Saturday, September 17, 2011

சரஸ்வதி பூசை அறிவுக் கொவ்வாமுறை


[சரஸ்வதி பூஜை என்பது பற்றி 20 ஆண்டுகளுக்கு முன் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இன்றைய நிலைமைக் கும் அச்சொற் பொழிவு பொருத்த மானதாக இருப்பதால், மக்களின் மூடநம்பிக்கையைப் போக்க இது பெரிதும் உதவியாயிருப்பதால் அதனை மீண்டும் வெளி யிடுகிறோம். - ஆர்]

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமி யையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,நாம். அந்தசாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி யெனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.

சரஸ்வதி உற்பவக்கதை

அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரமனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவளுடைய அழகைக்கண்டு அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்ப மனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக்கதை சொல்கிறது.

அதாவது பெற்றெடுத்த தன் தகப் பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்து, போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படு வதாகச் சொல்வதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூசை செய்து வந்த, நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்து பூசை செய்தேயறியாத வெள்ளையன் துப்பாக்கி முனை கண்டிடவில்லையா?

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரி களில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்புநிறை நிறுக்கா மலோ, குறைஅளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதுபோலவே, கைத் தொழி லாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகுபக்தியாய் அவைகளை சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து போட்டுவிழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாக  தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல் வதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.

அதுபோலவே, புத்தகங்களையும், பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் வைத்து சந்தனப் பொட்டு இட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களேயல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரஸ்வதி பூசை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குக் குடிபோகின்றார்கள்?

அது நிற்க, வருடா வருடம் சரஸ்வதி பூசை செய்துவரும் நம் நாட்டில், நம் மக்களில் 5 பேர்களே படித்திருக் கிறார்கள். அதிலும், சரஸ்வதியின் இனத்தைச் சேர்ந்த பெண்களில் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித் திருக்கிறார்கள். இதன் காரணமென்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் பிரமனால் உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு, அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு வெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின்தொடர்ந்து ஓடவும் சிவன் வேடன் உருவெடுத்து ஆண்மானைக் கொல் லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்ப வக்கதை பெற்றெடுத்த தன் தகப் பனையே மணந்து கொண்டவள் ஆகிறது.

மற்றொரு கதை சரஸ்வதியின் உற்பவத்தை குறித்து மற்றொரு கதையின்படி சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறது அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை  ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வ தியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ் வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.

எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் பார்ப்பன புராணப்படி மிக்க ஆபாசமும் ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு சரஸ்வதி பூசை என்றும் ஆயுத பூசை என்றும் ஒரு நாளைக் குறித்துவைத்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி வைத்துப் பூசை செய்கிறார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந் திர சாலைக்காரர்கள் இயந்திரங்களை யும், மாணாக்கர் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகள் சேலை களையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இலட்சியத்துக்குப் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான் களை வைத்து பூசை செய்கிறார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய், பூஜை, ஓய்வு முதலிய ஆடம் பரங்களுக்காக விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வரு கிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள்? நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விசயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என் கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த மட்டில் இவை சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப் பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கிற எண்ணமோ அறவே இல்லை.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டு, கண்ணில் ஒத்திக் கொண்டும் வருகிறோம். நமக்கு கல்வி இல்லை ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர் களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண் கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு மானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்திவாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதை யோசித்துப்பாருங்கள்.

யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால், அதை பூசை செய்யும் நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாதும் சரஸ்வதி பூசை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்தரத்துடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள்.

இந்த பூசையின் மூலம் நமது முட் டாள் தனம் எவ்வளவு வெளியா கின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி சுண்டல் வடை, மேளவாத்தியம்,  பார்ப்பனர்களுக்கு தட்சனை சமாராதனை, ஊர்விட்டு ஊர்போய் ரயில் சார்ஜ் ஆகிய இவை எவ்வளவு செலவாகிறது.

இவை எல்லாம் யார் வீட்டுப் பணமா? நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறு மானது என்று கணக்கு பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவ புராணிய அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொரு ளாதார இந்திய தேசீய நிபுணரும் கணக்குப்பார்த்ததே இல்லை.
(விடுதலை 13.10.1950)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...