Tuesday, September 20, 2011

சிந்தனைத்-துளி-தந்தை-பெரியார்


உண்மை

  • புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிவது போன்றது.

  • மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே.

  • கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக் கூடாது?

  • மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான்.

  • மதக் கட்டளைகளையும் கடவுள் நம்பிக்கையையும் கொண்ட அடிமை ஒரு நாளும் விடுதலையடைய முடியாது.

  • மனிதனுக்கு வெட்கமும், ரோசமும் ஏற்படவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது.

  • மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடிக்கக் கூடாது.

  • கடவுள் என்று சொல்லப்படுவது உயர்குணப் பண்பே ஒழிய, அது ஒரு உருவமல்ல; வஸ்துவல்ல.

  • உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல; உங்கள் அறிவுதான்.

  • முன்னோர் சொல்லிப்போனது அற்புதமுமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிட்டு, உன் அறிவுக்கு முதலிடம் கொடு.

  • மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும்.

  • சர்வ சக்தியுள்ள கடவுளுக்கு, தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொள்ள தன் உருவத்தை விளக்க சக்தி இல்லை.

  • பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடு.

  • சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

  • பெண்கள், தங்களைப் பிறவி அடிமை என்று      நினைப்பதை மாற்ற வேண்டும்.

  • உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும் கீழ்ஜாதியாகத்தானே வாழ்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...