Thursday, September 15, 2011

அ.தி.மு.க. கூறும் உழவர் பாதுகாப்புத் திட்டம் கலைஞர் கருத்து

அ.தி.மு.க. கூறும் உழவர் பாதுகாப்புத் திட்டம் கலைஞர் கருத்து

சென்னை, செப். 15- உழவர் பாதுகாப்புத் திட் டம் என்று பெயர்தான் மாறியிருக்கிறது என்றும், சலுகைகளில் பெரிய வேறுபாடு இல்லை என் றும் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கலை ஞர் கேள்வி-பதிலாகக் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- 10.9.2011 அன்று பேரவையில் 110 ஆவது விதியின் கீழ் முதல் -அமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தமி ழக விவசாயிகள்-விவ சாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உறு துணையாக இருக்கும் வகையில் முதலமைச்ச ரின் உழவர் பாதுகாப் புத் திட்டம் செயல்படுத் தப்படும் என்று அறிவித் திருக்கிறாரே?.

பதில்:- இந்த திட் டம், புதிய திட்டம் அல்ல. புதிய திட்டம் என்று முதல்-அமைச்சரும் அறிவிக்கவில்லை. அவ ருடைய அறிவிப்பி லேயே - அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்திலே 15-8-2005 அன்று முதலமைச் சரின் உழவர் பாதுகாப் புத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது என் றும்;

2006ஆம் ஆண்டு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு இந்த திட்டத்திற்கு மாற்றாக தமிழ் நாடு விவசாயத் தொழி லாளர்கள் - விவசாயிகள் சட்டம் என்ற ஒரு சட் டத்தை இயற்றியது என் றும்; மெஜாரிட்டி அ.தி. மு.க. அரசின் சார்பில் ஜெயலலிதா சொல்லி யிருக்கிறார்.

இதிலே ஜெயலலிதா மறைத்திருக்கின்ற உண் மை-தமிழக விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன் காக்க 2000ஆம் ஆண்டிலேயே தி.மு.க. அரசால் தமிழ்நாடு விவ சாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கப் பட்டு விட்டது.

அடுத்து வந்த ஜெயலலிதா அரசு, விவசாய தொழிலாளர் நல வாரியத்தை கலைத்து விட்டுத்தான் உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்தது. எனவே 2006ஆம் ஆண்டு மீண் டும் தி.மு.க. அரசு அமைந் தவுடன் 2-9-2006 அன்று சட்டப்பேரவையில் "தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நலச் சட்டம்'' நிறைவேற்றப் பட்டது.

அந்த சட்டத்தைத் தான் ஜெயலலிதா அரசு ரத்து செய்துவிட்டு மீண் டும் உழவர் பாதுகாப்பு திட்டத்தை செயல் படுத்த போவதாக அறி வித்திருக்கிறார்கள். பெயர்தான் மாற்றத் திற்கு உள்ளாகியிருக் கிறதே தவிர, சலுகைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

கேள்வி:- ஆதிதிரா விடர் நலத்துறைக்கு முக் கியத்துவம் கொடுத்து தனியாக மானிய கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலபாரதி பேர வையில் நன்றி தெரிவித் துப்பேசியதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்:- 1969இல் நான் முதல்வராக பொறுப் பேற்றவுடன்தான் ஆதி திராவிடர்-பழங்குடி யினர் நலனுக்கு "தனி இயக்குநர் அலுவலகம்'' அமைக்கப்பட்டது. பின் ஆதிதிராவிடர் நலனி லும், பழங்குடியினர் நல னிலும் தனித்தனியே சிறப்பு கவனம் செலுத் திட வேண்டும் என்பதற் காக 2000ஆம் ஆண்டில், ஆதிதிராவிடர் - பழங் குடியினர் நல இயக்க கத்தை "ஆதிதிராவிடர் நல இயக்ககம்'', "பழங் குடியினர் நல இயக்ககம்'' என இரண்டு தனித்தனி இயக்குநர்களின் கீழ் செயல்பட வழிவகுக்கப் பட்டதும் என்னுடைய ஆட்சிக்காலத்திலேதான்.

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றியெல்லாம் அவையிலே அந்தத் துறை யின் அமைச்சர் சில புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 1991-1996 அய்ந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக் காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 லட்சம் ரூபாய் மட் டுமே!.

ஆனால், 1996-2001 அய்ந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்; 2001-2006 அய்ந்து ஆண்டுகால அ.தி. மு.க. ஆட்சியில் முந் தைய தி.மு.க. அரசைவிட வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே கூடுத லாக ஒதுக்கீடு செய்து; அய்ந்து ஆண்டுகளிலும் மொத்தம் அனுமதிக்கப் பட்ட தொகை ரூபாய் 2 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே!. ஆனால், 2006-2011 அய்ந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஆதி திராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்; இது, முந்தைய அ.தி.மு.க. அரசு அய்ந்து ஆண்டுகளில் அனுமதித்த தொகை யைவிட 8 ஆயிரத்து 847 கோடி ரூபாய் அதிகமாகும்.

அதிலும், தமிழகத் தில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் - மலை வாழ் இன மக்களின் விகிதாசாச்ரத்திற்கேற்ப 2010-2011 வரவு செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக் கீட்டில் 19.7 சதவீதம் தொகையை ஆதிதிராவி டர், மலைவாழ் இன மக்கள் மேம்பாட்டு திட் டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வரலாறு படைத் துள்ளதும் தி.மு.க. அரசே!. இந்த விவரங்கள் எல் லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாட மாகி விட்டதே என்பது தான் நமது கவலை!.

கேள்வி:- முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது விசாரணை ஆணை யம் அமைக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு உறுப்பினர் சவுந்தரராசன் பேரவை யில் கேட்டிருக்கிறாரே?.

பதில்:- நான் முதல மைச்சராக இருந்த போதும் இப்படித்தான் அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் நேரில் என்னை சந்தித்து சிறுதாவூரில் ஜெயலலிதாவும், அவ ருக்கு வேண்டியவர்க ளும் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட இடங் களையெல்லாம் ஆக்கிர மித்துள்ளார்கள், அது பற்றி விசாரிக்க விசா ரணை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கேட் டார்கள்.

நானும் உட னடியாக விசாரணை ஆணையத்தை அறிவித் தேன். அந்த விசாரணை ஆணையமும் விசாரணை நடத்தி, தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தது.

ஆனால் மார்க்சிஸ்ட் கள் யார் மீது குற்றஞ் சாட்டினார்களோ, அவர் களையே உத்தமர்கள் என்று கூறி அவர்களோடு தோழமை கொள்ளச் சென்றதோடு, இப்போது எங்கள் மீது விசாரணை ஆணையம் எப்போது என்கிறார்கள்! இது காலத்தின் கோலமா? கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும்.

- இவ்வாறு கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...