Thursday, July 21, 2011

முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு

மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். -இனத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், கருத்தாலும். ஒருதாய் மக்கள் என்றாலும் ஒட்டிப் பிறந்தவர்கள் என்றாலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனி உடல், மூளை, சிந்தனை. எனவே, ஒருவருடைய கருத்திற்கும் மற்றவருடைய எண்ணத்திற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.

உண்மையில் முரண்பாடு என்பது இயல்பானதும், ஆரோக்கியமான உறவு முறைகளைக் கடைபிடிக்க வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுமாகும். ஆனால், முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும். அதை மரியாதைக்குரிய முறையிலும் நேர்மறையாகவும் கையாளும்போது வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருக்கும். மேலும், இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முரண்பாடுகளைக் கையாண்டு முடிவுக்குக் கொண்டுவரும் திறன்களைத் தெரிந்துகொண்டால் எந்தவொரு மாற்றுக் கருத்துகளையும் தைரியமாக எதிர்கொண்டு தனி வாழ்க்கையிலும், தொழில் சூழலிலும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சி காணலாம்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...