Thursday, September 29, 2011

இழுத்து வாருங்கள், அந்த சாமியாரை!


இழுத்து வாருங்கள், அந்த சாமியாரை!




பவுத்த மார்க்கத் திலோ, சமண சமயத் திலோ சொல்லப்படும் நிர்வாணம் என்பது வேறு. இந்து மத நிர்வாணம் என்பது உடம்பில் துணி அறவேயின்றி நிற்கும் கேவலம்!

நிர்வாணமாக ஓடி னால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற மூடநம் பிக்கைகள் உண்டு இம்மதத்தில்.

சென்னை - பல்லாவரத்தில் நள் ளிரவில் ஒரு பெண் நிர்வாணமாக ஓடி வந்தாள். எல்லோருக் கும் அதிர்ச்சி!

மகளிர் காவல் துறைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டு, அந்தப் பெண் காவல் நிலையத் திற்குக் கொண்டு செல் லப்பட்டு, உடை அணிவிக் கப்பட்டாள். (வாழ்க மகளிர் காவல் நிலையம்)

இந்தப் பெண் ஏன் நிர்வாணமாக - அம் மணக்குண்டியாக ஓடி னாள்? அதில் இருக்கும் இரகசியம்தான்  அதி முக்கியமானது.

திருவண்ணாமலையை யடுத்த செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரேவதி (வயது 25) அந்தவூரைச் சேர்ந்த இராமச்சந்திரன் அந்தப் பெண்ணின் காதலர். இந்தக் காதல் முறிவில் முடிந்தது. எந்தப் பிரச் சினையிலும் ஆண்களை விட பெண்கள் உறுதி யாக இருப்பார்களே!

காதலனை எப்படியும் அடைந்தே தீருவது என் பதில் அந்தப் பெண் மிக உறுதியாகவே இருந் தாள். என்ன செய்யலாம் என்று கடுமையாக யோசனை.

எந்த சாமியாரையா வது அணுகினால் வழி பிறக்கும் என்று கூறப் படவே ஒரு சாமியாரை அணுகினாள். (சாமியா ரிடம் நிர்வாணமாக  அந் தப் பெண் செல்லாத வரைத் தப்பித்தாள்!) அந்தச் சாமியார் கொடுத்த யோசனை (Idea) தான் நள்ளிரவில் நிர்வாண மாக சென்றால் காதலன் கிடைப்பார் என்பது!

உள்ளூரில் - அதுவும் கிராமத்தில் நிர்வாண மாக செல்ல முடியுமா? அது பெரும் பிரச்சினை யாகி விடுமே!

யோசித்தாள் ரேவதி.  ரேவதியின் அக்காள் சென்னை  பொழிச்சலூ ரில் இருக்கிறாள்;  திட் டத்தை அந்தப் பகுதியில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு இந்த ரேவதி நிர்வாணமாக நள்ளிரவில் நடந்து வந்தாளாம். ரோந்து வந்த காவல்துறை ஆய்வாளர் இராசேந்திரன் முயற்சி யால், பெண் காவல்துறையினர் அந்தப் பெண்ணை அழைத்து ஆடை கொடுத்து உடுத்தச் செய்துள்ளனர்.

இப்பொழுது வழக்கு வேறு பக்கம் திரும்பி விட்டது? யார் அந்த சாமியார்? பெண்ணை ஆபாசமாக - முழு நிர் வாணமாக நடந்து போகச் சொன்ன அந்த நாசகார சாமியார் யார்? என்ற கோணத்தில் காவல்துறை அந்தச் சாமியாரைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள் ளது. (நம் காவல் துறைக்கு என்னென்ன வேலைகள் பார்த்தீர் களா?)

ஆந்திராவில் மங்கம் மாள் என்ற சாமியாரிணி நீதிமன்றத்திற்கே நிர்வாணமாக வந்தாள் என்பதெல்லாம் பழைய கதை!

நிர்வாண சாமியார் கள் வடநாட்டில் என்ப தெல்லாம் சர்வ சாதா ரணம்!

தமிழ்நாட்டில் ஜைன சாமியார்கள் நிர்வாண மாக வருவதையே நாம் அனுமதிப்பதில்லை - திராவிடர் கழகத் தோழர் கள் ஆங்காங்கே விரட் டியடித்துள்ளனர்.

பக்தர்கள் - ஆன்மீக சிரோன்மணிகள் ஒன் றைக் கவனிக்க வேண் டும். ஒரு பெண் நிர்வாண மாக துணிந்து செல்லும் அளவுக்கு மதக் கிறுக்குத்தனம் - சாமியார்தனம் இருக் கிறதே - இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்றும் கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்புகிறவன் அயோக்கியன், வணங் குகிறவன் காட்டு மிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன் னதும் - இன்றுவரை திராவிடர் கழகம் இவற் றைப் பரப்பி வருவதும் எவ்வளவுப் பெரிய மகத் தான உண்மை என் பதை நிர்வாண ரேவதி களைப் பார்த்த பிறகா வது சிந்திக்க வேண் டாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...