Thursday, July 21, 2011

பொறியியல் கல்லூரியும் - மாணவர் சேர்க்கையும்!

கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன் சிலிங்) நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கிட்டத் தட்ட 50 விழுக்காடு கலந்துரையாடல் முடியும் நிலையில் உள்ளது.

அதன்படி பார்த்தால் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், அருந்ததி பிரிவினருக்கான இடங்கள் அதிகம் காலியாக உள்ளன.

அருந்ததி பிரிவைச் சேர்ந்த 210 மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்த 17 ஆயிரத்து 928 மாணவர்களும், பழங்குடி (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 481 மாணவர்களும் விண்ணப்பித் திருந்தனர்.

இதில் அருந்ததி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இதுவரை 37 பேர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்தோர் 492 பேர்களும், பழங்குடியினர் (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 9 பேர்களும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இந்தப் பிரிவுக்கான பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பித்துள்ளவர்களில் 3 சதவிகித அளவுக்குக்கூட கல்லூரிகளில் சேர முன்வரவில்லை.

அதேநேரத்தில், முன்னேறிய பிரிவைச் சேர்ந்தவர் கள் போட்டியில், திறந்த போட்டியில் 7678 மாணவர்கள் இடங்களைப் பெற்றுள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...