Friday, September 30, 2011

தேவை - புதுமைப் பெண்ணல்ல - புரட்சிப் பெண்!


தேவை - புதுமைப் பெண்ணல்ல - புரட்சிப் பெண்!


நல்ல சேதிதான். பெண் களுக்கு எதிரான குற்றங் கள் குறைந்துள்ளன என்பது ஒரு நல்ல சேதிதான்.
பொதுவாக பெண்கள் என்றால் பலகீனமானவர் கள் என்ற ஒரு கருத்து உண்டு. எதில் பலகீனம்? அறிவிலா? ஆற்றலிலா? அதெல்லாம் கட்டுக்கதை. தன்னந்தனியாக வாலண் டினா விண்ணில் பறந்து சாதனை படைக்க வில்லையா?
அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்கு? என்று சொன்னது அந்தக் காலம். பெண்களுக்குக் கல்வி கற்க வாசல் திறந்து விடப்பட்டதும் தேர்வுகளில் மாணவர்களைப் பெண்கள் விஞ்சி விட்டார்களே!
தசைப்பலம் (Muscle Power) என்ற ஒன்றில் மட்டும் பெண்கள் ஆண்களைவிட பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என் பது வேண்டுமானால் சிறிது உண்மையாக இருக்கலாம்.
அதற்குக் காரணம் பழைய தலைமுறைகள் தான். அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது தான்.
பெண்கள் குதித்து விளையாடினால்கூட தடிப்பையனா நீ? பெண் ணென்றால் அடக்கம். ஒடுக்கம் இருக்க வேண் டாமா? என்று சொல்வது கூட பெரும்பாலும் ஆண் கள் அல்லர் - பெண்கள் தான்.
பெண்களுக்குக் குஸ்தி மேல் குத்து போன்றவற் றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதை நினை வில் கொள்க!
இத்தகு சமூக சூழலில் பெண்கள் உடல்பலம் குன் றியவர்களாக இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? மூளைபலமாக இருந்தால் உடல் பலமும் கூட கூடிய வாய்ப்பு உண்டு. மூளையில்தான் ஒடுக்கும் ஆண்கள் என் னும் விலங்கு மாட்டப்பட் டுள்ளதே!
பெண் வீட்டார்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற நிலை எப்பொழுது வந்தது? ஆரியக் கலாச்சாரம் தலை தூக்கிய நிலையில்தானே?  வரம், தட்சணை என்ப தெல்லாம்கூட தமிழ்ச் சொற்கள் அல்லவே!
கல்வியோடுகூடிய, தன்னம்பிக்கைப் பயிற்சி கள், உடற்பயிற்சிகள் (கராத்தே முக்கியம்) பெண் களுக்குக் கொடுக்கப்பட் டால் ஆண்களின் தசைப் பலம் தோல்விப் படலமாக மாறி விடுமே! பெண்கள் தயாராகி விட்டார்கள் என் கிற ஒரு நிலை அரும் பினாலே போதுமானது. ஆண்கள் வாலைச் சுருட் டிக் கொள்ள மாட்டார்களா?
பெண்களுக்கு எதிரான வழக்குகள் 2005இல் 5791; 2011ஆம் ஆண்டிலோ அது 4036 ஆகக் குறைந்து போய்விட்டது.
இது வரவேற்கத்தக்க நிலை என்றாலும், பாதிக் கப்பட்ட பெண்களில் எத்தனைப் பேர் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் துணிவில் உள்ளனர் என்பதும் கேள் விக்குறிதான். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற ஒரு அருமையான சட்டம் அய்க் கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியில் இயற்றப் பட்டது.
பெண்ணுரிமை வரலாற் றில் நிச்சயமாக இது ஒரு மைல் கல்லே!
இதைக்கூட நல்ல வகை யில் நடுவண் அரசு பிரச் சாரம் செய்ததில்லையே!
பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் இலக் கியவாதிகள், கருத்தாளர் கள்கூட பாரதியாரைப் பற்றிப் பேசுவார்களே தவிர, புரட்சியாளர் தந்தை பெரி யார் பற்றிப் பேசுவதில் லையே! திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொல் வதுபோல பாரதியார் காண விரும்பியது புதுமைப் பெண் என்றால், தந்தை பெரியார் காண விரும்பி யது புரட்சிப் பெண்ணா யிற்றே!
இப்பொழுது தேவை புரட்சியே தவிர, புதுமையல்லவே!
(குறிப்பு: வாச்சாத்தி வழக்குபற்றி நாளை தலை யங்கம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...