Friday, September 23, 2011

குருக்கள் பார்ப்பானின் கொலை வெறி குழந்தையைக் கொன்ற கொடுமை


குடியாத்தம், செப்.23: குடியாத்தம் காளியம்மன்பட்டி ராஜிவ்நகரைச் சேர்ந்த ராஜா-அனிதா இணையரின் 5 வயது மகள் ராஜேஸ்வரியைக் கொலை செய்த குற்றத்துக்காக குமார் என்ற கோவில் குருக்கள் கைது செய்யப் பட்டுள்ளார்.
பாண்டியன் நகரில் உள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பி லிருந்து காணாமல்போய்விட்டார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பள்ளிக்கு அருகில் 100 அடி தூரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மஞ்சள் சாக்கு மூட்டையில் சிறுமி ராஜேஸ்வரியின் பிணம் கைப்பற்றப் பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.
காவல்துறை விசாரணை மேற் கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார் என்ற கோவில் குருக்கள் தலைமறைவானது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். சிறுமியைத் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி ராஜேஸ்வரி பள்ளியில் இருந்து சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது அவளுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள தனது வீட்டுக்கு குமார் அழைத்துச் சென்று, சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமி தன்னைப் பற்றி வெளியில் சொல்லிவிடுவாளோ என்ற  அச்சத்தில் சிறுமியை அவள் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டார்.
கடவுள் நம்பிக்கை கொண்ட, கோவிலில் பூஜை செய்யும் ஒரு குருக்கள், அய்ந்து வயதுப் பெண் குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று அக்குழந்தையையே கொலை செய்தார் என்றால், அவரது கடவுள் நம்பிக்கை எவ்வளவு பொய் யானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இத்தகைய கொடூர மனம் படைத்த விலங்குகள் கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்ந்து வருவதை நமது மக்கள் உணர்ந்துகொள்ளும் காலம் எப்போது வருமோ?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...