர் கண்டிலர் என்று தானே இதுவரை சொல்லி வந்தார்கள். அப்படி இருக் கும்போது கடவுளைக் கண்ட வர்கள் என்று இராம கிருஷ் ணரையும், இராமலிங்க அடிகளாரையும், அரவிந்த ரையும் எடுத்துக்காட்டு வானேன் தொடக்கமே மோசடியல்லவா!
திருவொற்றியூரில் குடி கொண்டுள்ள வடிவுடை அம்மனை இராமலிங்கனார் கண்டாராம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பிற் காலத்தில் கடவுள் உருவம் உடையவர் என்பதெல்லாம் பிள்ளை விளையாட்டு என்று எப்படிக் கூறுவார் வடலூரார்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென் றால், அவைகளில் ஒன்றி லாவது குழுக் குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங் கவியச் செல்லாமல் மண்ணைப் போட்டு மறைந்து விட்டார் கள். அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும், வைகுண்டபதி என்றும், சத்தியலோகபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலி யவையும் ஒரு மனுஷனுக்கு அமைப்பதுபோல் அமைத்து  உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் - தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக் கிறார்கள் என்று பேரு பதேசத்தில் உருவக் கட வுளைத் தோல் உரிக்கிறார் வடலூர் வள்ளலார் - அப்படிப்பட்டவர் திருவொற் றியூர் வடிவுடை அம்மனைக் கண்டவர் என்று தினமணி எழுதுவதற்குப் பித்தலாட்டப் பலமேயன்றி வேறு என்ன வாம்?
-மயிலாடன்

1 comment:

அம்பலத்தார் said...

கடவுள் இருக்கிறார், இல்லை எனும் விவாதங்கள் முடிவிலியாக நீண்டுகொண்டேபோகும். அதைவிடுத்து கடவுளின் பெயாரால் நடக்கும் அக்கிரமங்களையும், கடவுளின்பெயரால் ஒருமனிதரை மற்றுமொரு மனிதன் அடக்கி ஒடுக்குவதையும் வெளிக்கொணர்ந்து மக்களை விழிப்படையச் செய்வதே சிறந்தது என நினைக்கிறேன்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...