Friday, July 29, 2011

இந்துத்துவாவுக்கு எடுத்துக்காட்டு கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக மாநிலத்தில் 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து லோக் அயுக்தா விசாரணை ஒன்றை மேற்கொண்டது. அதற்கான 25 ஆயிரத்து 228 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கை கருநாடக மாநிலத் தலைமைச் செயலாளரிடம் நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

லோக் அயுக்தா தலைவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

முதல் அமைச்சர் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு சுரங்க நிதி நிறுவனம் ஒன்று நன்கொடையாக ரூ.10 கோடி வழங்கியுள்ளது. இதற்குக் கை மாறாக அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக மாநில அரசிடம் நிலுவையில் இருந்த கோப்புகள் அனுப்பப்பட்டு வேலை முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...